ஜிடிபி 8 சதவீத வளர்ச்சி பெறும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி
டாவோஸ்: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 முதல் 8 சதவீத வளர்ச்சி பெறும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலகப்பொருளாதார மன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதன் வருடாந்திரக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்- எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் என்ற அமர்வில் இன்று(ஜனவரி21) பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , இதனை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியதாவது: அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா 6 முதல் 8 சதவீத உண்மையான வளர்ச்சியை எட்டும். பொது முதலீடு, உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கம், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சட்டங்களை எளிமைப்படுத்துதல் ஆகிய நான்கு காரணிகளால் இந்த வளர்ச்சி சாத்தியமாகும். மேலும் தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவுவதற்கான அனுமதி பெறும் காலம் 270 நாட்களில் இருந்து தற்போது 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.4 சதவீதம் ஆக இருக்கும் என மத்திய அரசின் ஆரம்பக்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், முதலீட்டாளர்களுக்கு இந்தியா ஒரு நம்பிக்கைக்குரிய நாடாகத் திகழ்கிறது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.
we are already achieved 16.9 % GDP now only you people are thinking about 8 % , ok better follow TN ideas
நான்கரை லட்சம் கோடி கடன் நான்கு ஆண்டுகளில் வாங்கி சாதனை படைத்ததுதான் இந்த கேடுகெட்ட ஆட்சியின் சாதனை. கஞ்சாவில் தமிழகம் தள்ளாடுதே அதையும் சாதனையாகத்தான் எடுக்க வேண்டும்.
மோடி அரசு 155 கோடி கடன் வாங்கி RECORD
aaguyir don't bluff for two hundred rupees.you will get aluminium plateமேலும்
-
திமுகவை மக்கள் ஆட்சி அரியணையில் அமர்த்தமாட்டார்கள்; நயினார் நாகேந்திரன்
-
விஜயின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
-
ஆஸ்திரேலியாவில் மீண்டும் பயங்கரம்; துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
-
ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாஜவுக்கு கோபமில்லை; கனிமொழிக்கு என்னதான் பிரச்னை: கேட்கிறார் அண்ணாமலை
-
விவசாயிகள் விவகாரத்தில் பின்வாங்கியது ஏன்: திமுக அரசை கேட்கிறார் இபிஎஸ்
-
நியூசிலாந்தில் பயங்கர நிலச்சரிவு; சுற்றுலாப் பயணிகள் மண்ணுக்குள் சிக்கி மாயம்