இபிஎஸ் தலைமையில் சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம்; சொல்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் இபிஎஸ் தலைமையில் மாபெரும் வெற்றி பெறுவோம் என்று மத்திய அமைச்சரும், தமிழப பாஜ மேலிட தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;
தமிழகத்தைச் சேர்ந்த என் சகோதர சகோதரிகள் அனைவரும் பிரதமர் மோடியை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிரதமர் மோடி தலைமையில் உருவான வலுவான கூட்டணியின் உருவாக்கம் மற்றும் அதன் விரிவாக்கத்தால் இபிஎஸ் உள்ளிட்ட மற்ற தலைவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர்.
தமிழகத்தில் இபிஎஸ் தலைமையில் சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம். முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி தலைமையிலான இந்த ஊழல் நிறைந்த, திறமையற்ற திமுக ஆட்சியை வேரோடு அகற்றுவோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு பியூஷ் கோயல் பேட்டியளித்தார்.
வாசகர் கருத்து (2)
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
23 ஜன,2026 - 17:58 Report Abuse
ஏன் இதை ஸ்டாலினே சொல்லிவிட்டாரே 3 நாட்களுக்கு முன்பு "திமுக 200க்கு மேல் வெற்றி பெரும்" மொத்தம் 234 சீட் டாஸ்மாக்கினாட்டில் 200க்கு எல் 34 சீட் இருக்கின்றது இதன் அர்த்தம் திமுக 34 சீட் பெரும் என்று அர்த்தம் கொள்க 0
0
Reply
தமிழ் நாட்டு அறிவாளி - Chennai,இந்தியா
23 ஜன,2026 - 17:00 Report Abuse
எபிஸ் இன்னும் கொஞ்ச நாளில் திமுக ல சேரப்போகிறார். இது தெரியாம இன்னும் பேசுறீங்க தலைவரே 0
0
Reply
மேலும்
-
இளைஞர்களிடம் ஆசை காட்டி பணம் பறித்த பரமக்குடி பெண் கைது
-
'நியோ மேக்ஸ்' சொத்துகள் ஏலம் விட ஐகோர்ட் உத்தரவு
-
'விசில்' சின்னத்திற்கு நல்ல வரவேற்பு; காங்., எம்.பி., கார்த்தி வாய்ஸ்
-
பாலியல் தொல்லை 20 ஆண்டு சிறை
-
அரசு தொகுப்பு வீடுகளில் விரிசல்; குடியேற பழங்குடிகள் அச்சம்
-
திறன் மேம்பாட்டு பயிற்சி மத்திய அரசு ஒப்பந்தம்
Advertisement
Advertisement