பாலியல் தொல்லை 20 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் 53, மில் தொழிலாளி.

இவர் 2023ல் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் பால கிருஷ்ணனை கைது செய்தனர். ஸ்ரீவில்லி புத்துார் போக்சோ நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் ரூ. 8 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தும் நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.

Advertisement