குமரியில், 1,000 மெகாவாட் நீரேற்று மின் உற்பத்தி திட்டம்
கன்னியாகுமரி: தமிழகத்தில் பொது - தனியார் கூட்டு முயற்சியில், 14,500 மெகாவாட் திறனில், 15 நீரேற்று மின் நிலையங்களை அமைக்க மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலையில், தலா, 250 மெகா வாட் திறனில் நான்கு அலகுகள் என, மொத்தம், 1,000 மெகா வாட் திறனில் நீரேற்று மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
திட்ட மதிப்பீட்டு செலவு, 5,624 கோடி ரூபாய். இந்த மின் நிலையத்தில் உச்ச மின் தேவையை சமாளிக்க, தினமும் ஆறு மணி நேரம் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
திட்டத்திற்கு, 400 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட உள்ளது. இதில், 151 ஏக்கர் வன பகுதியில் இடம்பெறுகிறது. மேல் அணைக்கு, 75 ஏக்கர், கீழ் அணைக்கு, 115 ஏக்கரும் பயன்படுத்தப்படும்.
வெள்ளிமலை நீரேற்று மின் திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது, கட்டுமான பணிக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறையிடம், அனுமதி கேட்டு, பசுமை எரிசக்தி கழகம் விண்ணப்பம் செய்துள்ளது.
மேலும்
-
தமிழக சட்டசபை தேர்தல்; சட்டப்பாதுகாப்பு குழு அமைத்தார் விஜய்
-
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த பேச்சு இறுதிக்கட்டம்; பியுஷ் கோயல் தகவல்
-
கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் இரும்புக்கரம்; முதல்வரை சாடிய நயினார் நாகேந்திரன்
-
தலித் அதிகாரி பணியாற்றியதால் ஆத்திரம்: மாட்டுச் சாணத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்த திமுக தொழிற்சங்க நிர்வாகி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க