அமைச்சர் நேரு துறையில் பணியிட மாறுதலுக்கு ரூ.366 கோடி லஞ்சம்: டி.ஜி.பி.,க்கு ஈ.டி., கடிதம்
சென்னை: அமைச்சர் நேரு துறையில், பணியிட மாறுதலுக்கு, 365.87 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டு இருப்பதாக, தமிழக டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள், மூன்றாவது கடிதம் அனுப்பி உள்ளனர்.
'நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில், 888 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்' என, அமலாக்கத் துறை அதிகாரிகள், கடந்தாண்டு அக்டோபரில், தமிழக டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு கடிதம் அனுப்பினர். அதனுடன், ஊழலுக்கான ஆதாரங்களையும் அனுப்பினர்.
பறிமுதல்
அதன் பின்னர், கடந்தாண்டு டிசம்பரில், அதே அமைச்சர் நேரு துறையில், 'டெண்டர்' முறைகேடு தொடர்பாக, 1,020 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக, இரண்டாவது கடிதம் அனுப்பினர்.
தற்போது, நேரு துறையில் பணியிட மாறுதல் செய்வதற்கு, 365.87 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டு உள்ளதாகவும், பணியிட மாறுதலுக்கு, லட்சம் ரூபாயில் இருந்து, ஒரு கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும், அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
நேருவுக்கு நெருக்கமானவர்களின் மொபைல் போனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் வாட்ஸாப் தகவல் பரிமாற்றம் குறித்த ஆவணங்களுடன், டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, அமலாக்கத் துறை மூன்றாவது கடிதம் அனுப்பி உள்ளது.
பினாமி
மேலும், நேரு தம்பி ரவிச்சந்திரன் நடத்தி வரும் கட்டுமான நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் வாயிலாக, 223 கோடி ரூபாய்; முதலீடுகள் வாயிலாக, 36 கோடி ரூபாய்; பினாமி நிறுவனங்கள் வாயிலாக, 58 கோடி ரூபாய்; தங்கத்தில் முதலீடு தொடர்பாக, 2.33 கோடி ரூபாய்.
வெளிநாட்டு சொத்துக்கள் வாயிலாக, 44 கோடி ரூபாய்; ஆடம்பர செலவுகளுக்கு, 75 லட்சம் ரூபாய் என, சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்து உள்ளதாக, அமலாக்கத் துறை கூறியுள்ளது.
மேலும், 50 கோடி ரூபாய்க்கு ஹோட்டல் வாங்குவது, அமெரிக்காவில், 34 ஏக்கரில் சொத்து வாங்குவது தொடர்பாகவும், அதே நாட்டில், 70 கோடி ரூ பாய்க்கு சொத்து வாங்குவது தொடர்பாகவும், நேருவுக்கு நெருக்கமானவர்கள் தகவல்களை பரிமாறி உள்ளனர் என்றும், அந்த கடிதத்தில் அமலாக்கத் துறை கூறியிருக்கிறது.
'சிங்கப்பூரில் நடந்த பணப் பரிமாற்றம், நேரு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் செய்துள்ள சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
'முதற்கட்ட விசாரணை என்ற பெயரில் காலதாமதம் செய்யக் கூடாது. வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால், ஊழல் செய்தவர்கள், அதற்கான ஆதாரங்களை அழிப்பதற்கு அவகாசம் கொடுத்தது போல ஆகி விடும்' என, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
@block_B@ '
அமலாக்க துறை சமர்ப்பித்துள்ள விரிவான அறிக்கையில், புகைப்படங்கள், 'வாட்ஸாப்' உரையாடல்கள், 'டிஜிட்டல்' சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் என, தி.மு.க., ஆட்சியில், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்காக, 365.87 கோடி ரூபாய் லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் அடங்கியுள்ளன. இதில், ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பணி வழங்கவும், பணியிட மாற்றத்திற்கும் அரசு அதிகாரிகள், 7 லட்சம் ரூபாய் முதல், 1 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, காவல் துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது, தி.மு.க., ஆட்சியின் நிர்வாகம் எவ்வளது சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.block_B
அமுலாக்க துறை என்பது தபால் நிலையம் அல்ல. சட்டங்களை அமுல் படுத்த நியமிக்க பட்ட துறை. மாநில போலீஸ் டிஜிபி மற்றும் அதிகாரிகளுக்கு விண்ணப்பம், கடிதம் ஒரு பிற்போக்கு நடவடிக்கை. முதலில் போலீசுக்கு கடிதம் எழுத கூடாது. கவர்னர் அனுமதி பெற்று மாநில தலைமை செயலரை ஆஜர் படுத்த வேண்டும். போலி வக்கீல் பிறழ் வாதங்களுக்கு அஞ்சி செயல்படுகிறீர்கள். உங்களுக்கு சம்பளம் போன்றவை தண்டம். மத்திய விசாரணை அமைப்புகளை ஒரு பூச்சாண்டி ஆக்கி விட்டது மத்திய அரசு.
ஏன் ஊழல் செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்கிறார்கள் என்றால் நமது சட்டம் ஊழல் செய்பவர்களுக்கு அவ்வளவு பாதுகாப்பை வழங்குகிறது. ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் மக்களுக்கு சேவை செய்ய உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு பதவிகள் இன்றைக்கு ஊழல் செய்து கொள்ளையடிக்கும் அதிகார மையமாக மாறியதற்கு காரணம் நமது உளுத்துப்போன சட்டங்கள்தான். அதை ஏன் மாற்றவும் சீர்செய்யவும் முயலவில்லை. ஊழல் செய்து கொள்ளையடித்த நேருவை ஒன்றும் செய்ய முடியாது. நாட்டில் 99 சதவீதம் அரசியல்வாதிகள் நேருவைப்போன்றவர்கள்தான். லஞ்ச ஊழலை ஒழிப்பார் என்று மோடியையும் நம்பி பலனில்லை.
இதுதான் பிரச்சினை. எதற்காக காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. முதல்வர் சொல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாதா. இதை முதலில் ஒழிக்க வேண்டும்.
DGP Venkatraman is a dignified Watchman in CMs office.
யாருக்கும் வெட்கமில்லை.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் சாதாரண மிளகாய் வியாபாரம் செய்த கே என் நேருவின் குடும்பத்திற்கு இப்போது சுமார் மூவாயிரம் கோடிகளுக்கு மேல் சொத்து. விளங்கிடும் டுமிழ்நாட்டு தற்குறி மக்களின் எதிர்காலம்.
அந்த கடிதங்களை திமுக குப்பை தொட்டியில் போட்டு வெகு நாட்கள் ஆயிட்டு. நீதி மன்றத்தையே மதிக்காதவர்கள் ஈடி யின் கடிதத்தையா மதிக்க போறாங்க.
It is shocking that DGP Mr.Venkararaman is keeping mum in respect of corruption ges on Mr.Nehru. He is answerable to the people of Tamilnadu. UPSC shall strip him of his IPS Cadre and suspend him, if need be using the special powers of the President. Mr.Venkataraman is also be tried for abetting corruption.
சும்மா பேருக்கு தான் கடிதம்
ஒரு நடை டெல்லி போயிட்டு வந்தார். எல்லாம் சரிகட்ட படும்
ஊழல் செய்வது. ஒரு வழி
அவன மிரட்டி சம்மாதிப்பத
இன்னொரு வழி எல்லாம் அறிவர்கள்
ஊழலில் பாரபட்சம் காட்டக்கூடாது.
1000 ரூபாய் லஞ்சம் வாங்கும் ஒரு கடைநிலை ஊழியரை சிறையில் தள்ளும் நமது சட்டம், இந்த விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்?மேலும்
-
தத்துவத்தை சட்டமாக்க முடியாது; சமூகம் கடைபிடிக்க வேண்டும்; குறளாசிரியர் மாநாட்டில் அறிவுறுத்தல்
-
திமுகவை வீழ்த்த ஒரே குடும்பமாக செயல்படுவோம்: தினகரன் சந்திப்பில் பியுஷ் கோயல் உறுதி
-
டிரம்ப் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு; அவசரமாக தரையிறக்கினார் விமானி
-
வங்கதேசத்தில் அசாதாரண சூழல்... இந்திய அதிகாரிகளின் குடும்பங்களை திரும்ப அழைத்தது மத்திய அரசு
-
மீண்டும் தேஜ கூட்டணியில் அமமுக: தினகரனுக்கு இபிஎஸ் வரவேற்பு
-
வேறு தொகுதி வாக்காளர் சேர்ப்பு கரூரில் மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு