இளம்பெண் மாயம்

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த கள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகள் பிரியதர்ஷினி,19; இவர் கடந்த 24ம் தேதி இரவு வீட்டில் துாங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது பிரியதர்ஷினி வீட்டில் இருந்து மாயமானார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement