முஸ்லிம் நாடுகளுடன் சேர்ந்து 'இஸ்லாமிய நேட்டோ' அமைக்க பாகிஸ்தான் முயற்சி
இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா உடன் சமீபத்தில் பாகிஸ்தான் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை விரிவுபடுத்தி, அதில் பிற முஸ்லிம் நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு பரந்த கூட்டு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க, பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவுக்கும் இடையே, கடந்தாண்டு செப்டம்பரில் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதில், இவ்விரு நாடுகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடந்தாலும் அது இரு நாடுகளையும் தாக்கியதாக கருதப்படும் என்ற பிரிவு இடம் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை விரிவுபடுத்தி, அதில் பிற முஸ்லிம் நாடுகளையும் ஒன்றிணைத்து, கூட்டு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், தற்போது, இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் துருக்கியை இணைப்பதற்கான பேச்சு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இடையே, ராணுவ ஒத்துழைப்புக்காக, 'நேட்டோ' என்ற அமைப்பு, தற்போது நடைமுறையில் உள்ளது. அதுபோல், 'இஸ்லாமிய நேட்டோ' உருவாக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது.
''முஸ்லிம் நாடுகள் மீதான அன்னிய நாடுகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் அரசியல் அல்லது ராணுவ ரீதியாக பலவீனமடைவதை தவிர்க்க, முஸ்லிம் நாடுகள் ஒரு விரிவான பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டிய நேரம் வந்து விட்டது,'' என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
கடைசியில் இந்த கூட்டமைப்பினாலேயே எல்லா நாடுகளும் அழியும் எவ்ளோ கூட்டு வைத்தாலும் வாழ்ந்து வளர்வதை விட அடித்து கொண்டு சாவதை நன்றாக செய்வார்கள்
மாநிலங்கள் இஸ்லாமியர நாடுகளுடன் நேட்டோ அமைப்பில் சேர அனுமதித்தால் தமிழ் நாடு மேற்கு வங்காளம் அந்த அமைப்பில் சேர்ந்துவிடும்.
சிரியா அதிபர் அல் சாரா அமெரிக்கா ஆதரவு பெற்றவன், அதுபோல குர்திஸ் குழுக்களும் அமெரிக்கா ஆதரவு பெற்றவை, ஆனால் அல் சாரா படைகளும் குர்திஸ் குழுக்களும் அடித்துக்கொள்கின்றன. ஏமனில் அரசு படைக்கு அமெரிக்கா மற்றும் சவுதி ஆதரவு, இன்னொரு பிரிவுக்கு யுஏஇ ஆதரவு, இவையிரண்டும் அடித்துக்கொள்கின்றன. ஆனால் அமெரிக்கா/சவுதி/யுஏஇ கூட்டாளிகள். இந்த லட்சணத்தில் பாகிஸ்தான் இஸ்லாமிய நேட்டோ என கூட்டான்சோறு கிளறிக்கொண்டிருக்கிறது.
அதாவது முஸ்லீம் நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு ...
already there is OIC Organisation of Islamic Conference where almost all the ARAB League nations and other Islamic countries are members. What can Pakisthan achieve except begging with the proposed NATO like organisation.
எல்லாம் நன்மைக்கே ....ஒரு மதம் எவ்வளவு வேகமாக வளர்கிறதோ.....அதை விட வேகமாக அழியும் .....புரிந்தவன் பிஸ்தா !!!
செய்து பிரயோஜனம் என்ன ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நாட்டிலும் 10 இன குழுக்கள் போராட்டம் அடித்து சாவுங்கள் வெளியில் இருந்து யாரும் அடித்து கொள்ள வேண்டாம் அவர்களுக்குள்ளாகவே நானா நீயா இப்பொழுது இருக்கும் பல தீவிரவாத இன்னும் கூடும் அவ்வளவுதான்
பழைய நூச்சு... ஆபரேஷன் சிந்தூர் க்கு முன்பே முயற்சி துவங்கிவிட்டது ....
மண் குதிரைகளை நம்பி யாரும் ஆற்றில் இறங்க மாட்டார்கள்?
தமிழ் நாடு இந்த "இ.நேட்டோ" அமைப்பில் இணையக்கூடாது.மேலும்
-
தென்கொரிய பெண்ணுக்கு பெங்களூரு விமான நிலையத்தில் பாலியல் தொந்தரவு; ஊழியர் கைது
-
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்; இபிஎஸ்-ஐ சந்தித்த பிறகு பியுஷ் கோயல் திட்டவட்டம்
-
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,720 சரிவு
-
அதிபர் டிரம்பின் அமைதி வாரியத்தில் சேர 8 இஸ்லாமிய நாடுகள் ஒப்புதல்
-
அது எங்களுடைய வேலையல்ல... கிரீன்லாந்து விவகாரம் குறித்து புடின் கருத்து
-
ஆந்திராவில் லாரி மீது மோதிய பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்; 3 பேர் உடல் கருகி பலி