கஞ்சா பறிமுதல் இருவர் சிக்கினர்
திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே, கடந்த 25ம் தேதி திருவள்ளூர் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.
அவரது உடைமையை செய்தபோது கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த ஜகத் பத்ரா, 22, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, ஜகத் பத்ரா அளித்த தகவலின்படி, தலைமறைவாக இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் குமார் என்ற ராஜ் ஷோத்ரி, 28, என்பவரை, மதுவிலக்கு போலீசார் நேற்று கைது செய்தனர்.
இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்: தி.மு.க.,வுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
-
நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் 7,500 படுகொலைகள்: அன்புமணி ஆவேசம்
-
தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய முடியாது: சுப்பிரமணியன்
-
அய்யப்பன் கோவில் தங்க கவசத்தை வீட்டில் வைத்து பூஜை செய்த நடிகர்
-
இதே நாளில் அன்று
-
எந்த வகையில் நியாயம்?
Advertisement
Advertisement