வெறும் காற்றில் நாய் காப்பகங்களை கட்டுவதா? தமிழகம் உட்பட பல மாநிலங்கள் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி
தெருநாய்கள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளின் வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. ஒரு வாரத்திற்குள், அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான மனுக்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டில்லியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வந்த நிலையில், அது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் துவக்கத்தில், டில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் இருந்து தெருநாய்களை அப்புறப்படுத்தும்படி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக நாய் பிரியர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த விவகாரத்தை நாடு முழுதும் விரிவுபடுத்திய உச்ச நீதிமன்றம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை வழக்கில் சேர்த்தது.
கடந்த ஆண்டு நவ., 7ல் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தெருநாய்கள் தொல்லை, அவற்றை கட்டுப்படுத்த அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில், தெருநாய்கள் வராமல் தடுக்க வேலி அமைக்கும்படியும் அறிவுறுத்தியது. இவ்வழக்கு, நேற்றும் விசாரணைக்கு வந்தது.
நாய் பிரியர்கள், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், விலங்குநல ஆர்வலர்கள், மத்திய - மாநில அரசுகள் என அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு விசாரித்தது.
* முன்னதாக, நாய்க்கடி விவகாரம் குறித்து ஆலோசனை தெரிவிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கவுவ் அகர்வால், “ஆந்திராவில் மட்டுமே தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு நாள்தோறும், 1,619 நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்படுகின்றன. இதற்காக ஆந்திரா முழுதும், 39 கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகின்றன,” என தெரிவித்தார்.
* தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், 'தெருநாய்களுக்கு காப்பகங்களை உருவாக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஆண்டுக்கு 35,000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. 'தலா, 120 நாய்களை பராமரிக்கும் வகையில், 72 நாய் காப்பகங்கள் மாநிலம் முழுதும் அமைக்க 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
'மாநிலம் முழுதும் ஒரு நாய் காப்பகம் கூட இல்லையா?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் 'தமிழகத்தில் விலங்குகள் காப்பகங்கள் உள்ளன. ஆனால், அவற்றின் திறன் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. மேலும், இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது' என கூறினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி கள் முன்வைத்த கருத்து:
* தெருநாய்களை பிடித்து கருத்தடை ஊசி செலுத்துவது போன்ற நடவடிக்கைகளை, மாநில அரசுகள் முறையாக மேற்கொள்ளவில்லை.
* நாய்களுக்கான காப்பகங்கள் அமைப்பது, கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வெறும் காற்றிலேயே கட்டடம் கட்டப்பட்டுள்ளது
* நாய்க்கடி தொடர்பாக, அசாமில் இருந்து வரும் தரவுகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. கடந்த 2024ல் மட்டும் அம்மாநிலத்தில் 1.66 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அப்படி இருந்தும், அம்மாநிலத்தில் ஒரேயொரு நாய் காப்பகம் மட்டுமே இயங்கி வருகிறது
* நாய்களின் இனப் பெருக்கத்திற்கேற்ப, கருத்தடை மையங்களை புதிதாக அமைக்க வேண்டும்
* தெருநாய்களை கண்டுபிடிக்கும் திறன் பெற்றவர்களையும், உதவிக்காக மாநில அரசுகள் சேர்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு கருத்து தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். ஒரு வாரத்திற்குள், அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக தங்களது மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -
டெல்லியில் மனிதர்களால் ஏற்படும் காற்றுமாசுவை தடுக்க வக்கு இல்லாத இந்த நீதிமன்றம் நன்றியுள்ள ஜீவனின் மேல் ஏன் இவ்வளோ வன்மம்.
உண்மையில் மனிதர்கள் மேல் அக்கறையுள்ள நீதிமன்றம் முதலில்
மதுவையும், புகையிலை பொருட்களை முற்றிலும் தடைசெய்து விட்டு பிறகு ஐந்தறிவு ஜீவன் மேல் நடவடிக்கை எடுக்கட்டும்
பேராசை பிடித்த மனித இனத்தால் உலகம் நாசமாகி வருகிறது
தெரு நாய்களுக்கு மட்டுமா தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை?மனிதர்களுக்கே பாதுகாப்பு இல்லை. பால்வடியும் சிறு பெண்குழந்தை முதல் பல்லுபோன பாட்டிவரை......கொடூரத்தை(வெட்கக்கேடு) சந்திக்கின்றனர்.
அருமை. வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் குழந்தைகள் மீது பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. இதற்கு பொங்காத இங்கு கருத்து பதிவிட்டுள்ள மக்கள் . நாய்கள் மீது பொங்குகின்றனர். ஏன் என்றால் கருமம் பிடித்த சமுதாயம் அப்படி உள்ளது. மதுவுக்கும், பணத்துக்கும், பெண்கள் சதைக்கும் பேயாய் அலைகிறான்.
விஜய் பிரசாரத்தில் ஒரே நாளில் 41 பேர் இறந்தனர். இந்த நாய்கள் இது நடந்தது. பொறுப்பற்ற மனிதனுக்கு முதலில் ஒழுக்கமும் , நேர்மையும் இந்த மரியாதைக்குரிய நீதிபதிகள் நடவடிக்கை எடுக்கட்டும். மனிதர்களால் பல உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் மக்கள் மீது அக்கறை இல்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தான் மட்டும் பாதுகாப்பாக விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்து கொண்டு பாதுகாப்புக்கு காவல்துறை வைத்துக்கொண்டு வரிப்பணம் செலுத்தும் மக்களை நாய் கடிக்கு ஆளாக்கி அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாகி பச்சிளம் குழந்தைகளை நாய்கள் வேட்டையாடும் நிலைமைக்கு உண்டாக்கி இருசக்கர வாகனங்களில் செல்லும் அன்றாடம் காட்சிகளுக்கு விபத்துகளை உண்டாக்கி அதற்கு மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவமனையில் போதிய வசதி இல்லாமல் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தனியார் மருத்துவமனைகளில் செலவு செய்து அவரது வாழ்க்கையில் நொண்டியாகவோ இதர குதிரை குறைபாடுகள் ஆகவோ அன்றாடம் வாழ்க்கையை நோண்டு கொண்டு வாழ அரசு வழிவகை செய்து கொண்டிருக்கிறது வாழ்க பாரதம் எதற்காக இந்த அரசியலமைப்பு அரசியல்வாதிகள் இதற்கு நீதிமன்றம் தான் பதில் சொல்ல வேண்டுமா நீதிபதிகளுக்கு ஓட்டுகள் போடலாமே அரசியல்வாதிக்கு ஏன் மக்களுக்கு நியாயம் கிடைக்குமா
சொல்லுங்கள் எத்தனை குழந்தைகள் நாய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் காமவெறியர்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் ஒரு புள்ளிவிபரம் கொடுக்கவும்
ரேபிஸ் அரக்கனிடமிருந்து மக்களை எப்படியாவது பாதுகாக்க வேண்டும்
அப்படியா அவ்ளோ பயங்கரமா? சொல்லுங்கள் ரேபிஸ் மூலம் எவ்ளோ பேர் ஒரு நாளைக்கு இறக்கின்றனர். அதேபோல் சாலை விபத்தில் எவ்ளோ பேர் ஒரு நாளைக்கு இறக்கின்றனர்.
மதுவுக்கும், பணத்துக்கும் பேயாய் அலையும் மனித இனம் இந்த பூமிக்கு ஒரு சாபக்கேடு
தெருநாய்களை விட ஊழலில் மிதக்கும் கேடுகெட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நாய்களை தினமும் இரவு 11 மணிக்கு மேல் அவனவன் ஊரில் உள்ள வீதிகளில் தெருவில் நடந்தே குறைந்தது 2 கிமீ சுற்றி வர வேண்டும் என்றும் அதை வீடியோவாக எடுத்து தினமும் ஆதாரமாக மாநில உயர் நீதிமன்றம் நீதிபதிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டால் இவனுகள் திருத்த வாய்ப்புள்ளது இதில் மேனகா காந்தியையும் இப்படி செய்ய வைக்க வேண்டும்
நான் சவால் விடுகிறேன். என் வாழ்வில் பல ஊர்களுக்கு போயுள்ளேன். எங்கும் நாங்கள் குறிப்பிட்டுள்ள போல பார்த்ததில்லை.
முதலில் நாய்கள் மீது தேவையற்ற பயமும், வெறுப்பும் விட்டொழியுங்கள். நாய்களை நேசிக்கும் மனிதர்களை கடிக்காத பபோது மற்றவர்களை ஏன் கடிக்கிறது என்று பாருங்கள். அந்த ஜீவன் மனிதர்கள் ஒரு வேளை உணவு, நீரும் மட்டும் தான். சுயநலம் பிடித்த, மதுவுக்கு பேயாய் அலையும் மனிதர்கள் போல அல்லமேலும்
-
அசாமில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவார்கள்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
-
திருப்பதி லட்டுக்கு கலப்பட நெய் பயன்படுத்தி ரூ.250 கோடி ஊழல்; சிபிஐ குற்றப்பத்திரிகை
-
வெடிகுண்டு மிரட்டல்; ஆமதாபாத்தில் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்
-
திருடப்பட்ட சோழர் கால சிலைகள்; இந்தியாவிடம் ஒப்படைக்கிறது அமெரிக்கா
-
பிப்ரவரி 5ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை; இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த திட்டம்
-
திமுகவை வெளியேற்றி தமிழகத்தை மீட்கும் தினம் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்