ரூ.366 கோடி சட்ட விரோத பணப் பரிமாற்றம்; அமைச்சர் நேரு மீது அமலாக்கத்துறை மூன்றாவது குற்றச்சாட்டு
சென்னை: அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட மாறுதலுக்காக, ரூ.366 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது என்று, அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதற்கான ஆதாரங்களுடன் தமிழக போலீஸ் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
அமைச்சர் நேரு பொறுப்பு வகிக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் நடந்திருப்பதாக, ஏற்கனவே இரண்டு முறை அமலாக்கத்துறை, தமிழக போலீஸ் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. ஒப்பந்தங்களை முடிவு செய்வதில் ரூ.1020 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை, அதற்கான ஆதாரங்களை கடிதம் மூலம் டிஜிபிக்கு அனுப்பியது.
அதற்கு முன், பணி நியமனம் செய்வதில், ஒருவருக்கு தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி, வாட்ஸ்அப் உரையாடல் ஆதாரங்களுடன் ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தது.
இந்த இரு கடிதங்கள் மீது உரிய வழக்கு பதிந்து தங்களுக்கு தெரிவிக்கும்படி அமலாக்கத்துறை கூறியிருந்தது. எனினும், பூர்வாங்க விசாரணையை மட்டுமே தொடங்கியுள்ள தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்னும் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் உள்ளனர்.
இந்நிலையில் அடுத்த ஊழல் தொடர்பாக, ஜன.,14ல் மூன்றாவது கடிதத்தை அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பொறியாளர்கள் பணியிட மாறுதலுக்கு குறைந்தபட்சம் 7 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது.
* அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமானவர்கள் போனில் இருந்து அத்தகைய 340 பேருடைய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
* 10 முதல் 15 குறிப்பிட்ட லஞ்சம் பெற்ற நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
* அமைச்சர் நேரு மற்றும் அவரது குடும்பத்தினர், நெருக்கமானவர்கள் சேர்ந்து 365.87 கோடி ரூபாய் அளவுக்கு சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்துள்ளனர்.
* டிவிஎச் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் ரூ.223 கோடி, முதலீடுகள் வழியாக ரூ.36 கோடி, பினாமி நிறுவனங்கள் மூலம் ரூ.58 கோடி, தங்க முதலீடு வழியாக ரூ.2.33 கோடி, வெளிநாட்டு சொத்துக்கள் வழியாக ரூ.44 கோடி, ஆடம்பர செலவினங்களுக்கு ரூ75 லட்சம் என பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* ரூ.50 கோடிக்கு ஹோட்டல் வாங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.
* அமெரிக்காவில் 34 ஏக்கரில் சொத்து வாங்குதல்
* சிங்கப்பூருக்கு பணம் பரிமாற்றம் நடந்துள்ளது.
* அமெரிக்காவில் ரூ.70 கோடிக்கு 3.23 கோடி ரூபாயில் இரண்டாம் சொத்து தொடர்பாகவும் குற்றச்சாட்டினை அமலாக்கத்துறை முன் வைத்துள்ளது.
* இது தொடர்பாக சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் தமிழக போலீசார் வழக்கு பதிய வேண்டும்.
* முதல் கட்ட விசாரணை என்ற பெயரில் தாமதம் செய்யக்கூடாது.
* வழக்கு பதிவதில் செய்யக்கூடிய தாமதம், ஊழல் பேர்வழிகள், ஆதாரத்தை அழிப்பதற்கு அவகாசம் கொடுத்தது போல் ஆகி விடும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (25)
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
20 ஜன,2026 - 17:35 Report Abuse
இவரது செய்தியை படிக்கும்போது மோடிஜியின் பாஜக மீது எரிச்சல்தான் வருகிறது. இவ்வளவு ஊழல்வாதிகள் டுமிழ்நாட்டில் இருந்தும் ஒருத்தனுக்கும் இதுவரையில் தண்டனை இல்லை. விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம். 0
0
Reply
S.V.Srinivasan - Chennai,இந்தியா
20 ஜன,2026 - 16:11 Report Abuse
அமலாக்க துறை என்னவோ சினிமா படத்துக்கு மூணாவது வாரம், நாலாவது வாரம்னு விளம்பரம் கொடுக்கிற மாதிரி மூணாவது குற்றசாட்டு, நாலாவது குற்ற சாட்டுன்னு அடுக்கிக்கிட்டு போய்கிட்டே இருக்கீங்க. ஆனா ரிசல்ட் பூஜ்யம். குற்றம் சாட்டப்பட்டவரு துடைச்சுக்கிட்டு போய்கிய்ட்டே இருக்காரு. அமலாக்க துறை கொஞ்சம் சுறு சுறுப்பா வேலை செய்யணும். இல்லேன்னா இந்த மாதிரி செய்திகளை வெளியிட்டு பொழுது போக்க வேண்டாம். 0
0
Paneer Selvam - ,இந்தியா
20 ஜன,2026 - 16:51Report Abuse
ED can not prosecute anyone unless there is an existing case against the accused on financial misdeeds unlike NIA NIA could prosecute / arrest anyone and ge sheet them. That is the reason ED is requesting local police to register the case . 0
0
Reply
Chandru - ,இந்தியா
20 ஜன,2026 - 15:18 Report Abuse
காமெடி சினிமா போல் போய் கொண்டிருக்கிறது . திருடன் திருடி கொண்டே இருப்பதும். போலீஸ் காரன் வேடிக்கை பார்த்து கொண்டே இருப்பதும். மொத்தத்தில் மத்ய சர்க்கார் மதிப்புஇல்லா சர்க்கார் ஆக மாறி விட்டது 0
0
Paneer Selvam - ,இந்தியா
20 ஜன,2026 - 16:52Report Abuse
It is the law , ED can not prosecute on their own unless there is a FIR against accused by other agencies 0
0
Reply
Venugopal S - ,
20 ஜன,2026 - 15:14 Report Abuse
அரசியலில் குற்றம் சாட்டுபவர்களிடம் ஆதாரம் இல்லை.ஆதாரம் இருப்பவர்கள் குற்றம் சாட்டுவதில்லை. 0
0
Reply
Sundar - ,
20 ஜன,2026 - 14:53 Report Abuse
Article 356 is the only way. CM and the Top Cop are be autocratic like Trump. Ignoring democratic law. PM to act in consultation with Supreme Court. Urgently. 0
0
Reply
angbu ganesh - chennai,இந்தியா
20 ஜன,2026 - 14:01 Report Abuse
டே எங்களுக்கு ஒரு 50 லட்சம் இருந்தாலே லைப் செட்டில்டா இவ்ளோ கொள்ள அடிச்சி என்னதான் பண்ண போறீங்க 0
0
Reply
Haja Kuthubdeen - ,
20 ஜன,2026 - 13:52 Report Abuse
அமலாக்கத்துறை இன்னும் எத்தனை கடிதம் எழுதினாலும் எப் ஐ ஆர் போடப்படுமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு..ஏன் அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாட வழியே இல்லையா?? 0
0
Paneer Selvam - ,இந்தியா
20 ஜன,2026 - 16:53Report Abuse
I do not think ED can approach High Court if local police refused to file a FIR 0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
20 ஜன,2026 - 13:50 Report Abuse
நோ யூஸ் 0
0
Reply
Selvaraj - ,
20 ஜன,2026 - 13:41 Report Abuse
தேசத்தில் நடந்துள்ள மிகப்பெரிய ஊழலை ஆதாரத்துடன் இந்திய அரசு கண்டுபிடித்து, இந்தியாவின் ஒரு சிறுபகுதியை மட்டும் ஆட்சி செய்ய உரிமை பெற்ற ஒரு அரசுக்கு தெரியபடுத்தியும், அந்தசிற்றரசு இந்திய அரசினுடைய ஆணையை மதிக்காமல் நடந்துகொள்வதை பார்த்துக்கொண்டே இருப்பது சரியல்ல.
இந்தியாவின் ஒரு சிறுபகுதியை ஆண்டுவரும் ஒரு சிற்றரசே ஊழல்வாதியாக இருந்து கொண்டு ,தனது மக்களிடமிருந்து கொள்ளையடிக்க அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ஊழல் ஏஜன்டுகளாக நியமித்து தவறு செய்வார்கள் என நமது அரசியல் நிர்ணய சட்டத்தை நிர்மாணித்தவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
எனவே காலத்திற்கு தகுந்தாற்போல இது போன்ற ஊழல் செய்கின்ற அரசை அவர்களின் அனுமதியின்றியே தண்டிக்கும் வகையிலான சட்டங்கள் நமக்கு மிகவும் தேவையானது. இதுபோன்ற சட்டங்களை உருவாக்கி , மக்களிடையே புனிதர் வேடமிட்டு அலையும் நபர்களை அரசியலில் இருந்து அகற்றவேண்டும். அப்பொழுதுதான் நல்லவர்களும் நியாயவாதிகளும் நிம்மதியாக இத்தேசத்தில் வாழ இயலும். 0
0
Reply
xyzabc - ,இந்தியா
20 ஜன,2026 - 13:36 Report Abuse
யாராலும் அசைக்க முடியாது. 0
0
Reply
மேலும் 12 கருத்துக்கள்...
மேலும்
-
தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் தேஜ கூட்டணி ஆட்சி: நயினார் நாகேந்திரன் உறுதி
-
ஐநா அலுவலகத்தை இடித்த இஸ்ரேல்: சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என கண்டனம்
-
கறிக்கோழி வளர்ப்போர் போராட்டம் வெற்றி பெற வேண்டும்; பாஜ.
-
ஆபாச வீடியோவில் சிக்கிய டிஜிபி ராமச்சந்திர ராவ் சஸ்பெண்ட்
-
அர்பன் நக்சலைட்களின் நோக்கம் மாறி வருகிறது: பிரதமர் மோடி
-
ஜார்ஜியா துாதராக அமித் குமார் மிஸ்ரா நியமனம்: மத்திய அரசு
Advertisement
Advertisement