இன்று டில்லி வருகிறார் யு.ஏ.இ., அதிபர் அல் நயான்
புதுடில்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான், இன்று இந்தியா வருகிறார்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபராக முகமது பின் ஜாயத் அல் நயான், அரை நாள் பயணமாக இன்று டில்லி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே பொருளாதாரம், வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் உறுதியான ஒத்துழைப்பு நீடிக்கும் நிலையில், அல் நயானின் இந்திய வருகை எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் மத்தியில் அதிபர் அல் நயானின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வாசகர் கருத்து (10)
SUBBU,MADURAI - ,
19 ஜன,2026 - 15:45 Report Abuse
ஹாஜா பாய் நீங்கள் ஓவராக உணர்ச்சிவசப் படுகிறீர்கள். அரேபியர்களின் நெஞ்சில் இந்தியர்களுக்கு தனி இடமே உண்டு என்று நீங்கள் கூறுவது அனைவருக்கும் பொருந்தாது.
என்னை Interview பண்ணி வேலைக்கு எடுத்து நல்ல சம்பளம் கொடுத்த அராம்கோ (Aramco) கம்பெனியின் CEO நாசர் போன்றவர்களுக்கு மட்டுமே என் மனதில் தனி இடம் உண்டு. ஆனால் அவரைப் போன்றே
அனைத்து அரேபியர்களும் இந்தியர்களான
நம்மை மதம் பார்த்து பழக மாட்டார்கள் என்று நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் நான் வெள்ளிக் கிழமையன்று எனது விடுமுறையை கழிக்கும் விதமாக ஜோர்டான் மற்றும் சௌதியின் பார்டர் ஹாலத் அம்மார் என்ற இடத்திலிருந்து என் கம்பெனியின் காரில் பயணம் செய்தேன். அப்போது எதிர்பாரா விதமாக என் காரின் டயர் பஞ்சராகி நடு பாலைவனத்தில் நின்று விட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரேபியரின் காரை நிறுத்தி லிஃப்ட் கேட்டு அவரது காரில் பயணிக்கும் போது பேச்சுவாக்கில் அவர் என்னை அரேபிய மொழியில் ந்த ஃபி முஸ்லீம் (நீ முஸ்லீமா) என்று கேட்க நான் மாஃபி (இல்லை) என்று பதிலளித்தேன். அவர் உடனே காரை ஓரமாக நிறுத்தி எத்லா பர்றா (காரை விட்டு இறங்கு) என்று என்னை நடுவழியில் இறக்கி விட்டு போய் விட்டார். பிறகு ஒருவழியாக நான் ஒரு இந்திய டிரைவரின் காரில் ஏறி என் கம்பெனி வந்து சேர்ந்தேன். இந்த சம்பவத்தை நான் என் CEO விடம் சொல்லி ஆதங்கப் பட்டேன். அதற்கு அவர் எனக்கு சொன்ன புத்திமதி இனிமேல் யார் கேட்டாலும் (அய்வா
ஆன முஸ்லீம்) ஆமா நான் ஒரு முஸ்லீம் என்று கூறுங்கள், அதையும் மீறி அவர்கள் உங்கள் அக்கமாவை (Identity card) கேட்டால் கம்பெனியில் இருப்பதாக சொல்லி விடுங்கள் என்ற அறிவுரைதான்! 0
0
Reply
அப்பாவி - ,
19 ஜன,2026 - 09:27 Report Abuse
மன்னராட்சி வாரிசு ஆட்சி ஆளுங்க வராங்க. 0
0
Anand - chennai,இந்தியா
19 ஜன,2026 - 10:31Report Abuse
இங்கு கூட்டுக்களவாணி கட்சிகளில் மட்டும் என்ன வாழுதாம்? 0
0
Haja Kuthubdeen - ,
19 ஜன,2026 - 11:28Report Abuse
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும் கிழிக்கிறாங்களாக்கும். மன்னர் வாரிசு என்றாலும் அங்கும் தகுதி ஆளுமை அனைத்தும் பார்க்கிறார்கள்.மூத்த மகன் என்பதால் மட்டுமே மன்னராகி விடவும் முடியாது...இன்றைய அரசரும் மூத்த மகன் இல்லை. 0
0
Haja Kuthubdeen - ,
19 ஜன,2026 - 12:18Report Abuse
மன்னராட்சி நடக்கும் ஒமான்..புரூனை..சவூதி..ஐக்கிய எமிரேட்ஸ் வளத்துடன் வாழ்க்கை தரம் உயர்ந்து பணக்கார நாடுகளாகவும்.. எமன்.. சிரியா.. பங்ளாதேஸ்.. பாக்.. போன்ற மக்களாட்சி நாடுகள் வறுமையிலும் அமைதியின்றும் தவிப்பதை பாருங்கள். 0
0
Reply
DUBAI- Kovai Kalyana Raman - dubai,இந்தியா
19 ஜன,2026 - 09:08 Report Abuse
Welcome to INDIA our great UAE President .. INDIA and UAE very good friend . UAE local all are very kind and polite ..no proud we are locals.. Giving very good respect to all , Specially Indians.. Compare to other GCC like saudi and kuwait ..UAE is great country for Indians..100 % safe and nice country for us.. 0
0
Reply
SUBBU,MADURAI - ,
19 ஜன,2026 - 06:24 Report Abuse
இன்று நம் நாட்டிற்கு வருகை தரும் UAE நாட்டின் அதிபரான இந்த Sheikh Mohamed bin Zayed Al Nahyan என்பவர் இவரது சகோதரரின் மரணத்திற்கு பின் பதவிக்கு வந்தவர். பொதுவாகவே இவர்களுக்கு நம் இந்தியாவின் மீது பாசம் அதிகம். இவர்களின் அரச குடும்பம் நம் இந்தியாவிற்கு ஒருவகையில் நன்றிக்கடன் பட்டிருப்பது பலருக்கும் தெரியாது! ஏனென்றால் இவர்களின் குடும்ப வாரிசுகளில் ஒருவரான இளம் வயது பெண் ஒருவர் (பெயர் வேண்டாம்) தன்னுடன் படித்த நண்பர் ஒருவருடன் காதல்வயப்பட்டு கடல் மார்க்கமாக நமது பக்கத்து நாட்டிற்கு தப்பி செல்வதாக
நம் நாட்டின் பிரதமருக்கு ஹாட்லைன் மூலமாக தகவல் வந்தது. உடனே நம் பிரதமரின் உத்தரவின் பேரில் நமது கடற்படையின் கப்பல் மூலம் அதிகாரிகள் நீண்ட தேடுதலில் ஈடுபட்டு ஒருவழியாக நடுக்கடலில் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். உடனடியாக இந்த தகவல் நம் பிரதமருக்கு தெரிவிக்கப் பட்டது. இந்த விஷயம் வெளியில் கசியக் கூடாது என்றும் உடனே அவர்கள் இருவரையும் விமானத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு கொண்டு போய் விடுமாறு
உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அதன்படி அவர்கள் இருவரையும் நமது விமானப்படை விமானம் மூலம் ஏற்றி கொண்டு போய் பத்திரமாக அவர்களுடைய நாட்டில் இறக்கி விட்டு திரும்பியது நமது விமானம். இப்படியாக அந்த நாட்டு அரச பரம்பரையின் மானத்தை காப்பாற்றி சத்தமில்லாமல் சாதித்தது நமது இந்தியா. அந்த விசுவாசத்தினால்தான் வேறு எந்த அரபு நாடுகளையும் விட நமக்கு உற்ற நண்பனாகவும், ஆதரவு தரும் கூட்டாளியாகவும் இருக்கிறது இந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்கிற UAE! 0
0
Haja Kuthubdeen - ,
19 ஜன,2026 - 10:21Report Abuse
உள்காரணங்கள் இருக்கலாம். 1972ம் ஆண்டு முதலே நம் நாட்டிற்கு அரபுநாடுகளின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுவிட்டது. விசா.. போக்குவரத்து இல்லாத காலத்தில் கள்ள படகுகள் மூலம் சென்றனர் என்பதை சிறுவனா இருக்கும் போதே அறிவேன். வேடிக்கையான செய்தி அங்கே உலவும். துபாய் மண்ணரும் அவரின் சகாக்களும் கடல் எல்லையில் அமர்ந்து இருப்பார்களாம். போட்டுகளில் இருந்து இறங்கும் இந்தியர்களிடம் நீங்கள் எல்லாம் இந்திகளா.. உள்ளே போங்கள் என்று வாஞ்சையிடம் பேசுவாராம். அன்று தொடங்கிய நட்பு. இன்றைய அரபுநாடுகளின் அபரிமதமான வளர்ச்சிகளுக்கு இந்தியர்களின் உழைப்பும் முக்கியமான காரணம். அரபிகளின் நெஞ்சில் இந்தியர்களுக்கு தனி இடமே உண்டு. அலுவலகம் முதல் அவர்கள் வீட்டு பணிக்கு கூட நீ இந்தி. பாக்கிஸ்தான் என்று கேட்டே நம் நாட்டினரை பணி அமர்த்துவது நானே அறிவேன். என்ன மதம் ஜாதி இதற்கு இடமே இல்லை. என் அரபுநாட்டு வாழ்க்கையில் பல நூறு ஹிந்து நண்பர்களுடன் ஒன்றா சாப்பிட்டு ஒன்றா உறங்கிய காலங்கள் பொற்காலம். இப்பவரை அவர்கள் எந்த ஜாதி என்று கூட தெரியாது.. தெரிய அவசியமும் இல்லை... இங்கேதான் ஏச்சு பேச்சுக்களை வாங்க வேண்டி இருக்கு.. 0
0
Haja Kuthubdeen - ,
19 ஜன,2026 - 11:00Report Abuse
அண்பர்கள் அறியாத செய்தி..இன்றைய அதிபர் அவர்களின் தந்தையார் சேக் செயது பின் அல்நஹ்யான் அவர்கள் நோயுற்று மருத்துவ மனையில் இருந்த சமயம் அவரின் மனையார் இறைவனிடம் வேண்டிகொண்டு அவர் குணமடைய அபுதாபியில் பணிபுரிந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் போலீஸ்..ராணுவம் வரை அவர்கள் வாங்கும் ஒருமாத சம்பளத்தை இரண்டு மடங்காக தன் தனிப்பட்ட பணத்தில் வழங்கிய மாதரசி..அதில் பயன் அடைந்தவர்களில் அடியேனும் ஒருவன்...இதான் அரபுகளின் பண்பு...இவர்களையா எதுமே தெரியாதவர்கள் பாலைவனத்து மூர்க்கர்கள் என்கிறீர்கள்.வெட்க கேடு... 0
0
Reply
மேலும்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் சாதனை: அஸ்வினி வைஷ்ணவ் மகிழ்ச்சி
-
இந்தியாவை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது: மத்திய வெளியுறவு அமைச்சர்
-
மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு; நீதிமன்ற சம்மனை புறக்கணித்த ராகுல்
-
ஜம்முகாஷ்மீர் லே லடாக் பகுதியில் திடீர் நிலநடுக்கம்; வீடுகளில் இருந்து பீதியில் ஓடிய மக்கள்
-
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர் வீர மரணம்
-
எந்த முகத்தை வைத்துக்கொண்டு புறப்பட்டீர்கள்; திமுகவுக்கு அண்ணாமலை காட்டமான கேள்வி
Advertisement
Advertisement