அக்கா கொலை: தம்பி கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே திருமணமான நபருடன் ஏற்பட்ட பழக்கத்தை கைவிட மறுத்த அக்காவை, தம்பியே அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார்.
தேவர்குளம் அருகே தச்சிகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். இவரது மகள் ராதிகா 28. மகன் கண்ணன் 25 . ராதிகாவிற்கு திருமணம் ஆகவில்லை. அவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான நபருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ணன் கண்டித்து வந்த நிலையில், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை வீட்டில் இருவரும் இருந்தபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்ணன், அரிவாளால் ராதிகாவை சரமாரியாக வெட்டினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார். கண்ணனை தேவர்குளம் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் சாதனை: அஸ்வினி வைஷ்ணவ் மகிழ்ச்சி
-
இந்தியாவை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது: மத்திய வெளியுறவு அமைச்சர்
-
மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு; நீதிமன்ற சம்மனை புறக்கணித்த ராகுல்
-
ஜம்முகாஷ்மீர் லே லடாக் பகுதியில் திடீர் நிலநடுக்கம்; வீடுகளில் இருந்து பீதியில் ஓடிய மக்கள்
-
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர் வீர மரணம்
-
எந்த முகத்தை வைத்துக்கொண்டு புறப்பட்டீர்கள்; திமுகவுக்கு அண்ணாமலை காட்டமான கேள்வி
Advertisement
Advertisement