எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் தக்க பதிலடி; அதிபர் டிரம்புக்கு ஈரான் பதில்
டெஹ்ரான்: ஈரான் தனக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் உடனடியாக தக்க பதிலடி கொடுக்கும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி தெரிவித்தார்.
மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்காவும் இடையே ஏற்கனவே பதற்றமான உறவு உள்ளது. இந்நிலையில், ஈரானில் அரசுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போராட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்தார். போராட்டக்காரர்களை ஒடுக்கினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இத்துடன் நிற்காமல், போர் கப்பல்களை ஈரான் கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் அல்லது கடந்த முறை விட மோசமான ராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார். தற்போது ஈரான் தனக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் உடனடியாக தக்க பதிலடி கொடுக்கும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு 12 நாள் போரிலிருந்து அமெரிக்கா எங்களிடம் தக்க பாடங்கள கற்றுக்கொண்டது.
எங்கள் துணிச்சலான ஆயுதப் படைகள், எங்கள் அன்பான நிலம், வான் மற்றும் கடல் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் உடனடியாகவும், சக்திவாய்ந்ததாகவும் பதிலளிக்க தயாராக உள்ளன. அணுசக்தி தொழில்நுட்பத்திற்கான ஈரானின் உரிமைகளை உறுதி செய்தால் நியாயமான மற்றும் சமமான அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். இவ்வாறு சையத் அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார்.
நேரடியாக ட்ரம்புக்கு முயற்சி செய்யுங்கள் அவன் இருக்கும் வரை மனித குலம் நிம்மதியாக வாழ முடியாது.
முன்பு இராக், லிபியா, ஆப்கானிஸ்தான் இவங்கள அடக்கியதுபோல ஈரானையும் அடக்கலாம் என்றால், அதுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் அதிக விலை கொடுக்க வேண்டிவரும், சிலசமயம் வியட்நாம் போர்போல பெருநஷ்டத்துடன் திரும்பி போக வேண்டி வரும், கள நிலவரம், இராக், லிபியா போல இரான் தனித்து விடப்படவில்லை. இப்பவெல்லாம் பெரிய சக்திவாந்த ஏவுகணைகளை, விமானங்களை ஒரு சாதாரண டிரோன் மூலம் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கு.
சும்மா பூச்சாண்டி காட்டி மிரட்டி வருகின்றனர் ஏதாவது பண்ணுங்க இரண்டு பேரின் திமிரும் அடங்கனும்
அன்னிய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டியது. அதற்கு எதிர் வினையாக அமெரிக்காவுக்குள் பயங்கரவாத தாக்குதல். இதனால் யாருக்கு நன்மை? யூக வணிகர்களுக்கு மட்டுமே. பொது மக்களுக்கு எப்போதும் துன்பம்தான்.மேலும்
-
தமிழக சட்டசபை தேர்தல்; சட்டப்பாதுகாப்பு குழு அமைத்தார் விஜய்
-
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த பேச்சு இறுதிக்கட்டம்; பியுஷ் கோயல் தகவல்
-
கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் இரும்புக்கரம்; முதல்வரை சாடிய நயினார் நாகேந்திரன்
-
தலித் அதிகாரி பணியாற்றியதால் ஆத்திரம்: மாட்டுச் சாணத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்த திமுக தொழிற்சங்க நிர்வாகி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க