'அரசு பஸ்சில் இலவசமாக மனைவியோடும் காதலியோடும் ஆண்கள் ஊர் சுற்றலாம்': அ.தி.மு.க., மாஜி புதுவித விளக்கம்
சிவகாசி: “இனிமேல், மனைவியோடும் காதலியோடும் அரசு பஸ்சில் ஆண்கள் ஊர் சுற்றலாம்,” என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 'ஆண்களுக்கும் அரசு பஸ்சில் இலவச பயணம்' என அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தேர்தல் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் சிவகாசியில் நடந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:
எம்.ஜி.ஆர்., ஆட்சியைக் கொண்டு வருவதாக சிலர் கூறுகின்றனர். எம்.ஜி.ஆர்., ஆட்சியை அவரது தொண்டர்களால் மட்டுமே கொண்டு வர முடியும்.
அற்புதமான ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க., அறிவித்துள்ளது. பழனிசாமி ஆட்சிக்கு வந்த உடன், அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் மாதம் 2,000 ரூபாய் வரவு வைக்கும் திட்டத்தில்தான் முதல் கையெழுத்திடுவார்.
மகளிருக்கு மட்டும் இலவச பயண திட்டத்தை அறிவித்து, ஒன்றாக இருக்கும் குடும்பத்தில் கணவன் - மனைவியிடையே சண்டையிடச் செய்து தி.மு.க., அரசு பிரித்து உள்ளது.
பிரிந்த குடும்பங்களை சேர்க்கும் வகையில், ஆண்களுக்கும் இலவச பயணம் என்ற திட்டத்தை பழனிசாமி அறிவித்துள்ளார்.
இனிமேல், ஆண்கள் தங்கள் மனைவியோடும் காதலியோடும் அரசு பஸ்சில் சினிமாவிற்கு செல்லலாம், வணிக வளாகங்களுக்கு செல்லலாம், ஊர் சுற்றலாம்.
டில்லியில் மோடி ஆட்சி, தமிழகத்தில் பழனிசாமி ஆட்சி. இதுவே தமிழகத்திற்கு நல்லாட்சி தரக்கூடிய தருணம். சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்க, பிரதமர் மோடி ஏற்கனவே அடிக்கல் நாட்டிய நிலையில், தமிழக அமைச்சர் மீண்டும் அடிக்கல் நாட்டியது வேடிக்கை.
இவ்வாறு அவர் பேசினார்.
யார் இலவசம் எதுவும் இல்லை - அதற்கு பதிலாக சொத்துவரி, மின்சாரம், தண்ணீர் வரி, பிற வரிகள் குறைக்கப்படும் என்று சொல்கிறார்களோ அவர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும் இன்னும் எத்தனை நாள் நம்மை பிச்சை காரர்கள் போல் நடத்துவார்கள்? 1000 ருபாய் தரும் இடத்தில் மாதம் 50 கோடிக்கு 40 மாவட்டங்களில் SIDCO வில் தொழிற்சாலை தொடங்கி வேலை கொடுத்திருக்கலாம் தமிழ்நாட்டின் GDP உயர்ந்திருக்கும்
பொன்முடி ஓசி என கூறி கெட்ட பெயர் வாங்கியதற்கும் இந்த மனிதர் கூறுவதற்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? பொருளாதார ரீதியில் இந்த திட்டங்கள் எந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்று சிறிதும் யோசனை செய்யாமல் காதலியோடும் மனைவியோடும் ஆண்கள் ஊர் சுற்றலாம் என்று பேசும் பொறுப்பில்லாத மனிதர்கள் நாளை நிர்வாகத்தை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்படுவார்கள் என்பதுதான் வேதனையான விஷயம். தி மு க வீழும் என நினைத்து ஆனந்த படுவதா அல்லது இந்த மாதிரி மனிதர்கள் தான் அந்த இடத்தை நிரப்ப போகின்றார்கள் என வேதனை படுவதா தெரியவில்லை.மேலும்
-
திமுகவால் ஹிந்துக்களின் உயர் கலாசார நம்பிக்கைகளை சிதைக்க முடியாது; அண்ணாமலை
-
தத்துவத்தை சட்டமாக்க முடியாது; சமூகம் கடைபிடிக்க வேண்டும்; குறளாசிரியர் மாநாட்டில் அறிவுறுத்தல்
-
திமுகவை வீழ்த்த ஒரே குடும்பமாக செயல்படுவோம்: தினகரன் சந்திப்பில் பியுஷ் கோயல் உறுதி
-
டிரம்ப் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு; அவசரமாக தரையிறக்கினார் விமானி
-
வங்கதேசத்தில் அசாதாரண சூழல்... இந்திய அதிகாரிகளின் குடும்பங்களை திரும்ப அழைத்தது மத்திய அரசு
-
மீண்டும் தேஜ கூட்டணியில் அமமுக: தினகரனுக்கு இபிஎஸ் வரவேற்பு