தமிழக சட்டசபை கூட்டத்தொடர்; உரையை வாசிக்காமல் வெளியேறினார் கவர்னர்
சென்னை: பரபரப்பான சூழலில், புத்தாண்டில் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 20) காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. சட்டசபை கூடியதும் தேசிய கீதம் பாடாததால் கவர்னர் ரவி உரையை படிக்காமல் புறப்பட்டு சென்றார். ஆளும் திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம், கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கும். கவர்னர் உரையில், அரசின் கொள்கைகள், அரசு செயல்படுத்திய திட்டங்கள், புதிய அறிவிப்புகள் போன்றவை இடம் பெறும். கவர்னர் பேச வேண்டிய உரையை, தமிழக அரசு தயாரித்து கவர்னருக்கு அனுப்பி வைக்கும்.
கூட்டத்தொடர்
கடந்த சில ஆண்டுகளாக, கவர்னர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதன் காரணமாக, என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மத்தியில் நிலவும் சூழ்நிலையில், இன்று (ஜனவரி 20) காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டத் தொடர் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. சட்டசபை கூடியதும் தேசிய கீதம் பாடாததால் கவர்னர் ரவி உரையை படிக்காமல்
புறப்பட்டு சென்றார். ஆளும் திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர்.
முன்னதாக, சட்டசபை வளாகத்திற்கு வந்த கவர்னர் ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். அவருக்கு சால்வை அணிவித்தார். பூங்கொத்து கொடுத்து அப்பாவு வரவேற்றார். பேண்ட் வாத்தியம் இசைத்து அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்தாண்டில் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கடந்த கால….!
* கடந்த 2024ம் ஆண்டு, தமிழக அரசு தயாரித்து வழங்கிய உரையில் இடம் பெற்றிருந்த, 'சமூக நீதி, சுய மரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, அமைதி பூங்கா' உள்ளிட்ட அலங்கார வார்த்தைகளை, கவர்னர் தவிர்த்து விட்டார். இது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு தயாரித்த உரை மட்டுமே, சபை குறிப்பில் இடம் பெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், இந்த தீர்மானத்தை முன் மொழிந்தார். இதையடுத்து, சபை நிகழ்வு முடிவதற்கு முன், சபையிலிருந்து கவர்னர் ரவி வெளியேறினார்.
* கடந்த ஆண்டு, உரை நிகழ்த்த சட்டசபைக்கு கவர்னர் வந்தார். தன் உரைக்கு முன், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கவர்னர் வலியுறுத்தினார். ஆனால், சட்டசபை மரபுப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தேசிய கீதம் இசைக்கப்படாததை கண்டித்து, சபையில் இருந்து கவர்னர் ரவி வெளியேறினார். இதையடுத்து, கவர்னர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
* இந்த சூழலில் இந்தாண்டும் தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் கவர்னர் ரவி சட்டசபையில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
Super
இந்த இழவு பிடித்த உரையை படிக்காமல் போனதே நல்லது
மாநில மொழி தெரிந்துவர்களே கவர்னர் ஆக வாய்ப்பு தர வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
மத்திய அரசை ஒன்றியம் குன்றியம் எனசிய கீதம் பாடாமல் அவமதித்தது. தமிழ் தாய் வாழ்த்தை தங்கள் வசதிக்கு ஏற்ப எடிட் செய்வது
வாழ்க தமிழ் வளர்க பாரத ஒற்றுமை.
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழையும் தமிழர்களையும் எதிர்க்கும் நீங்கள் யார் உண்மையில் உங்களுக்கு தாய்மொழி என எதுவுமே கிடையாதா என மக்கள் கேட்கிறார்கள்.
ஆளுநர் வெளியேறியதால்
திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு மட்டுமே தெரிவித்தனர் என்பதற்கு ஆளுநர் சந்தோஷ படவேண்டும்.
தேர்தலுக்கு முன் நடக்கும் கடைசி சட்ட சபை கூட்டம். ஆளுநரையும் மத்திய.... சாரி, ஒன்றிய அரசையும் எவ்வளவு கேவலமாகவும் திட்ட முடியும். ஒன்றிய அரசால் ஒன்றும் செய்ய முடியாது. திமுக எம்எல்ஏக்கள், ஆளுநர் வெளியேறியதை, மிக கண்ணியமாக கண்டனம் மட்டும் தெரிவித்து நடந்து கொண்டார்கள் என்பது என் கருத்து.
மைக்கை... அணைத்து.... அணைத்து... விளையாடினால்..... எப்படி பேச முடியும் ??
கவர்னர் ஓய்வு எடுப்பது நல்லது
நரைமுடி தெரிவதால் இப்படி சொல்கிறீர்கள், அதனால் என்ன தலையில் டோப்பா வைத்தால் எழுபத்தைந்து கிழவனும் இளைஞன் ஆகிவிடலாம்.
நீங்கள் யாரை சொல்கிறீர்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது.
ஆளுநர் உரையை வாசித்து இருந்திருந்தால் மட்டும் மத்திய பாஜக அரசு அப்படியே தமிழ்நாட்டுக்கு வாரிக் கொடுத்து விடுவார்களா?
வேணு.அப்படியா கொடுத்தாலும் நீ ஆட்டைய போடுவே...தமிழக
மக்களுக்கு தெரியும்
ஏற்கனவே கொடுத்ததை எல்லாம் தான் புறங்கை நக்கியாச்சே இன்னும் எதுக்குன்னு தமிழன் கேட்கிறான்....
மத்திய அரசு குடுத்தா மட்டும் அப்டியே இந்த ஓங்கோல் திருடர்கள் அறுத்து தள்ளிடுவானுங்க
அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் போல ஆளுனர் உரையையும் யாரும் மதிக்க வில்லை என பொதுவான வர்கள் கூறுகின்றனர்.
திமுக தீய சக்தி என்று சிவநாயகம் கூறுகிறார்
முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கப்பட்டுள்ளது. மனசாட்சி உள்ள எவரும் ஒப்ப மாட்டார்கள்.மேலும்
-
தென்கொரிய பெண்ணுக்கு பெங்களூரு விமான நிலையத்தில் பாலியல் தொந்தரவு; ஊழியர் கைது
-
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்; இபிஎஸ்-ஐ சந்தித்த பிறகு பியுஷ் கோயல் திட்டவட்டம்
-
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,720 சரிவு
-
அதிபர் டிரம்பின் அமைதி வாரியத்தில் சேர 8 இஸ்லாமிய நாடுகள் ஒப்புதல்
-
அது எங்களுடைய வேலையல்ல... கிரீன்லாந்து விவகாரம் குறித்து புடின் கருத்து
-
ஆந்திராவில் லாரி மீது மோதிய பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்; 3 பேர் உடல் கருகி பலி