திருப்பதி லட்டுக்கு கலப்பட நெய் பயன்படுத்தி ரூ.250 கோடி ஊழல்; சிபிஐ குற்றப்பத்திரிகை
புதுடில்லி: திருப்பதி லட்டுக்கு கலப்பட நெய் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட
ஊழலில், தேவஸ்தான அதிகாரிகள், பால் பண்ணை நிபுணர்கள் உட்பட 36 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் ரூ.250 கோடி ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவின் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் வழங்கும் லட்டு தயாரிப்பில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. ஆய்விலும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடந்து வந்தது. இந்த குழு நெல்லூர் நீதிமன்றத்தில் 223 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. தேவஸ்தான அதிகாரிகள் 9 பேர், 5 பால் பண்ணை நிபுணர்கள் உட்பட 36 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
* லட்டு தயாரிப்பதற்கு பாமாயில், எண்ணெய் ஆகியவை கலக்கப்பட்டு உள்ளது. மணல் மற்றும் நிறத்திற்காக அசிட்டிக், லாக்டிக் அமிலம் மற்றும் செயற்கை திரவியங்கள் கலப்படம் செய்யப்பட்டு உள்ளது.
* உ.பி, மஹாராஷ்டிரா, திருப்பதியில் உள்ள நிறுவனங்களில் இருந்து ஒட்டுமொத்தமாக 6 ஆண்டுகளில் 68 லட்சம் கிலோ கலப்பட நெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 250 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது.
* உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும் லஞ்சம் பெற்றுக் கொண்டு கலப்பட நெய்க்கு தரச் சான்று வழங்கப்பட்டு இருக்கிறது.
* விஜயவாடாவைச் சேர்ந்த பாரத் பாய் தாக்கூர் மூலம் ரூ.12.55 கோடி ரொக்கமும், சென்னையில் மதரம் தேவாசி மூலம் ரூ.7.31 கோடியும் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. திருப்பதி லட்டு தயாரிப்பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.
வாசகர் கருத்து (9)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30 ஜன,2026 - 22:16 Report Abuse
திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்து ஊழல். சபரிமலை அய்யன் சன்னதியில் தங்கம் திருட்டு. திருப்பரங்குன்றம் முருகன் மலையில் அசைவ உணவு உண்ணுகிறார்கள். கோவில் சொத்துக்களை திருடும் திமுக போன்ற அரசியல் கட்சிகள். இப்பொழுதெல்லாம் மக்கள் கடவுளுக்கும் பயப்படுவதில்லை. கடவுளின் விஷயத்தில் கூட கலப்படம், கள்ளத்தனம், திருட்டு. கலிகாலம் முத்திப்போச்சு. 0
0
Reply
veeramani - karaikudi,இந்தியா
30 ஜன,2026 - 20:42 Report Abuse
கடவுளின் பிராசாதத்தில் கலப்படம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது .
இந்திய ஹிந்துக்களின் பக்தியை சாக்கடையாக்கிவிட்டனர். இதில் சம்பத்தப்பட்டவர்களின் பேங்க் கணக்கு, அவர்களது குடும்பத்தினரின் போன்றவற்றில் தகுந்த தண்டனை உடனடியாக கொடுக்கப்படவேண்டும் 0
0
Reply
Mario - London,இந்தியா
30 ஜன,2026 - 16:30 Report Abuse
கோவிந்தா ....கோவிந்தா ....கோவிந்தா 0
0
Reply
Vel1954 Palani - ,இந்தியா
30 ஜன,2026 - 16:06 Report Abuse
கோயில் நிர்வாகம் உள்ளடி கள்ளன்.
கோயிலுக்கு வந்த நெய்யை சோதிக்காதது நிர்வாகத்தின் குற்றம். தேன் எடுப்பவன் புறங்கை நக்கிய கதைதான் . 0
0
Reply
தமிழ் நாட்டு அறிவாளி - Chennai,இந்தியா
30 ஜன,2026 - 15:33 Report Abuse
ஆனால் திருப்பதி கோவில் சார்பில் மறுப்பு தெரிவித்தார்களே. அப்போ பூசாரி பொய் சொல்லி இருக்கார். 0
0
Reply
அப்பாவி - ,
30 ஜன,2026 - 15:24 Report Abuse
பக்தியோடு கலப்படம் செய்து அடிச்ச பணத்தில் பத்து பர்சண்ட் உண்டியலிலும் போட்டிருப்பார்கள். ரொம்ப வருஷமா பக்தி ஊழல். 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
30 ஜன,2026 - 15:17 Report Abuse
இன்று திருப்பதியில் தாயாரித்து வழங்கப்படும் லட்டுகள் எப்படி..? கலப்பமில்லாமல் பக்தர்களுக்கு கிடைக்கிறதா. இதை பரிசோதித்து உறுதிப்படுத்த வேண்டும். 0
0
SANKAR - ,
30 ஜன,2026 - 15:34Report Abuse
UP Maharashtra firms supplied adulterated ghee.Stalin CM of both States.Must resign 0
0
சரவணன்,துறையூர் - ,
30 ஜன,2026 - 15:34Report Abuse
நீ வேணா திருப்பதி போய் சோதனை பண்ணிட்டு வா... 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement