தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரே நாளில் இன்று சவரனுக்கு ரூ.3,600 அதிரித்தது
சென்னை: சென்னையில் இன்று(ஜனவரி 20) மாலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,320 அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 200 ஆக ஆனது.ஒரு கிராம் தங்கம் விலை ரூ.13,900 ஆக உயர்ந்தது.
இன்று காலை சவரனுக்கு ரூ.1280 ஆக அதிகரித்த நிலையில் தற்போது ரூ.2,320 என உயர்ந்து ஒரே நாளில் ரூ.3,600 ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளி கிராம், 310 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று (ஜனவரி 19) தங்கம் விலை கிராமுக்கு, 170 ரூபாய் உயர்ந்து, 13,450 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சவரனுக்கு, 1,360 ரூபாய் அதிகரித்து, 1,07,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, எட்டு ரூபாய் உயர்ந்து, 318 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 8,000 ரூபாய் அதிகரித்து, 3.18 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜனவரி 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டியது.
வெள்ளி விலை கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 330 ரூபாய்க்கும், கிலோவுக்கு 12 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கடந்த கால தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
விரைவில் ரெண்டு லட்சம். அடுத்து மூணு லட்சத்தை இன்னும் மூன்று ஆண்டுகளில் தொடும் என்பதில் சந்தேகம் இல்லை.
வளர்ச்சியோ வளர்ச்சி.
தங்கச்சந்தையில் என்னநடக்கிறதென்றே தெரியவில்லை.. நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது மூக்குத்தி வாங்குவதுகூட இனி சாத்தியமில்லை..
தங்கத்தை நாங்கள் மறந்துட்டோம்மேலும்
-
ஜிடிபி 8 சதவீத வளர்ச்சி பெறும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி
-
ஜம்மு காஷ்மீரில் இந்தியா-பாக். ராணுவம் பரஸ்பரம் துப்பாக்கிச்சூடு; எல்லையில் பதற்றம்
-
டிரம்ப் அழைப்பை ஏற்றுக் கொண்ட நெதன்யாகு; காசா அமைதி வாரியத்தில் இணைவதாக அறிவிப்பு
-
மீண்டும் மீண்டும் குட்டு வாங்கும் திமுக அரசு: நயினார் மகிழ்ச்சி
-
புதிய தாக்குதலுக்கு உள்ளானால் பதிலடி கொடுப்போம்; அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
-
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ராணுவ வலிமை முக்கியம்: விமானப்படை தளபதி