தங்கம் அல்ல செம்பு என பதிவு செய்து சபரிமலையில் நடந்த திருட்டில் பித்தலாட்டம்
சென்னை: சபரிமலை அய்யப்பன் கோவில் நகைகளை திருட வசதியாக, தேவசம் போர்டு மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவன பதிவேடுகளில், 'சிலைகளில் இருந்தது செம்பு' என, பதிவு செய்ததற்கான ஆவணங்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 4.54 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சோதனை
இது தொடர்பாக, சென்னை மற்றும் கேரளாவில், பத்தினம்திட்டா, கர்நாடக மாநிலத்தில் உள்ள நகைக்கடை உள்ளிட்ட, 21 இடங்களில், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இச்சோதனையில், நகைகளை திருட ஏதுவாக, 'அய்யப்பன் கோவில் சிலைகளில் இருந்தது தங்கம் அல்ல செம்பு' என, தேவசம் போர்டு மற்றும் தனியார் நிறுவன பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு இருந்ததற்கான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து, அமலா க்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறை கதவுகள், துவார பாலகர் சிலைகளில், 42.80 கிலோ தங்க கவசம் இருந்துள்ளது.
கடந்த, 2019ல், தங்க கவசங்கள் கழற்றப்பட்டு, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த, புரோக்கர் உன்னி கிருஷ்ணன் போத்தி என்பவர் வாயிலாக, சென்னை அம்பத்துாரில் 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
அதற்கு முன், உன்னி கிருஷ்ணன் போத்தி மற்றும் தேவசம் போர்டு நிர்வாகிகள், 39 நாட்களாக, கோவிலுக்கு வெளியே தங்க கவசத்தை பதுக்கி வைத்து இருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளன.
நகைகளை திருட வேண்டும் என்பதற்காகவே, சென்னை அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கமுலாம் பூசப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தில் இருந்து, தங்கக் கவசங்கள் மீண்டும் சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, 38.26 கிலோ தான் இருந்துள்ளது.
பண பரிமாற்றம்
உன்னி கிருஷ்ணன் போத்தி, தேவசம் போர்டு நிர்வாகிகள், 4.54 கிலோ தங்கத்தை திருடி உள்ளனர். ஆனால், சென்னை அம்பத்துார் தனியார் நிறுவன பதிவேடுகளில், 'தேவசம் போர்டு நிர்வாகிகள் செம்பு கவசத்தை தான் கொண்டு வந்தனர். நாங்கள் தான், அதில் தங்கமுலாம் பூசினோம்' என, பதிவு செய்துள்ளனர்.
அதேபோல, தேவசம் போர்டு பதிவேடுகளிலும், 'துவார பாலகர் சிலைகள், கருவறை கதவுகளில் செம்பு கவசம் தான் போர்த்தப்பட்டு இருந்தது' என, பதிவு செய்து, பித்தலாட்டம் நடந்துள்ளது.
இப்படி தங்கம் திருடப்பட்டு, அதன் வாயிலாக, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளோம். 1.30 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து ஆவணங்கள், சென்னை தனியார் நிறுவனத்திடம் இருந்து 100 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
குற்றம் செய்தவர்களுக்கு இறைவனின் தண்டனை 7x7 49 ஜென்மங்களுக்கு தொடரும். குடும்பத்தை விட்டு ஏழ்மை போகாது. பணம் இருந்தும், ஆறு சுவை உணவு இருந்தாலும் சிலருக்கு உணவையே தொட முடியாது. பார்க்க மட்டுமே முடியும். கம்மிகளின் பித்தலாட்டம் இந்தியாவில் முடிவிற்கு வந்தது போல் சேட்டன் நாட்டிலும் முடியும் தருவாயில் உள்ளது.
தர்மம் அழியும் போது ஏழ்மை தலை தூக்கும். இயற்கை பேரழிவு உண்டாகும். இதை எல்லாம் அங்கே பார்த்தோம். உள்ளூரில் ஒரு வேலை இல்லை. ஆனால் எல்லா சேட்டனும் வெளி நாட்டில் போய் அடிமை வேலை செய்கிறான். வங்காளமும், சேட்டன் நாடும் நாட்டிற்கு மிக மோசமான தவறான உதாரணங்கள்.
காரணமின்றி காரியம் இல்லை. அந்த தங்க ஆபரணங்கள் மற்றும் கைங்கரியங்கள் ஐயன் சேவையில் இருக்கவேண்டிய காலம் முடிந்திருக்கலாம். அல்லது இந்த கொள்ளைக்கு உட்படுவதன் மூலம் ஒரு பெரும் திருட்டு கும்பல் அமைப்பு/ கட்சி/ சமூகம் அழிவுக்கு ஆட்படுவதற்கு விசையாக இருக்க வேண்டும் என்பது ஐயன் திருவுள்ளமாகவும் இருக்கலாம். ஆனால் அவனவன் செய்த தவறுகளுக்கு தண்டனை சத்தியமாக கிடைக்கும்..அவன் படும் பாடு அடுத்தவனுக்கு தெரிய வேண்டும் என்ற நியாயமில்லை. மக்கள் பார்வையில் பெருமையாவும் உள்ளே படும் சித்திரவதையை வெளிக்காட்ட இயலாமலும் வாய்விட்டு கதறக்கூட இயலாத நிலை நிச்சயம் உருவாக்கும். ஐயன் அனைத்தையும் அறிவான். ஸ்வாமியே சரணம் ஐயப்பா...
பக்தி பல்லிளிக்கிது..
பக்தி பல்லிளிக்காது எடுத்தவன் கையும் வாயும் இழுக்கும். சோமநாதர் கோவிலை இடித்தவன் ஆப்கான் கஸ்னி நகரத்தை பார்த்தாயா? குழந்தைக்கு பால் குடுக்க பெண்களுக்கு சக்தி இல்லை. தெருக்கள் எல்லாம் ஏழ்மை. ஒரு நாடே பிச்சை எடுக்கிறது.
இடிச்சவன் வேறே. கஷ்டப் படுவது பெண்கள். என்னாமா லாஜிக் உடறீங்க.
குழந்தை முதலில் எதையும் கற்பது தாயிடமிரூந்தே...தாயே முதல் ஆசான்.. பெண்கள் சரியாக இல்லாத சமூகம் பலவிதமான பிரச்சினைகளையும் சந்திக்கும்... கஜினி முஹம்மது வின் தாய் நேர்மையாக அறத்தோடு இருந்திருந்தால் கஜினி கொள்ளையனாக மாறியிருக்க வாய்ப்பு இல்லை..ஒரு ஜீஜா பாய் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவை உருவாக்கினாள்.குந்தவை நாச்சியார் ராஜராஜன் ராஜேந்திரனை செதுக்கி மகோன்னத சரித்திரம் படைக்க காரணமானாள் ஆனால், கஜினி முகமது வின் தாய்???...
ஐயப்பன் தண்டிப்பார் .சந்தேகம் இல்லை
அவர்கள் எதற்காக வாய் திறக்க வேண்டும். தேவசம் போர்டு வாய் திறக்க வேண்டும். சாமியையே திருடும் கும்பலுக்கு இது எம்மாத்திரம்
Any scandal in any state has a Tamilnadu connection. Why?
ராஜா, அண்ணாமலை, தமிழ், காட்டஸ்வரன் இந்த விஷயத்தில் வாயே திறக்க முடியாதா ?
சிவன் சொத்து குல நாசம். இதை கண்கூடாக பல குடும்பங்களை பார்த்துள்ளேன். நிச்சயம் இவர்களுக்கு தக்க தண்டனை உண்டு.
கிருஸ்தவர்கள் தான் சம்பாதிப்பதில் சர்ச்க்கு கொடுக்கவேண்டிய 10% போல ஐயப்பனிடம் நகைகளை கொள்ளையடித்து இருக்கிறார்கள். இதற்க்கெல்லாம் கர்ம பலன்களை உண்டு என்பதை இவர்கள் உணர வேண்டும்.மேலும்
-
கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்த முயற்சிகளுக்கு பலன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
ராகுல் மீது அதிருப்தி; காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த சசிதரூர்
-
தமிழகத்திற்கு ரூ.3,458 கோடி கல்வி நிதி எப்போது வரும்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆமதாபாத், நொய்டாவில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்
-
மிகப்பெரிய உத்வேகம் கொடுப்பவர் நேதாஜி; பிரதமர் மோடி
-
பிரதமர் மதுராந்தகம் வருகை; தேசிய நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்