சவுக்கு சங்கரின் இடைக்கால ஜாமினை ரத்து செய்ய மறுப்பு: கூடுதல் நிபந்தனைகளை விதித்தது ஐகோர்ட்
சென்னை: பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது. மேலும், அவருக்கு கூடுதல் நிபந்தனைகளை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட யு டியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கக்கோரி அவரது தாய் கமலா, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சங்கருக்கு மூன்று மாதங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி கடந்த டிச.,27 ம் தேதி உத்தரவிட்டனர்.
இந்த ஜாமினை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 19ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ' நீதிமன்றத்தை ' பிளாக்மெயில்' செய்து பணிய வைக்க முடியாது,' என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று(ஜனவரி 23) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கூடுதல் நிபந்தனைகளை பிறப்பித்தனர்.
அதன்படி,
* நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்கு குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் மின்னணு மீடியாக்களில் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கக்கூடாது
*சாட்சிகளை எந்த வகையிலும் தொடர்பு கொள்ளக்கூடாது. இந்த நிபந்தனைகளை மீறினால், இடைக்கால ஜாமின் ரத்து செய்யப்படும். சவுக்கு சங்கர், நீதிமன்ற நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
* ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் குழு அமைத்து, சவுக்கு சங்கரின் உடல்நிலையை ஆய்வு செய்வதுடன், அது குறித்த அறிக்கையை வரும் பிப்ரவரி 3ம் தேதி சீல் வைத்த கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தற்போதைய நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை ரத்து செய்ய முடியாது தெரிவித்தனர்.
சீக்கிரம் வா சங்கர் சிங்கமே....
தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் திமுக போலீசார் மாற்றம் செய்ய படுவார்கள். அதுவரை பொறுமையாக இருக்கவும்
ஒரு சின்ன ஆறுதல். ஜட்ஜுங்களுக்கு உண்மை நிலவரம் தெரியுது. அதுவரை திருப்தி. சங்கர் கணக்கில் திருட்டு தீயமுக கார்ன் தான் கேஸ் போட ஏதுவாக பணம் கட்டினான். கட்டி விட்டு சங்கர் மிரட்டினான் னு கேஸ் போட்டுட்டானுங்க. இதுதான் உண்மை. சங்கர் எவனையும் பணம் கேட்கவே.யில்லை. அப்புடி இருக்கும் போது இது புனையப்பட்ட கேஸுதானே. திருட்டு தீயமுக காரனுங்க பவிசு பல்லிளிக்குது. முன்பு பழ. கருப்பையா ஏதோ திருட்டு தீயமுகவை கம்மெண்ட் பண்ணினார் என்று இந்த களவாணி பயலுங்க அவரோட கார் வீடு எல்லாத்தையும் இரவில் போயி உடைச்சானுங்க. கர்மா திருப்பி அடிக்கும் என்பதை விரைவில் அனுபவிப்பானுங்க. ஷ்யூர்.
யோவ் சவுக்கு..தேர்தல் அறிவிக்கும் வரை சூதானமா இரு.
ஒட்டுமொத்த தமிழக காவல்துறையும் சவுக்கு சங்கருக்கு வேலைசெய்கிறது போலும். தமிழகத்தில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன, ஆனால் இது ஒன்றுதான் தலையாய பிரச்சனை என காவல்துறை மற்றும் அரசு துடிக்கிறது. இதில் சிறிதளவேனும் மற்ற பிரச்சனைகளில் அரசும் காவல்துறையும் கவனம் செலுத்தவேண்டும்மேலும்
-
தே.ஜ., கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மேடையேறிய தலைவர்கள்! இதோ முழு பட்டியல்
-
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் மோடி விளாசல்: தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக என தாக்கு
-
சுதந்திரச் சுடர்: மாவீரன் நேதாஜி
-
கரப்ஷன், மாபியா, கிரைம் மிகுந்த திமுக ஆட்சி; பிரதமர் மோடி காட்டம்
-
அறியாமையை காட்டி அசிங்கப்படும் ராகுல்; பொருளாதார வளர்ச்சியை மீண்டும் குறை சொல்கிறார்!
-
இபிஎஸ் - தினகரன் இருவரும் பிரதமர் முன்னிலையில் கைகுலுக்கிய சுவாரஸ்யம்!