இபிஎஸ் - தினகரன் இருவரும் பிரதமர் முன்னிலையில் கைகுலுக்கிய சுவாரஸ்யம்!
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் ஒரே மேடையில் இருந்த இபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். எந்த அழுத்தமும் இன்றி இந்த கூட்டணியில் அமமுக இணைந்தது என்று பின்னர் டிடிவி தினகரன் பேசினார்.
தொடர்ந்து டிடிவி தினகரன் பேசியதாவது:
இன்றைக்கு வசந்த பஞ்சமி. தை மாதம் பிறந்த பிறகு வழி பிறக்கும் என்பார்கள். அதிலும் இந்த வசந்த பஞ்சமி என்பது உலகத்தையே இயக்குகின்ற சக்தியும் ஆற்றல் பெருக தொடங்குகின்ற நாள் என்பது நமது மக்களின் நம்பிக்கை.

தொடர்ந்து 3 முறை பிரதமராக இந்திய மக்களால் தேர்வு செய்யப்பட்டு, இந்தியாவை உலக அரங்கில் ஒரு சிறந்த இடத்திற்கு உயர்த்திக் கொண்டு இருக்கிறார் பிரதமர். தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிற மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அமமுக இந்த கூட்டணியில் வரவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.
நாங்கள் முழு மனதோடு, தமிழகத்திலே தேசிய ஜனநாயக கூட்டணியை ஏற்றுக் கொண்டு (எதிர்க்கட்சி, தலைவர் அண்ணன் இபிஎஸ் என்று கூற, தொண்டர்கள் தரப்பில் ஆரவாரம்) இங்கே வந்திருக்கிறோம். நாங்கள் எல்லாம், ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்து விட்டார்கள். எம்ஜிஆர் வழிவந்தவர்கள். எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது என்பது உண்மைதான்.
ஆனால் தமிழகத்தின் நலன் கருதியும், அமமுக நலன்களை கருதியும் பிரதமர் அழைப்பை ஏற்று நாங்கள் எங்கள் மனதில் இருந்த கோபதாபங்களை எல்லாம் விட்டுவிட்டு வந்திருக்கிறோம்.
2021ல் நம்மால் முடியாமல் போன ஜெயலலிதாவின் ஆட்சியை உறுதியாக தமிழகத்தில் ஏற்றிட, உருவாக்கிட எந்த ஒரு மனமார்ச்சயமும் இன்றி, எந்த ஒரு தயக்கமும் இன்றி எந்த ஒரு குழப்பமும் இன்றி, எந்த ஒரு அழுத்தமும் இன்றி நாங்கள் இந்த கூட்டணியில் இணைத்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த கூட்டணியின் வெற்றிக்காக அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும், தமிழகம் முழுவதும் அயராது பாடுபடுவான் என்கிற உறுதியை பிரதமருக்கும், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்சுக்கும் இந்த நேரத்தில் நான் சொல்லிக் கொள்கிறேன். ஒரு விஷயத்திலே எதிர்ப்பது என்றால் அதிலும் உறுதி, ஆதரிக்க வேண்டும் என்றால் அதிலும் உறுதியாக இருக்க வேண்டும் என்ற தன்மையை ஜெயலலிதா எங்களுக்கு தந்திருக்கிறார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், பங்காளிகளாக இருந்தவர்கள். நாங்கள் எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்து இருந்தோம் என்பது உண்மை. இன்றைக்கு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு பிரதமர் தமிழகத்தில் ஒரு மக்களாட்சியை உருவாக்க வேண்டும், எம்ஜிஆர் ஆட்சியை உருவாக்க வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சியை உருவாக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் இன்றைக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிற மக்கள் விரோத குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக நாங்கள் முழு மனதுடன் இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என்பதை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு தமிழகமே ஒரு கொள்ளை நாடாக, கொலை நாடாக மாறிக் கொண்டு இருக்கிறது.எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை மருந்தின் மையமாக தமிழகம் மாறிக் கொண்டு இருக்கிறது என்பது வேதனைக்குரியது.
மாற்றுத்திறனாளிகள் கூட போராடுகிற நிலைக்கு இன்றைக்கு தமிழகம் இருக்கிறது. இங்கே மக்கள் எல்லாம் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலினோ மகன் உதயநிதியை முதல்வராக்க துடித்துக் கொண்டு இருக்கிறார். அந்த குடும்ப ஆட்சியை உறுதியாக நாம் முறியடிப்போம். தமிழகத்தில் மக்களாட்சியை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம்.
இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.
வாசகர் கருத்து (8)
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
24 ஜன,2026 - 03:15 Report Abuse
எடப்பாடி, தினகரன் இருவரையும் இணைத்துவைத்த பெருமை பிஜேபிக்கே சேரும். தீயசக்தியை ஒழிக்க, அமித் ஷாவின் வியூகம் தொடங்கியது. திமுகவின் கடைசி முதல்வர் என்ற பெருமையை ஸ்டாலின் பெறுவார். 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
23 ஜன,2026 - 17:48 Report Abuse
அரசியலின் தரம் தமிழ்நாட்டில் வளரவில்லை. அதற்கு மக்களை தான் குறை சொல்ல வேண்டும். 0
0
Reply
பாமரன் - ,
23 ஜன,2026 - 17:09 Report Abuse
இப்படில்லாம் பேசலன்னா பிச்சிப்புடுவேன் பிச்சி அப்பிடின்னு சீபீபீபீபீ மூலம் பீப்பி ஊதிங் செஞ்சதா கேள்வி... இருநூறு சொல்லி திட்ட பகோடாஸ் வெல்கம் 0
0
Thravisham - Bangalorw,இந்தியா
23 ஜன,2026 - 17:23Report Abuse
ஓசி பிரியாணி சாப்பிட்டு குவாட்டர் அடித்த மயக்கம். வேறென்ன 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
23 ஜன,2026 - 16:55 Report Abuse
ஒருத்தர் அமெரிக்க அதிபர். இன்னொருத்தர் ரஷ்ய அதிபர். முதல் தடவை சந்திக்கறாங்களா. 0
0
முருகன் - ,
23 ஜன,2026 - 17:08Report Abuse
சாரியன கருத்து
இருவரும் அமைதிப்படை மணிவண்ணன் சத்யராஜ் மாதிரி
மக்கள் சிந்திக்க வேண்டும் 0
0
Keshavan.J - Chennai,இந்தியா
23 ஜன,2026 - 17:53Report Abuse
பப்பு தாய்லாந்து அதிபர், சுடலை கொளத்தூர் அதிபர் ரெண்டுபேரும் கைகுலுக்கி கொள்ள போகிறார்கள். என்ன அவங்க ரெண்டு பெரும் சேர்த்தது காண்ட இருக்க. ஞானம் இல்லாத சுப்பிரமணி 0
0
T.sthivinayagam - agartala,இந்தியா
23 ஜன,2026 - 20:05Report Abuse
இதற்கு முன் முன்னாள் முதல்வர்கள் பன்னீர்செல்வம் பழனிச்சாமி கை குலுக்கி ய சம்பவத்தையும் பாஜக நடத்தியுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 0
0
Reply
மேலும்
-
ஈர நில பாதுகாப்பு தினத்தையொட்டி ஓவியம், ஸ்லோகம் எழுதும் போட்டி
-
ரூ. 40 கோடியில் மீன் இறங்கு தளம் அமைக்கும் பணிகள்... தீவிரம்; கிள்ளையை சுற்றியுள்ள 8 கிராம மீனவர்கள் மகிழ்ச்சி
-
கேரளாவில் தே.ஜ., கூட்டணியில் இணைந்தது 'டுவென்டி 20' கட்சி
-
சிமென்ட் சாலை அமைக்க பூமி பூஜை
-
நம்பியூரில் இலவச சைக்கிள் வழங்கல்
-
பல்லாங்குழி ரோடு பள்ளங்கள் மூடல்
Advertisement
Advertisement