டிரம்ப் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு; அவசரமாக தரையிறக்கினார் விமானி
வாஷிங்டன்: சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் விமானம், கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் வேறு விமானத்தில் டிரம்ப் குழுவினர், சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றனர்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் இன்று மாலை 7 மணிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்ற இருக்கிறார். கிரீன்லாந்து விவகாரம், ஐரோப்பிய நாடுகளுக்கான வர்த்தக வரி அச்சுறுத்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அதிபர் டிரம்ப், வாஷிங்டனில் உள்ள ஏர் போர்ஸ் ஒன் விமானத்தின் மூலம் சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார். சுமார் ஒரு மணிநேரம் 20 நிமிடம் வானில் பறந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையறிந்து சுதாரித்துக் கொண்ட விமானி, மீண்டும் விமானத்தை மேரிலேண்டில் உள்ள விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார்.
இதையடுத்து, டிரம்பும் அவரது உடன் சென்ற அதிகாரிகளும் வேறு விமானத்தின் மூலம், மீண்டும் சுவிட்சர்லாந்தை நோக்கி புறப்பட்டனர். இதன்மூலம், சுமார் 2.30 மணிநேரம் தாமதமாக அதிபர் டிரம்ப் டாவோஸூக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, "டாவோஸ் மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்க இருக்கிறது. அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்," என்று அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
விமானத்தை பழுது பார்க்கலாம் ஆனால்
ஜஸ்ட் மிஸ்ஸு...
கோளாறு பிடிச்சவனுககே கோளாறு பிடிச்சா அந்த கோளாறு பிடிச்சவன் எந்த கோளாறு பிடிச்சவன் கிட்ட போய் அந்த கோளாறை சரிசெய்வான்.
அந்த கூமுட்ட பயலுக்கு கோளாறு தான். தான் விரித்த வலையில் தானே விழுந்து சாவான்
இந்த பொருளாதார மேதை இல்லை என்றால் உலகம் குடி முழுகி போயிருக்காது! அடுத்த விமானத்திற்கு என்ன அவசரம்?
இது டிரம்ப்க்கு எச்சரிக்கை மணி ....
அனுதாபம் தேவைப்படும் நிலைமை வந்து விட்டதா ?
கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல..
சகுனம் சரியில்லை. பிரயாணத்தை மறுபடியும் தொடராமல் தவிர்த்திருக்கலாம். அவர் நல்ல முறையில் அமெரிக்கா திரும்பி வர அவரது சார்பாக நாம் அனைவரும் கடவுளை பிரார்த்திப்போமாக.
ரெண்டாவது தடவையும் தப்பிச்சுட்டார்.
உலகம் நலமடைய கடவுள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்மேலும்
-
திமுகவை மக்கள் ஆட்சி அரியணையில் அமர்த்தமாட்டார்கள்; நயினார் நாகேந்திரன்
-
விஜயின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
-
ஆஸ்திரேலியாவில் மீண்டும் பயங்கரம்; துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
-
ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாஜவுக்கு கோபமில்லை; கனிமொழிக்கு என்னதான் பிரச்னை: கேட்கிறார் அண்ணாமலை
-
விவசாயிகள் விவகாரத்தில் பின்வாங்கியது ஏன்: திமுக அரசை கேட்கிறார் இபிஎஸ்
-
நியூசிலாந்தில் பயங்கர நிலச்சரிவு; சுற்றுலாப் பயணிகள் மண்ணுக்குள் சிக்கி மாயம்