ரூ.72 லட்சம் வரி பாக்கி: அதிர்ந்த கூலி தொழிலாளி
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், பார்சம்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேஷ், 43; கூலி தொழிலாளி. இவருக்கு சில நாட்களுக்கு முன், ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்தது.
அதில், 'வெங்கடேஸ்வரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன் நிலுவையிலுள்ள, 72 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி., வரியை உடனே செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ், திருப்பத்துார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில், 'குடும்பத்தை கூலி வேலை செய்து பராமரிக்கிறேன். என் பான், ஆதார் அட்டையை வைத்து, யாரோ, இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (2)
Ganesan - ,இந்தியா
21 ஜன,2026 - 07:46 Report Abuse
வரி கட்டிவிட்டு கேஸ் போடுங்கள் 0
0
Reply
அப்பாவி - ,
21 ஜன,2026 - 07:09 Report Abuse
இதுதாண்டா வளர்ச்சி... 0
0
Reply
மேலும்
-
திமுகவால் ஹிந்துக்களின் உயர் கலாசார நம்பிக்கைகளை சிதைக்க முடியாது; அண்ணாமலை
-
தத்துவத்தை சட்டமாக்க முடியாது; சமூகம் கடைபிடிக்க வேண்டும்; குறளாசிரியர் மாநாட்டில் அறிவுறுத்தல்
-
திமுகவை வீழ்த்த ஒரே குடும்பமாக செயல்படுவோம்: தினகரன் சந்திப்பில் பியுஷ் கோயல் உறுதி
-
டிரம்ப் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு; அவசரமாக தரையிறக்கினார் விமானி
-
வங்கதேசத்தில் அசாதாரண சூழல்... இந்திய அதிகாரிகளின் குடும்பங்களை திரும்ப அழைத்தது மத்திய அரசு
-
மீண்டும் தேஜ கூட்டணியில் அமமுக: தினகரனுக்கு இபிஎஸ் வரவேற்பு
Advertisement
Advertisement