மீண்டும் தேஜ கூட்டணியில் அமமுக: தினகரனுக்கு இபிஎஸ் வரவேற்பு
சென்னை: தேஜ கூட்டணியில் மீண்டும் அமமுக இணைந்தது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். தே.ஜ. கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் தினகரனை அன்போடு வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:அமமுக மட்டுமல்ல தமிழகத்திற்கே நல்லதொரு காலத்தின் தொடக்கம் இது. மக்கள் விரும்பும் நல்லாட்சியை உருவாக்குவதற்கான முயற்சிக்கு நாங்களும் உறுதுணையாக இருப்பதற்காக எங்களது ஆதரவை தெரிவிக்க புறப்பட்டு செல்கிறோம்.




நாம் பழையதை நினைத்து கொண்டு கட்சி நலனையும், தமிழகத்தின் நலனையும் பின்னுக்கு தள்ள கூடாது. எல்லாவற்றையும் இணைக்கிற சக்தியாக, ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற முறையில் ஓரணியில் திரண்டு மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைவதற்கு துணையாக இருப்போம். மக்கள் ஆட்சி மீண்டும் வருவதற்கு, நல்லாட்சி வருவதற்கு உறுதுணையாக இருப்போம் என்பது தான் எங்களது நிலைப்பாடு. இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
இபிஎஸ் வரவேற்பு
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தீயசக்தி திமுகவின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக்காப்போம், தமிழகத்தை மீட்போம். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
@block_P@
இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அமமுகவை மனதார வரவேற்று வாழ்த்திய அதிமுகவின் பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயலலிதாவின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம். இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.block_P
சந்திப்பு
மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் சென்னை வந்தடைந்தார். அவர் முன்னிலையில் இன்று பாஜ- அதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் டிடிவி தினகரன் பியூஷ் கோயலுடன் சந்தித்து பேச்சு நடத்தினார். தொகுதி பங்கீடு குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினர்.
தீயசக்தியை அழித்து ஒழிக்க அடுத்து கேப்டன் மனைவி பிரேமலதா, சீமான் மற்றும் விஜய் ஆகியோர் பிஜேபி அணிக்கு வருவார்கள்.
சரி வருமா
இதை 2001 தேர்தலிலேயே எடப்பாடி ஒப்புக்கொண்டிருந்தால் தமிழகம் இவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகி இருக்காது.
ஜெயலலிதா இறந்து போய் விட்டார். அப்போ அ.தி.மு.க க செத்து போன ஆட்சி கொண்டு வர முயற்சி எடுக்கிறார்களா
கருணாநிதியும்தான் செத்து போய்ட்டார்...திமுக என்னன்னா கலைஞர் ஆட்சி நடக்குதுன்னு சொல்லலையா???அப்டி எடுத்துக்கங்க.... காங்கிரஸ்காரன் காமராஜ் ஆட்சி அமைப்போம்னு சொல்லலையா...
சந்தடி சாக்கில் இன்னா செய்தாரை ஒருத்த அவர் நாண நன்னயம் செய்து விடல் னு அடித்து விட்டாரு பாத்தீங்களா.
எடப்பாடி பழனிசாமிக்கு தன்மானம் சுயகவுரவம் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இடி உசுப்பேத்திவிட்டா எடப்பாடி உடனே அமமுகவை கழட்டி விட்டுருவாராக்கும். இப்பவே மன்னார்குடி தனிக்காட்டு ராஜாவுக்கு தூக்கம் போயிருக்கும்.
எங்கேயோ கேட்ட குரல்.
தன்மானம் சுயகவுரவம்லாம் பார்த்திருந்தா காங்கிரஸ்காரய்ங்க பேசுன பேச்சுக்கு கூட்டு பொறியல்லாம் கிடையாதுன்னு தளபதி முடிவு செஞ்சிருப்பாரே...
இதை முன்பே செய்து இருந்தால் செங்கோட்டையன் அதிமுகவை விட்டு வெளியே போயிருக்க மாட்டார். ஆனாலும் பரவாயில்லை மீண்டும் செங்கோட்டையன் அதிமுகவில் விரைவில்
தேமுதிக 5 சீட்டுக்கு வந்தா பார்க்கணும், இல்லைனா கழட்டி விட வேண்டியதுதான். அவர்களுக்கு 1% கூட வாக்கு இல்லை. எனினும் தீய சக்தியை எதிர்க்க கை கோர்க்கவேதான் அந்த 5 சீட். அப்படியே பெரிய மாம்பழத்தையும் சிறிய மாம்பழத்தையும் ஒரே மரத்தில் காய்த்து பழுத்தது என ஏதாவது கூறி சமாதனப் படுத்தி விட்டால் இன்னமும் மகிழ்ச்சி. அப்படி நடந்தால் தீய சக்தி அழிவது உறுதி.
அதே மாலா ஃபேனை 12 இல் வையடி என்ற கருத்துதான் இங்கே இடவேண்டும் . தனி தனியாக உபி களுக்கு பதில் தர தேவையில்லை.
மீண்டும் ஒன்றிணைந்த அதிமுகவுக்கு பாராட்டு. எதிரியை வீழ்த்த சில சங்கடங்களை ஓரம்கட்டிவிட்டு தீயசக்தி திமுகவை வீழ்த்த ஒன்றுபட்டதற்கு மனம் கனிந்த நன்றி.மேலும்
-
திமுகவை மக்கள் ஆட்சி அரியணையில் அமர்த்தமாட்டார்கள்; நயினார் நாகேந்திரன்
-
விஜயின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
-
ஆஸ்திரேலியாவில் மீண்டும் பயங்கரம்; துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
-
ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாஜவுக்கு கோபமில்லை; கனிமொழிக்கு என்னதான் பிரச்னை: கேட்கிறார் அண்ணாமலை
-
விவசாயிகள் விவகாரத்தில் பின்வாங்கியது ஏன்: திமுக அரசை கேட்கிறார் இபிஎஸ்
-
நியூசிலாந்தில் பயங்கர நிலச்சரிவு; சுற்றுலாப் பயணிகள் மண்ணுக்குள் சிக்கி மாயம்