பொங்கல் தொகுப்பை விரைவாக வாங்குங்க! வாங்காதவர்களுக்கு அழைப்பு
பொள்ளாச்சி: ''பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காத ரேஷன் கார்டுதாரர்கள், விரைவாக வந்து வாங்கி கொள்ளலாம்,'' என, மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில், 10.77 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, 3,000 ரூபாய் வழங்கி உள்ளது. 43 ஆயிரத்து, 409 ரேஷன் கார்டுதாரர்கள் வாங்கவில்லை. வாங்காதவர்களுக்கு கடந்த, 19ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
ரேஷன்கடை ஊழியர்கள், வாங்காத கார்டுதாரர்களை மொபைல் போனில் அழைத்து, தகவல் தெரிவிக்கின்றனர். சில கார்டுதாரர்களின் மொபைல்போன் எண்கள் பயன்பாட்டில் இல்லை என்பதால், தகவல் தெரிவிக்க முடியவில்லை என்கின்றனர்.
மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் கூறுகையில், ''பொங்கல் தொகுப்பு வாங்காமல் விடுபட்டவர்களுக்கு வழங்கி வருகிறோம்.
இரண்டு நாட்களில் 2,380 ரேஷன்கார்டுதாரர்கள் பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவாக வந்து வாங்கி கொள்ளலாம். தாயுமானவர் திட்ட பயனாளர்களும் வாங்கி கொள்ள லாம்,'' என்றார்.
மேலும்
-
கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்த முயற்சிகளுக்கு பலன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
ராகுல் மீது அதிருப்தி; காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த சசிதரூர்
-
தமிழகத்திற்கு ரூ.3,458 கோடி கல்வி நிதி எப்போது வரும்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆமதாபாத், நொய்டாவில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்
-
மிகப்பெரிய உத்வேகம் கொடுப்பவர் நேதாஜி; பிரதமர் மோடி
-
பிரதமர் மதுராந்தகம் வருகை; தேசிய நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்