மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுங்கள்; எம்.பி.,க்களுக்கு மோடி அறிவுரை
புதுடில்லி: ''எம்.பி.,க்கள், மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும், மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் இடமாக பார்லிமென்ட் இருக்க வேண்டும்' என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
* இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்பிக்கள் செயல்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபட வேண்டும்.
* மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் விதமாக பார்லிமென்ட் திகழ வேண்டும். எதிர்பார்ப்புகளை எம்பிக்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
* ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு எப்போதும் மத்திய அரசு தயாராகவே இருக்கிறது.
* பார்லிமென்ட் எம்பிக்கள் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
* ஜனாதிபதியின் உரை 140 கோடி மக்களின் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது.
* ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒப்பந்தம் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.
* விவசாயிகள், இளைஞர்கள், மீனவர்கள் இந்த ஒப்பந்தத்தால் பயன் அடைவார்கள்.
* நீண்ட கால பிரச்னை என்ற நிலை மாறி நீண்ட கால தீர்வு என்ற நிலையை எட்டி இருக்கிறோம்,
* 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
* பல்வேறு சீர்த்திருத்தங்கள் மேற்கொண்டு நீண்ட கால வளர்ச்சிக்கு வழி வகுக்கிறோம்.
* தடைகளை தாண்டி, தீர்வுகளைக் காண வேண்டிய நேரம் வந்துவிட்டது.
* நலத்திட்ட உதவிகள் மக்களைச் சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்கிறது.
* நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் நாங்கள் நடவடிக்கை எடுக்கும்போது, எங்கள் முன்னுரிமை எப்போதும் மனிதர்களை மையமாகக் கொண்டதாகவே இருக்கும்
* தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா மீதான நம்பிக்கை உலக அளவில் அதிகரித்துள்ளது.
* நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தனது தொடர்ச்சியான ஒன்பதாவது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார். இத்தகைய ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்திய நாட்டின் ஒரே பெண் நிதியமைச்சர் அவர்தான்.
* இது இந்திய ஜனநாயகத்தின் ஒரு மிகவும் பெருமைக்குரிய அத்தியாயம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
வாசகர் கருத்து (12)
நிருபமா - ,
29 ஜன,2026 - 15:02 Report Abuse
அடடே... நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் அளவுக்கு இறங்கி வந்துட்டாரே. என்ன எளிமை. என்ன எளிமை. 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
29 ஜன,2026 - 15:50Report Abuse
அடடே.. டமில் நாட்டுல முகஸ் பூமராங் திட்டங்களை தினம் ஒண்ணா அறிவிச்சு குட்டி கரணம் ஒன் டூ த்ரீ ன்னு பேத்தி கிட்டு இருக்காரே. அதுவும்தானே. ஆமாம் அதுவும் தான். அது எதுக்கு? புட்டுக்கும் ன்னு தெரிஞ்சும் புறம் புட்டுக்காம இருக்கத்தானே. க உ பீஸ் கள் டமில் நாட்டை பத்தி வாயை தொறக்க மாட்டானுங்க. ஏன்னா புலீஸ் ஏவலர்களை வச்சி வாயில் பெரீய்ய பன் வச்சி அடைச்சிடுவாய்ங்க. முழுங்கவும் முடியாது. துப்பவும் முடியாது. 0
0
vivek - ,
29 ஜன,2026 - 22:49Report Abuse
கால் கடுக்க வரிசையில்.நின்று மூவாயிரம் ஒரு கரும்புந்துண்டு வாங்கியாசா 0
0
Reply
அப்பாவி - ,
29 ஜன,2026 - 15:01 Report Abuse
ஆமா. சீக்கிரம் பாஞ்சி லட்சத்தை கண்ணுல காமிங்க. 0
0
vivek - ,
29 ஜன,2026 - 20:38Report Abuse
அப்புசாமி அதுக்கு நீ உழைக்கணும் ...இருநூறு மட்டும் நம்பி இருக்காதே 0
0
Reply
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
29 ஜன,2026 - 13:35 Report Abuse
தமிழகத்திற்கு கடந்த 10 வருடமாக என்ன ரயில்வே திட்டம் கொண்டு வந்திங்க ? புதிய ரயில்வே பாதை ஏதும் அமைக்க பட்டதா ? 0
0
Reply
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
29 ஜன,2026 - 12:27 Report Abuse
2029 இல் புட்டுக்கும் என்கிற பயம் வந்துருச்சு ..... 0
0
Reply
பாலாஜி - ,
29 ஜன,2026 - 11:16 Report Abuse
எம்.பி.க்கள் இதுவரை நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவில்லை .... 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
29 ஜன,2026 - 16:12Report Abuse
டமில் நாட்டு அலிபாபாவும் நாப்பது திருடர்களும் என்ன செஞ்சாங்க ன்னு இந்தியா பூராவுக்கும் தெரியுமே. இவிங்க தானே 120 வெட்டி எம் பி க்களை ஒண்ணா சேர்த்து மனு தயார் பண்ணி கையெழுத்து போட வச்சி நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யணும்ன்னு பார்லிமென்ட் ல் மனு குடுத்தாங்க. இது எவ்ளோ பெரீய்ய விஷயம். அந்த அசாத்திய துணிச்சல் கொண்ட எம் பி க்களுக்கு பாராட்டு விழா கூட ரெடியாயிட்டுது. ஆனா பாருங்க பார்லிமென்ட் அந்த மனுவை குப்பையில் போட்டிருச்சி.. 0
0
Reply
சுந்தர் - ,
29 ஜன,2026 - 11:03 Report Abuse
பின்னாடி இருக்கற முருகன் மாதிரி ஆட்களை வைத்திருந்தால் எப்படி நாட்டின் வளர்ச்சி நீங்க நினைக்கிற மாதிரி வேகமாக நடக்கும்? 0
0
vivek - ,
29 ஜன,2026 - 11:36Report Abuse
திருட்டு திராவிட கும்பல் விட முருகன் தேவலை 0
0
SUBBU,MADURAI - ,
29 ஜன,2026 - 11:43Report Abuse
இந்த முருகன் ஒரு தலித் (அருந்ததியர்) என்பதால் மட்டுமே பாஜக அரசு அவருக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு, கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் பதவியை கொடுத்துள்ளது. உண்மையில் அவர் இந்தப் பதவிக்கு தகுதியில்லாதவர் என்பதுதான் உண்மை. போட்டோவுக்கு Pose கொடுப்பது மட்டுமே இவரது முழுநேர வேலையாகும். 0
0
Reply
மேலும்
-
தெளிவான அரசியல் நிலைப்பாடு கொண்டவர் ராகுல்: சொல்கிறார் சசி தரூர்
-
அசாமில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவார்கள்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
-
திருப்பதி லட்டுக்கு கலப்பட நெய் பயன்படுத்தி ரூ.250 கோடி ஊழல்; சிபிஐ குற்றப்பத்திரிகை
-
வெடிகுண்டு மிரட்டல்; ஆமதாபாத்தில் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்
-
திருடப்பட்ட சோழர் கால சிலைகள்; இந்தியாவிடம் ஒப்படைக்கிறது அமெரிக்கா
-
பிப்ரவரி 5ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை; இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த திட்டம்
Advertisement
Advertisement