ஈரானை நோக்கி பயணிக்கும் அதிநவீன போர்க்கப்பல்கள்: டிரம்ப் தகவல்
வாஷிங்டன்: ஈரானை நோக்கி மிகவும் சக்திவாய்ந்த கப்பல்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீனா உடன் பிரிட்டன் வர்த்தக உறவு கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது. கனடா சீனாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது இன்னும் ஆபத்தானது என்று நான் நினைக்கிறேன். கனடா சிறப்பாகச் செயல்படவில்லை.
அவர்கள் மிகவும் மோசமாகச் செயல்படுகிறார்கள். சீனாவை ஒரு தீர்வாகப் பார்க்க முடியாது. எனக்கு சீனாவைப் பற்றி நன்றாகத் தெரியும். அதிபர் ஜி ஜின்பிங் என் நண்பர் என்பது எனக்குத் தெரியும். அவரை எனக்கு நன்றாகத் தெரியும்.
ஈரானை நோக்கி மிகவும் சக்திவாய்ந்த போர் கப்பல்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை நாங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாமல் இருந்தால் அது நன்றாக இருக்கும். நான் அவர்களிடம் இரண்டு விஷயங்களைச் சொன்னேன். முதலாவதாக, அணு ஆயுதம் கூடாது.
இரண்டாவதாக, போராட்டக்காரர்களைக் கொல்வதை நிறுத்துங்கள். அவர்கள் ஆயிரக்கணக்கில் மக்களைக் கொல்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா, இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் 837 தூக்குத் தண்டனைகளை நிறுத்தினேன். ஆனால் அவர்கள் ஏதேனும் செய்தே ஆக வேண்டும். இது போன்ற ஒரு சம்பவத்தை யாரும் பார்த்ததில்லை.இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
பைத்தியம் முத்திப்போய்விட்டது. கொஞ்சம் நிறுத்தச்சொல்லுங்கப்பா. பொழுது விடிய விடமாட்டேங்கிறாங்க.
கூடிய விரைவில் அமெரிக்கா சோமாலியா போல சோலி முடிந்துபோக பிரார்திப்போம்..
ஆணவத்தின் உச்சம்.
அமெரிக்க விடியலார் டிரம்பர் இப்படியே இருந்தா அமெரிக்கர்களை கிறுக்கு பிடிக்க வைத்து விடுவார். இவரிடம் இருந்து உலகத்தை காப்பாற்ற நமது மோடிஜீயால் மட்டுமே முடியும்.
Iran Thanks India for Voting
Against a UN Human Rights Council resolution censuring Tehran over protests.
இந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் போக்கு அனைத்து நாடுகளுக்கும் எரிச்சலை தருகிறது. இப்படித்தான் டிரம்பிற்கும் அவரின் நட்பு நாடான சௌதிக்கும் இடையேயான பதட்டங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இந்த இரு நாடுகளும் முன்பு செய்து கொண்ட ஒப்பந்தங்களுக்கு எதிராக இந்த
திடீர் விலகல் நிலைப்பாட்டால் டிரம்ப் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான டிரம்பின் கடுமையான பேச்சுக்களால் சௌதி அரேபியா கவலையடைந்துள்ளது. தொடர்ச்சியான பரப்புரைகளுக்குப் பிறகும் அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் ஆபத்து அதிகரித்து வருவதால் ஈரானால் தாங்கள் தாக்கப் படுவோமோ என அந்த நாடு அஞ்சுகிறது.
மேலும் டிரம்ப் நீண்ட காலமாக தனது பரம அரசியல் எதிரியாகக் கருதும் அரசியல்வாதியான சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று ரியாத்தில் வரவேற்றார்.
சீனாவுடன் கனடா வர்த்தகம் ஒப்பந்தம் செய்யக்கூடாது, இந்தியாவுடன் ஐரோப்பா வர்த்தக ஒப்பந்தம் செய்யக்கூடாது, ரசியாவுடன் யாரும் வர்த்தகம் செய்யக்கூடாது, யார் யாருடனும் வர்த்தகம் செய்யக்கூடாது
அப்படி செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும், வரி விதிப்பேன் ..... ஆனால் ஜின்பிங், மோடி, புடின், கனடா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, வளைகுடா நாடுகள் யாவரும் எனது நண்பர்கள்.
இன்று அமெரிக்கா தனிமை படுத்தப்பட்டுளது. டாலர் மீது நம்பிக்கை போனதால் தங்கம் மவுசு அதிவேகமாக கூடுது. அமெரிக்காவின் வீழ்ச்சியை ட்ரம்ப் துரிதப்படுத்துகிறார். இந்தியா, சீனா, ரஷ்யா, ஐரோப்பா இணைந்து செயல்படுகிறது. பாவம் ட்ரம்ப்பை தேர்ந்து எடுத்த மக்கள்.