ஸ்டாலின் பணம் கொடுத்ததற்கு நேரடியான ஆதாரங்கள் இருக்கிறதா? தேர்தல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி
'தேர்தல் சமயத்தில், கொளத்துார் தொகுதியில் வாக்காளர்களுக்கு பட்டு வாடா செய்யப்பட்ட பணம், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுடையது என்பதற்கான நேரடி ஆதாரங்கள் இருக்கிறதா?' என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில் தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்தும், அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரியும், அந்த தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சைதை துரைசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனு, நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, துரைசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கடந்த, 2011ல் துணை முதல்வராகவும், தி.மு.க., பொருளாளராகவும் இருந்த ஸ்டாலின், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தார். 2011 ஏப்., 12ல் ஒரு வாகனத்தில் இருந்த, 1.80 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த பணம் கொளத்துார் தொகுதி வாக்காளர்களுக்கு வினியோகிக்க எடுத்துச் செல்லப்பட்டது. காவல் துறையினரும் உடந்தையாக இருந்தனர்' என வாதிட்டார்.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, துரைசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக பணம் வினியோக செய்யப்பட்டதாக வாதங்களை முன்வைத்தார்.
இதை ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் கடுமையாக மறுத்தார். இதைத் தொடர்ந்து, 'வீடியோ ஆதாரம் தொடர்பாக இருதரப்பு வாதங்களையும் ஏற்க போவதில்லை' என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.
'பணப் பட்டுவாடா தொடர்பான வீடியோ ஆதாரங்களின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்படவி ல்லை' என கூறினார்.
மேலும், 'வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பணம் ஸ்டாலினிடம் இருந்து நேரடியாக எடுத்துச் செல்லப்பட்டதா என்பதற்கான ஆதாரங்கள் இருக் கிறதா?' என, கேள்வி எழுப்பினர். அதற்கு சைதை துரைசாமி தரப்பில் இல்லை என பதில் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்., 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது
- டில்லி சிறப்பு நிருபர் -
வினோதமான கேள்வி
அப்போ பழைய 2000, 1000 ருவா நோட்ட குடுத்தாங்க. அதெல்லாம் நோட்பந்தில போயி, இப்ப ஆதாரமே இல்லை. இதுக்குற்றான் 2011 ம் வருஷக்.கேசை 2012 க்குள்ளேயாவது விச்சரிச்சு முடிக்கணும்கறது.
தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களை பார்த்தால் கபில் சிபல்க்கு பீஸ் கொடுக்குமளவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சொந்த வீடு கார் கூட இல்லை. ஒருவேளை இலவசமா ஆஜராகிறாரோ?
என்ன அப்பாவித்தனமான கேள்வி. கணம் கோட்டாருக்கு பணம் எப்படியெல்லாம் புகுந்து பாயும் என்று தெரியாதா. .நம்பிக்கை அறவே போய்விட்டது.
திமுகவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சொல்பவர்கள் இதுவரை என்றுமே ஆதாரங்கள் கொடுத்தது இல்லை.
விஞ்ஞான ஊழல் என ஏற்க்கனவே உறுதிபட தீர்வுத்திருக்கும் நிலையில், எந்த திராவிடனும் சாட்சியை வைத்து கொண்டோ ஆதாரங்கள் கிடைக்கும் வகையிலோ எந்த தப்பையும் செய்யமாட்டான். எனவேதான் இந்தமாதிரியான மொல் ..... .....தனைத்தை செய்பவர்கள்.திராவிடர்கள் என அறியப்படுகிறார்கள்
பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு எப்படி ஆதாரம் கொடுக்க முடியும். நீதிபதி வீட்டில் எரிந்த பணத்துக்கே பம்முகிறார்கள்.
டெல்லியில் சிட்டிங் நீதிபதி வீட்டில் நேரடியாகவே கட்டுக் கட்டாக பல லட்சங்கள் அல்லது கோடிகள் எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கண்டு பிடிக்கப் பட்டன .அதற்கே இதுவரை சம்மந்தப்பட்ட நீதிபதி மீது உரிய நடவடிக்கை இல்லை. இதன் மீது மட்டும் நீதி மன்ற நடவடிக்கை பாய்ந்து விடுமா என்ன?
அந்த ரூபாய்த்தாள்களில் காந்தியின் படம்தான் உள்ளது. எனவே அது ஸ்டாலினின் பணமில்லை. உண்மையில் வாழ்க்கையில் எவ்விதமான உருப்படியான வேலைக்கும் சென்றிராத ஸ்டாலினுக்கு சொந்தமாக பணம் இருந்திருக்க வாய்ப்பில்லை. சொந்த வீடோ காரோ கூட இல்லாத பரம ஏழை.
ஆதாரத்துடன் ஊழல் செய்ய ஸ்டாலின் ஜெ போன்றவரில்லை. விஞ்ஞான ஊழலின் தந்தையின் நேரடி வாரிசாக்கும்
வேலூரில் பூத் எண்களுடன் கட்டுக்கட்டாக ரூபாய் பிடிபட்ட போது அது திமுக வேட்பாளரின் இடத்தில் பிடிபடவில்லை. கட்சிக்காரங்க இடத்தில்தான் பிடிபட்டது எனக் கூறி பல ஆண்டுகளாக வழக்கை நகர விடவில்லை. மேலும் D துரைமுருகனும் வெறும் துரைமுருகனும் வெவ்வேறு ஆட்கள் ன்னு அபிடவிட். அதெப்படி அரசியல்வாதிகளிடம் இவ்வளவு மென்மையான அணுகல்?மேலும்
-
அரிய வகை கனிமங்கள் மாநாடு; பிப்ரவரி 4ல் அமெரிக்கா செல்கிறார் ஜெய்சங்கர்
-
சரிந்தது இந்திய அணி பேட்டிங் * நியூசிலாந்து முதல் வெற்றி
-
ஜனாதிபதி உரையில் தொலைநோக்கு சிந்தனை; துணை ஜனாதிபதி சி.பி.ஆர் கருத்து
-
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நிம்மதி: முடா வழக்கில் லோக் ஆயுக்தா அறிக்கையை ஏற்றது கோர்ட்!
-
அஜித் பவாருடன் பறக்கப்போகிறேன்; விமான பணிப்பெண் இறப்புக்கு முன் கடைசியாக சொன்ன வார்த்தை!
-
வாளையார் சோதனைச் சாவடியில் சிக்கிய ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள்; போலீசார் விசாரணை