ராமதாசை கொண்டாடியவர்கள் எனக்கு துணை நிற்கவில்லை திருமாவளவன் ஆதங்கம்
சென்னை: ''ராமதாசை கொண்டாடிய ஈ.வெ.ரா.,வாதிகளும், மார்க்சியவாதிகளும், எனக்கு ஆதரவாக கூட நிற்கவில்லை,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், திருமாவளவன் பேசியதாவது:
பா.ம.க., நிறுவனர் ராமதாசும் நானும் சேர்ந்து, தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை நடத்தினோம். தேர்தல் காரணத்தால், அவரும் நானும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிரிந்தபோது தமிழ் உணர்வாளர்கள், தமிழறிஞர்கள் எல்லாரும், ராமதாஸ் பின்னால் போனார்கள். யாரும் திருமாவளவன் பின்னால் வரவில்லை. என்னுடன் பயணிப்பதற்கு எது தடுத்தது?
ராமதாஸ், இயக்க தலைவராக வந்தபோது, ஈ.வெ.ரா.,வாதிகளும், மார்க்சியவாதிகளும் தோளில் துாக்கி கொண்டாடினர்.
'தி.மு.க.,வுக்கும் அ.தி.மு.க.,வுக்கும் மாற்றாக, ஒரு தலைவர் வந்துவிட்டார். ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போகிறார். இனி, தி.மு.க., - அ.தி.மு.க., வேண்டாம்' என, ராமதாசை தலையில் துாக்கி வைத்துக் கொண்டாடினர்.
ஆனால், திருமாவளவன் வந்தபோது, யாரும் ஆதரவும் ஊக்கமும் அளிக்கவில்லை; எளிய மக்களை அமைப்பாக மாற்றும் எனது கடினமான முயற்சிக்கும் போராட்டத்திற்கும் துணை நிற்கவும் இல்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், முட்டி மோதி, சொந்த கால், கைகளை ஊன்றி, அரசியலில் இப்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவர் தொகுதியில் இவரை வெற்றி பெற வைத்ததே உள்ளூர் அமைச்சரிடம் விலை
போன பாமக வினரால்தான். நகராட்சி, உள்ளூர் அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இவரால் தொகுதிக்கு எந்த உபயோகமும் இல்லை என்கிறார்கள் தொகுதி மக்கள். இவர் தொகுதி பக்கம் வந்தது கூட இல்லையாம்.
இவர் தொகுதியில் உள்ள குண்டும் குழியுமான தெருக்களில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் போக முடியாது. காவல் நிலையம் அமைந்துள்ள வீதியில் கூட வாகனங்களும் பேருந்துகளும் ஊர்ந்துதான் செல்ல வேண்டும்
என்னும் அளவிற்கு சீர் செய்ய முடியாத போக்குவரத்து.சமீபத்தில் நடந்த கோயில் திருவிழாவிற்கு வெளியூரில் இருந்து வந்த எங்களுக்கு ,ஒரு கட்சித் தலைவரின் தொகுதியிலா இவ்வளவு சீர்கேடுகள் என காண்பதிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
உள்ளூர் அமைச்சர் தயவினால் MP ஆனதால் இவர் இவைகளை கண்டு கொள்வதில்லையாம்....
உனக்கு எம் பி பதவி கொடுத்தது வேஸ்ட். மக்கள் திருந்த மாட்டார்கள்.மேலும்
-
ஈரானின் புரட்சிகர காவல் படை ஒரு பயங்கரவாத அமைப்பு: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
-
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ. 201க்கு விற்பனை
-
காரில் தீப்பிடித்து எரிந்ததால் கோவை ரோட்டில் பரபரப்பு
-
கணக்கெடுப்பு நடத்த மா.கம்யூ.,கோரிக்கை
-
வண்ண ஓவியங்களால் மிளிரும் புது பஸ் ஸ்டாண்ட் சுவர்கள்
-
டிராக்டர் மீது அரசு பஸ் மோதி விபத்து; பெண் தொழிலாளி இறப்பு