வங்கதேசத்தில் அசாதாரண சூழல்... இந்திய அதிகாரிகளின் குடும்பங்களை திரும்ப அழைத்தது மத்திய அரசு
புதுடில்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசத்தில் உள்ள இந்திய அதிகாரிகளின் குடும்பங்களை மீண்டும் தாயகத்திற்கு அழைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சியில் நடக்கும் இத்தகைய சம்பவங்களை தடுத்து நிறுத்தி, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அங்கு நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கையாக, அங்கு பணியாற்றும் இந்திய அதிகாரிகளின் குடும்பத்தினரை மீண்டும் தாயகத்திற்கு அழைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது; பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, டாக்காவில் உள்ள தூதரகம் மற்றும் பிற அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளின் குடும்பத்தினரை இந்தியா திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளோம். இருப்பினும், தூதரக அலுவலகங்கள் தொடர்ந்து செயல்படும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்காவில் உள்ள உயர் தூதரகம் தவிர, சிட்டகாங், குல்னா, ராஜஷாஹி மற்றும் சில்ஹெட் ஆகிய இடங்களிலும் இந்தியாவுக்கான தூதரக அலுவலகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (5)
Sivasankaran Kannan - chennai,இந்தியா
21 ஜன,2026 - 17:30 Report Abuse
இவர்களை தமிழக மக்கள் தேர்தலில் தூக்கி மிதித்து துடைத்தெறிய வேண்டும். 0
0
Reply
பெரிய குத்தூசி - Chennai,இந்தியா
21 ஜன,2026 - 16:51 Report Abuse
பங்களாதேஷ் ல் இவளவு இடங்களில் தூதரகம் அமைத்து ரா உளவுத்துறை அதிகாரிகளை நியமித்தும் பங்களாதேஷ் ஆட்சிமாற்றத்தை ரா உளவுத்துறையால் ஏன் முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியவில்லை. பங்களாதேஷில் பணியாற்றும் offline ரா அதிகாரிகளும் அமெரிக்காவுக்கும் டாலருக்கும் விலைபோய்விட்டார்கள் என மட்டும் புரிந்து கொள்ளமுடிகிறது. ஒருத்தர் முதல்வர் என தமிழ்நாட்டில் இருந்து கொண்டு டெல்லிக்கு நாங்கள் அவுட் ஆப் கன்ட்ரோல் எனவும் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாமல் லாஜிக்களாக இந்தியாவிலிருந்து தமிழகத்தை பிரித்து இந்திய இறையாண்மைக்கு எதிராக முதல்வர் என்ற பெயரில் ஸ்டாலின் ஆட்சி செய்துகொண்டுளார். வந்தேமாதரம் மற்றும் ஜைஹிந்த் வரிகளை உச்சரிக்க வைத்தாலே எதிரிகள் அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா போன்ற எதிரிகள் தானாக அடங்கிப்போவார்கள். 0
0
Reply
rajasekaran - neyveli,இந்தியா
21 ஜன,2026 - 13:54 Report Abuse
அதிகாரிகள் மட்டும் தானா. சாதாரண அப்பாவி ஹிந்து மக்கள் என்னவாயிற்று. மோடி அரசு இதற்கு உடனடியாக ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். எதுவாயினும் பின்பு பார்த்துக்கலாம் என்று துணிந்து இறங்க வேண்டும். அப்போது தான் மற்ற நாடுகளும் இந்தியாவிற்கு பயப்படுவார்கள். 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
21 ஜன,2026 - 13:02 Report Abuse
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை மூட வேண்டும். இந்த இரண்டு நாடுகளும் இதற்கு தகுதியற்றவை. இந்த இரண்டு நாடுகளிலிருந்தும் அனைத்து சிறுபான்மையினரையும் அழைத்து வந்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் அனுப்ப இந்தியா ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். 0
0
Reply
Anand - chennai,இந்தியா
21 ஜன,2026 - 12:20 Report Abuse
பங்களாதேஷ் தானாக அடங்காவிட்டால் சுளுக்கெடுத்து அடக்கப்படும் என தெரிகிறது. 0
0
Reply
மேலும்
-
தங்கம் விலை தாறுமாறாக உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3600 அதிகரிப்பு
-
அதிபர் டிரம்ப் VS கனடா பிரதமர் கார்னி; அமைதி வாரியத்தில் சேர விடுத்த அழைப்பு வாபஸ்
-
டில்லி - புனே சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது முதல்கட்டத்தில் 33 கேள்விகள்; என்னென்ன தெரியுமா?
-
ஆயுதங்களை தூக்கியெறிந்து விட்டு... நக்சல்களுக்கு அமித் ஷா இறுதி எச்சரிக்கை
-
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த விவகாரம்; முதல்முறையாக இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை
Advertisement
Advertisement