திருச்சியில் மார்ச் 8ல் தி.மு.க., மாநில மாநாடு

சென்னை: தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

வரும் 26ம் தேதி, 'டெல்டா மண்டல வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு' தஞ்சாவூரில் நடக்கவுள்ளது.

இம்மாநாடு முடிந்ததும், பிப்., 1 துவங்கி, மார்ச் 8 வரை, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் 10 மகளிரை தேர்ந்தெடுத்து, அவர்கள் வாயிலாக, வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

வரும் பிப்., 11ல் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டல மாநாடு, தாம்பரம் படப்பையிலும்; பிப்., 14ல் வடக்கு மண்டல மாநாடு திருப்பத்துாரிலும்; பிப்., 21ல் தெற்கு மண்டல மாநாடு மதுரையிலும்; பிப்., 27ல் மேற்கு மண்டல மாநாடு கோவையிலும் நடத்தப்படும்.

மேலும், மார்ச் 8ல், திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும், 'ஸ்டாலின் தொடரட்டும்; தமிழகம் வெல்லட்டும்' என்ற மாநில மாநாடு நடத்தப்படும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement