உரிய நேரத்தில் உரிய முடிவு; கூட்டணி பற்றி சொல்கிறார் பிரேமலதா
திருநெல்வேலி: ''கூட்டணி முடிவெடுப்பதில் உரிய நேரத்தில், உரிய முடிவை தே.மு.தி.க., எடுக்கும்,'' என, திருநெல்வேலியில் அதன் பொது செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
திருநெல்வேலியில் தே.மு.தி.க., பூத் கமிட்டி, நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் பொது செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், துணைச்செயலாளர்கள் ஆனந்த மணி, தவசி தம்பா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின் பிரேமலதா கூறியதாவது :பிழைப்புத்தேடி பீகாரிலிருந்து தமிழகம் வந்த ஒரு குடும்பமே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இத்தகைய கொடூரச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும். மதுரையில் தவறுகளை சுட்டிக்காட்டிய அரசு அதிகாரி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற குற்றங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடப்பது கவலைக்குரியது.
திருநெல்வேலியில் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்கெல்லாம் டாஸ்மாக், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராள புழக்கமே காரணம். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும் என்பதே தே.மு.தி.க.,வின் எண்ணம். ஆனால், தற்போது போதை கலாசாரம் இளைஞர்களை வழிதவறச் செய்து வருகிறது. அரசு இரும்புக்கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த வேண்டும்.
ஒருகாலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாகப் பேசப்பட்ட நம் காவல்துறைக்கு தன்னாட்சி அதிகாரமும், முழு சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும். மதுரையில் அரசு அதிகாரி கொல்லப்பட்ட சம்பவத்தை விபத்து என முடிக்க முயன்றனர். ஆனால், காவல்துறை தற்போது உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறை இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும்.
தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியாகவில்லை. எனவே, கூட்டணி முடிவெடுப்பதில் எந்த அவசரமும் இல்லை. உரிய நேரத்தில், உரிய முடிவை தே.மு.தி.க., எடுக்கும். 2011 வரை தனித்து போட்டியிட்ட கட்சி தே.மு.தி.க.,. மாவட்டச் செயலாளர்களின் விருப்பம் மற்றும் கட்சியின் கௌரவத்தை கருத்தில் கொண்டு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். தே.மு.தி.க., அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
தே.மு.தி.க., லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி. ஸ்டெர்லைட் போன்ற விவகாரங்களில் எந்தெந்த கட்சிகள் கையூட்டு பெற்றன என்ற பட்டியல் உங்களிடம் உள்ளது. அதில் தே.மு.தி.க., பெயர் உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் சொந்த உழைப்பில் கட்சியை வளர்த்து வருகிறோம்.
யாரும் எதையும் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை. அமைதியான, மகிழ்ச்சியான தமிழகத்தை உருவாக்குவதே கேப்டனின் கனவு. தாமிரபரணி ஆற்றின் நிலை, சாலை வசதிகள் உள்ளிட்ட உள்ளூர் பிரச்னைகள் குறித்து சட்டசபையில் குரல் கொடுத்து உரிய தீர்வு காணப்படும். தே.மு.தி.க.,வை நம்பி பணியாற்றுபவர்களுக்கு உள்ளாட்சிகளிலும் அரசியலிலும் பொறுப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீங்க கூட்டணி பற்றி முடிவு செஞ்சு சொல்றதுக்குள்ள தேர்தல் முடிஞ்சுடும் அக்கா.
பின்னாடி போற ரெண்டு திராவிட கட்சிகளை அடிக்கணும்
இவர்களை சொல்லி குற்றமில்லை.
ஆனால் இவர்களுடன் உள்ள அந்த அல்லக்கைகளைபேட்டி கொடுக்கும்போது கேமராவில் தெரிய வேண்டி முண்டியடித்துக்கொண்டு நிற்கும் கூட்டம் மற்றும் உலக்கை நாயகனின் டப்பிங் ஸ்டூடியோ உள்ளே பேந்த பேந்த உட்கார்ந்திருந்த பொது குழு செயற்குழு, மாவட்ட ஒன்றிய செயலாளர்கள்,மற்றும் மொத்த வாக்காளர்கள் எல்லாம் சேர்த்து ஒரு பத்து பதினைந்து பேர் , ஒரு வாரம்அல்லது ஒரு மாதம் உள்ளே வைக்கவேண்டும்.
இவர்களை பேட்டி எடுக்கும் தொல்லை காட்சி நிருபர்களையும் தடை செய்யவேண்டும்.
இந்த கொசுக்கள் தொல்லை தாங்க முடியவில்லை.
உங்களோட அடுத்த வசனம் என்ன ?? உங்கள் கட்சி அமையும் கூட்டணி தான், நாட்டின் பிரதமரையே தேர்ந்தெடுக்கும். அதானே ?? சில சினிமா வசனங்கள் சரியாக பொருந்தும். ஐயையோ, ஐயையோ, எங்களுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்துருங்க, நாங்க ஊருக்கே போயிடறோம். இது சரியான பைத்தியம் இல்ல. சரியாகாத பைத்தியம்.
சென்றமுறை அ.தி.மு.க. வெற்றிவாய்ப்பை ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் மற்றும் பல பேர் இப்படி சில நூறு வாக்குகளில் வாய்ப்பை இழந்தனர் என தெரிந்து வைத்துக்கொண்டு, ஆடுகிறார். ஆனால் ஒன்று. இவர் கறிவேப்பிலை தான். தூக்கி எறியப்படுவது உறுதி. இரு கட்சிகளும் இவர்களை இவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவர்களே வந்து படிக்கட்டில் தொற்றிகொள்ளட்டும் என விட்டுவிட்டனர். எனவே இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜை கழட்டி விட்டுவிட வேண்டும்.
இன்னும் நேரம் நிறைய இருக்கு பொறுமையா யோசிங்க ஜூன்க்கு அப்பறோம் சொல்லுங்க
சம buildip
கடைசி நேரம் வரை பேரம் பேசினால் தான், பணபெட்டியின் கணம் உயரும் என்பது பிரேமலதா கடந்த கால வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடம். அவரை பொறுத்தவரை, தேர்தலுக்கு முன்னரே பேரம் பேசி எவ்வளவு வேண்டும் என்று ஜெயித்துவிடுவார்.
ஒன்னும் அவசரம் இல்லை தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி செப்பலாம். இங்க முடியலென பக்கத்துல ஆந்திர இருக்கு உங்க மாநிலம் தன நாயுடு கூட கூட்டணி பற்றி பேசலாம் ஒன்னும் தப்பு இல்லை. இவனுங்க ரெண்டு பெரும் 5 மேல கொடுக்க மாட்டானுவ. அவைங்களுக்கு நல்ல தெரியும் எல்லா தொகுதியும் டிபாசிட் போகலாம் அலலது 2 அல்லது 3 இடத்துக்கும் தள்ள படலம். யாரும் ரிஸ்க் எடுக்க மாட்டானுவ நிலமை apadi/
தேர்தல் முடிவு வந்துச்சா இல்லையே அடுத்த முதல்வர் யார் பதவி ஏற்றங்களா இல்லையே இது எல்லாம் நடக்கட்டும் நாங்க கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிப்போம் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம்மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க
-
தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை
-
செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை
-
வெயிலில் அதிகம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு: உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 7,200 பேர் காத்திருப்பு
-
பொதுக்கூட்ட வழிகாட்டு விதிமுறைகள்; எதிர்த்து தவெக வழக்கு