இன்போசிஸ் நிறுவனர் பெயரில் மோசடி: எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்ட சுதா மூர்த்தி
நமது சிறப்பு நிருபர்
'நிதி முதலீடு தொடர்பாக நான் பேசியது போன்ற போலி வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. அதை யாரும் நம்பாதீர்கள். அந்த வீடியோ போலியானது' என சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி. இவர் இன்போசிஸ் அறக்கட்டளை தலைவராக உள்ளார். பல சமூக சேவைகள் செய்து வருகிறார். இவரது பெயரை பயன்படுத்திய மோசடி கும்பல், அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுகிறது.
குறைந்த முதலீட்டில் லட்சக்கணக்கான பணம் சம்பாதிக்கலாம் என்றும், சுதா மூர்த்தி, நாராயணமூர்த்தி, கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை ஆகியோர் இப்படி முதலீடு செய்துள்ளனர் என்றும், இணையதளத்தில் 'லிங்க்' பரப்பி மோசடி செய்கின்றனர்.
'பொதுமக்கள் யாரும் இத்தகைய மோசடியை நம்பி ஏமாறக்கூடாது' என்று நிதி வல்லுனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது:
வணக்கம், நான் சுதா மூர்த்தி. அனைவருக்கும் இதைத் தெரிவிப்பதில் நான் மிகவும் கவலையும் வேதனையும் அடைகிறேன்.
போலி வீடியோக்கள்
நீங்கள் பேஸ்புக்கில் பார்த்தால், போலி வீடியோக்கள் பரவி வருகிறது. 2,3 வீடியோக்கள் ஒரே நேரத்தில் பரவி வருகின்றன. அதில் நான் 200 டாலர்கள் அல்லது 20,000 ரூபாய் முதலீடு செய்தால், அதைவிடப் பல மடங்கு, அல்லது 10 மடங்கு அதிகமாகப் பணம் கிடைக்கும் என்று பேசுவது போல் உள்ளது. அதுபோன்ற ஒரு போலியான செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.
எனக்குத் தெரிந்த பல பேர் அதில் முதலீடு செய்து பணத்தை இழந்துவிட்டார்கள்.
முதலில் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், இது போன்ற வீடியோக்கள் பேஸ்புக்கில் வரும்போது, அவற்றை நம்பாதீர்கள். அது ஒரு போலியான செய்தி. நீங்கள் உங்கள் பணத்தை இழந்துவிடுவீர்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள், அல்லது விசாரித்துப் பாருங்கள், அல்லது வங்கியில் கேளுங்கள். அது போலியானது என்று அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள், அதன் பிறகு யோசித்து முடிவெடுங்கள். அதன் பிறகு முதலீடு செய்யுங்கள்.
நம்பாதீர்கள்
பொதுவாக, நான் ஒருபோதும் முதலீடு அல்லது பணம் சம்பந்தமான விஷயங்களைப் பற்றிப் பேசுவதில்லை. நான் இந்தியாவின் கலாசாரம் பற்றிப் பேசுகிறேன். நான் பெண்கள் மற்றும் கல்வி பற்றிப் பேசுகிறேன். நீங்கள் இவ்வளவு பணம் முதலீடு செய்தால், இவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது போன்ற விஷயங்களைப் பற்றி நான் ஒருபோதும் பேசுவதில்லை. அது ஒரு போலியான செய்தி. எனவே, கைகூப்பி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என் பெயரில் ஏதேனும் நிதி பரிவர்த்தனை வந்தால், அதை நம்பாதீர்கள்.
அது ஒரு போலியான செய்தி. அவர்கள் ஒரு வலையைப் விரித்து, உங்களை உள்ளே சிக்க வைப்பதற்காகக் காட்டும் சில பேராசைகளுக்காக, நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்காதீர்கள். அப்படிச் செய்யாதீர்கள். உங்கள் பணத்தைச் சேமித்து, புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், போலீஸ் ஸ்டேஷன் அல்லது வங்கிக்கு நேரில் செல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல் விடியோக்கள் பல நாட்களாக சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதுபோக மத்திய நிதியமைச்சர் அவர்கள் பேசுவதுபோலவும் நிறைய விடியோக்கள் வருகிறது. இதையெல்லாம் சம்பந்தப்பட்ட துறை கண்காணித்து தடுக்கவேண்டும்.
இன்போசிஸ் நிறுவன தலைவர் பெயரில் மோசடி நடக்கிறதா என்று நமக்கு தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு மோசடிக்காரர் என்பது மட்டும் உண்மை! நீலிக்கண்ணீர் என்றால் என்ன என்பதற்கு அர்த்தம் தெரியாதவர்கள் இந்த அம்மையார் சிந்தும் கண்ணீரை பார்த்து தெரிந்து கொள்ளலாம். சில மாதங்களுக்கு முன்பு (சரியான தேதி ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது) இந்த சத்தியவதி சாவித்திரியின் புருஷரான அரிச்சந்திரன் Infosys முதலாளி நாரயணமூர்த்தி என்பவர்
ஐடி ஊழியர்கள் கை நிறைய வாங்கும் சம்பளத்திற்கு தக்கன அவர்கள் தினமும்
எட்டு மணி நேரம் வேலை பார்ப்பதற்கு பதிலாக பத்து மணி நேரம் அதாவது வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்கிற முத்தை உதிர்த்து ஐடி ஊழயர்களின் கடும் கோபத்துக்கு ஆளானவர். வழக்கம் போல நான் கணக்கில் Week என்பதால் Daily பத்து மணி நேரம் என்பதும் வாரத்திற்கு 70 மணி நேரம் என்பதும் சரிதானா என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இந்த AI படுத்தும் பாடு! BBC AI நிகழ்ச்சியிலும் ஒரு பிரபல பேச்சாளர் இதே போல் சொன்னார்! உலகம் முழுவதும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது! எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு! என்கிற திருக்குறள் உடன் அந்த வீடியோ வும் உண்மையா என்று அறிந்து தெளிவதும் அவசியம்மேலும்
-
கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்த முயற்சிகளுக்கு பலன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
ராகுல் மீது அதிருப்தி; காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த சசிதரூர்
-
தமிழகத்திற்கு ரூ.3,458 கோடி கல்வி நிதி எப்போது வரும்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆமதாபாத், நொய்டாவில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்
-
மிகப்பெரிய உத்வேகம் கொடுப்பவர் நேதாஜி; பிரதமர் மோடி
-
பிரதமர் மதுராந்தகம் வருகை; தேசிய நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்