ஆபாச வீடியோவில் சிக்கிய டிஜிபி ராமச்சந்திர ராவ் சஸ்பெண்ட்
பெங்களூரு: பணியின் போது பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான நிலையில், கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள ராமச்சந்திர ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
கர்நாடக போலீஸ்துறையில் டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் உயரதிகாரி ராமச்சந்திர ராவ். இவர் பணியின் போது பல பெண்களுடன் அலுவலக அறையில் மிக நெருக்கமாக இருந்த வீடியோக்கள் அண்மையில் வெளியானது. சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோக்கள் பெரும் சர்ச்சையாக மாறியது.
வீடியோவை வெளியிட்டது யார் என்பது பற்றிய விவரங்கள் தெரியாத நிலையில், கர்நாடகா அரசு ராமச்சந்திர ராவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது;
ஒரு அரசு ஊழியருக்கு பொருந்தாத வகையில் ராமச்சந்திர ராவ் செயல்பட்டு உள்ளார். அரசிற்கு அவர் அவமானத்தையும் ஏற்படுத்தி உள்ளார். எனவே, அவரை முதல்கட்டமாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்வது என்று அரசு முடிவு எடுத்துள்ளது.
இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குள் சிக்கி இருக்கும் டிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள் ரன்யா ராவ். இவர், துபாயில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்திய வழக்கில் அதிகாரிகளால் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர். தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், நீண்ட நாட்கள் கழித்து குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு டி.ஜி.பி,யாக நியமிக்கப்பட்டார்.
அது சரி .. நம்ம மாநிலத்தின் தலைநகரில் அண்ணா பல்கலை கழக வளாகத்தில் பாலியல் கொடுமை செய்ததால் பிடிபட்ட ஆளுக்கு என்ன ஆச்சு என்று ஏதாவது ஊடகம் தொடர்ந்து கேள்வி கேட்டிருக்கிறதா ? மறந்து விட்டோமே . அந்த நபர் விடுவிக்க பட்டு ராஜ மரியாதையுடன் அனுப்ப பட்டிருப்பார் . யார் அந்த சார் ? என்ற கேள்விக்கும் விடை இல்லமால் அந்த கேள்வியையும் மறந்து விட்டோம் . பாவம் அந்த பெண் .. குற்றவாளிகள் தண்டிக்க படுவார்கள் என்று நம்பி ஏமாந்திருப்பார் .
மாட்டிக்கொண்டவன் மட்டுமே திருடன் .
பாதிக்கப்பட்ட யாரும் புகார் செய்ய மாட்டார்கள். இவரும் தப்பி விடுவார்.
டிஜிபி தனது கருத்தாக அந்த வீடியோக்கள் ஏஐ முறையில் சித்தரிக்கப்பட்டதாகக் கூறுகிறார்.
அரசு ஊழியருக்கான விதியை மீறியதாகச் சொல்லி இது தீர்ப்பு போல் இருக்கிறது அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது.
இது வெளியுலகிற்கான அவசர நடவடிக்கை போல் தோன்றினாலும் காலப்போக்கில் மக்கள் இதை மறக்கும்போது அந்த டிஜிபிக்கு அனைத்து அரசு மரியாதைகளும் வழக்கம்போலவே தொடரும் என்பது எல்லோரும் அறிந்ததே.
துணை முதல்வர் சிவகுமார் ஏன் இந்த விவகாரத்தில் பட்டும் படாமல் நழுவுகிறார் என்பதையும் யோசிக்க வேண்டியதாகிறது.
இப்படி பட்டவர் கட்டுப்பாட்டில் தான் மாநில போலீஸ் இருந்தால் எப்பிடி இருந்திருக்கும்
பெயர் மட்டும் ராமச்சந்திரன். செய்வதெல்லாம் ராவனச்சந்திரன் செயல். இந்த சஸ்பெண்ட் எல்லாம் ஒரு கண்துடைப்பு. பார்த்துக்கொண்டே இருங்கள் மீண்டும் அவன் அதே பதவியில், அல்லது ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பதவி.
இப்படியொரு அரசியல் சட்டம் வகுத்த அம்பேத்கருக்கு நன்றி ......
Good Decision.
பினராயி தப்பிச்சுட்டரோ
He should be dismissed after a quick investigationமேலும்
-
சட்டசபையில் வாசிக்க கொடுத்த அறிக்கையில் நிறைய.. 'புருடா!' விளக்கினார் கவர்னர் ரவி
-
தகவல் சுரங்கம் : மூன்று மாநிலம் உருவான நாள்
-
அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் உடல் பருமன்
-
தொழில் துறை வளர்ச்சியில் 'தினமலர்' பங்கு முக்கியமானது
-
இது எங்க 'ஏரியா'...சாதிப்பாரா சூர்யா * முதல் 'டி-20' சவால் இன்று
-
டில்லி இரண்டாவது வெற்றி * மும்பை அணி ஏமாற்றம்