திமுகவால் ஹிந்துக்களின் உயர் கலாசார நம்பிக்கைகளை சிதைக்க முடியாது; அண்ணாமலை
சென்னை: திமுகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் ஹிந்து சமுதாயத்தின் உயர் கலாசார நம்பிக்கைகளை சிதைக்க முடியாது என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக சர்ச்சை கருத்து கூறியதாக பாஜ தேசிய நிர்வாகி அமித் மாளவியா மீது திமுகவினர் தொடர்ந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது; பாஜ தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தேசியத் தலைவர் அமித் மாளவியா மீது, ஹிந்து விரோத திமுக அரசு பதிவு செய்த எப்ஐஆர் அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் கூறி, உயர்நீதிமன்ற மதுரை கிளை, அதனை ரத்து செய்துள்ளது. சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் குரல் கொடுத்த உதயநிதியின் வெறுப்புப் பேச்சைக் கேள்வி கேட்பதோ அல்லது அதற்குப் பதிலளிப்பதோ கிரிமினல் குற்றமாகாது என்றும், அது சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியது.
மேலும், திமுக மற்றும் திராவிடர் கழகத்தின் நீண்டகால ஹிந்து மத விரோதப் போக்கையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. வெறுப்புப் பேச்சைத் தொடங்கியவர் (உதயநிதி) மீது தமிழகத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் அவர் சுதந்திரமாக இருந்து வருகிறார். ஆனால், அதற்கு எதிர்வினையாற்றியவர்கள் மீது திமுக அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்குப் பதிவு செய்துள்ளது என்ற அநீதியையும் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.
நீதி வென்றுள்ளது. உண்மையை விசாரணைக்கு உட்படுத்த முடியாது. திமுகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் ஹிந்து சமுதாயத்தின் உயர் கலாசார நம்பிக்கைகளை சிதைக்க முடியாது. திமுக மற்றும் இண்டி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள், நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராகவும் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வருவார்களா?. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மலை ஹிந்துக்களின் ஒரே தலை
உதய நிதி கிறிஸ்தவன் என்று அவரே சொல்லி உள்ளார். இந்துக்களை பற்றி அப்படிதான் பேசுவார்.
கடைசி வரை திருந்தவே மாட்டீங்கடா
மாளவியா மீது முதல் தகவல் அறிக்கை தயாரிக்க அவர் அந்த பகுதி போலீஸ் எல்லையில் இருக்க வேண்டும். எல்லைக்குள் பேசி இருக்க வேண்டும். திராவிட போலீஸ் பேனா, பென்சில் கொண்டு வேலை செய்து வருகிறார்கள். லத்தி, துப்பாக்கி பணி மறந்து ஆளும் கட்சியை முழு நேரம் ஆனந்த படுத்தி வருகிறார்கள். வருவாய் துறை அதிகாரிகள் மாளவியா பற்றி அறிமுகம் செய்ய வேண்டும். போலீஸ் நிலையத்தில் குடிமக்கள் விவரம் இருக்காது. FIR முறையாக இல்லை என்றால், குற்றவியல் நீதிபதி போலீஸ் அதிகாரியை கைது,சஸ்பெண்டு செய்ய உத்தரவிட முடியும். தான் விரும்பும் நபருக்கு விலக்கு, வெறுக்கும் நபருக்கு அறிக்கை தாக்கல் செய்ய முடியாது.
திமுக குடும்பம் மீண்டும் ரயிலில் அனுப்பி வைக்க படும்
உதை நிதி தன் மனைவி மற்றும் தன்னை ஒரு கிறிஸ்தவர் என கிருத்தவ மேடையில் பேசி ஓட்டுக்களை தக்க வைக்க முயற்சி செய்தார். இந்துக்கள் நம்பிக்கையை கிண்டல் செய்ததை தட்டி கேட்கும் ஒரே தலைவர் அண்ணாமலை மட்டுமே
தமிழக மக்கள் நலனுக்காக முழு மனதுடன் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளோம். நிச்சயமாக என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும். கூட்டணி ஆட்சியில் அமமுக பங்கேற்கும். இந்த கூட்டணியை பலப்படுத்த அமமுக உறுதுணையாக இருக்கும் , என்ன அண்ணாமலை நீர் சொன்ன மாதிரி NDA கூட்டணி ஆட்சி அருமை
நன்றி இருவருக்கும் இது DMK வெற்றிக்கு வழி வகுக்கும்
சரியாக சொன்னீர்கள்
ஆமாம். கரெக்ட். உங்களால மட்டும்தான் அது முடியும். எல்லோரையும் ஏற்றுக் கொண்டு சமமாக அன்பு செலுத்தும் எங்கள் இந்து சமுகத்தை உங்களால் மட்டும்தான் மற்றவர்கள் வெறுக்கும் அளவுக்கு சிதைக்க முடியும்.
தலித் கிருத்துவ மாநாடு நடந்ததே எப்படி என்று கேள்வி கேட்டிர்களா? எங்கள் ஹிந்து நம்பிக்கையை குலைக்க யார் உரிமை கொடுத்தது ?
இந்து மக்களுக்கு மட்டுமே சகிப்பு தன்மை இருக்கிறது. மற்ற மதத்தினருக்கு சகிப்பு தன்மை இருக்கிறதா? இந்து கடவுள்களை தவறாக விமர்ச்சிப்பவனை தமிழக அரசு கொண்டாடுகிறது. அப்பாவி இந்து கூட அவனுக்கு வக்காலத்து வாங்குகிறான். பிற மதத்தின் கடவுளை விமர்ச்சித்தால் அரசு வழக்கு பதிவு செய்கிறது. பிற மதத்தை சேர்ந்தவர்களால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நடுநிலை இந்து தனது பண்பாடு தனது பாரம்பரியம் சிதைக்கப்படுவதை பார்த்தும் அதை கடந்து செல்கிறான் என்றால் அவன் ஒரு இதுவே அல்ல. ஜடம்.மேலும்
-
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செய்யாத சாதனை; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
தத்துவத்தை சட்டமாக்க முடியாது; சமூகம் கடைபிடிக்க வேண்டும்; குறளாசிரியர் மாநாட்டில் அறிவுறுத்தல்
-
திமுகவை வீழ்த்த ஒரே குடும்பமாக செயல்படுவோம்: தினகரன் சந்திப்பில் பியுஷ் கோயல் உறுதி
-
டிரம்ப் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு; அவசரமாக தரையிறக்கினார் விமானி
-
வங்கதேசத்தில் அசாதாரண சூழல்... இந்திய அதிகாரிகளின் குடும்பங்களை திரும்ப அழைத்தது மத்திய அரசு
-
மீண்டும் தேஜ கூட்டணியில் அமமுக: தினகரனுக்கு இபிஎஸ் வரவேற்பு