சோழர்களின் பாரம்பரியம், பெருமைக்கு அவமானம்: திருமாவளவனுக்கு அண்ணாமலை கண்டனம்
சென்னை: திருமாவளவனின் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்துக்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சோழ மன்னர்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஊழல் நிறைந்த ஹிந்துக்களுக்கு எதிரான இந்த திமுக ஆட்சியின் கீழ் தமிழகத்தில் எது நடந்தாலும் பாஜ மற்றும் சங் பரிவார் அமைப்புகளை குறை சொல்லி வந்த இண்டி கூட்டணி எம்பி திருமாவளவன், இப்போது 10 நூற்றாண்டுகளுக்கு மேலாக பின்னோக்கி சென்று, மாபெரும் மன்னர்களான சோழர்கள் மற்றும் பாண்டியர்களை அவதூறு செய்துள்ளார். அந்த மன்னர்களின் சிறப்பான ஆட்சியின் கீழ் தமிழ் மொழி இன்றைய தமிழகத்தின் புவியியல் எல்லைகளையும் கடந்து செழித்து வளர்ந்துள்ளது.
இது சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும் பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம். திருமாவளவனின் இந்த பேச்சு அவரது ஆழ்ந்த வரலாற்று அறியாமையை மட்டும் வெளிப்படுத்துகிறது. ராஜராஜன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரின் பெயர்கள் தமிழ் பெயர்களா என்று அவர் கேள்வி எழுப்பினால், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, மற்றும் கோபாலபுரம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் தமிழ் பெயர்கள் ஒருவர் கேட்கக்கூடும்.
தமிழ் மொழியில் உண்மையான வளர்ச்சிக்கும் உலகளாவிய பெருமைக்கும் எந்த ஒரு பங்கும் அளிக்காத அரசியல் கட்சி என்றால் அது திமுக மற்றும் கூட்டணி கட்சி தான். திமுக துவங்கப்பட்ட 1949 இல் தமிழகத்தின் வரலாறு துவங்கவில்லை. மாறாக பிரச்சனைகள் தான் தூங்கின என்பதை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
தம்பி அண்ணாமலை சிறுத்தை தான் ஓசி பிரியாணி இலைக்கு ஆதரவு ஆச்சே அப்புறம் அவர் கிட்ட என்ன எதிர் பார்க்க முடியும்.
திருமாமாவளவன் முகலாய மன்னர்களுக்கு முட்டு கொட்டுப்பார். இந்து மன்னர்கள் என்றால் வசை பாடுவார்
திருமா வளவன் சோழர்களின் பாரம்பரியம் ,பெருமை குறித்து அவச்சொற்களை சொல்லலாம் .அது அவரின் உரிமை -ஆனால் அதற்க்கு எதிர்வினை ஆற்ற உரிமை உண்டா என்பது கேள்விக்குறி . இங்கு இந்தியாவில் படையெடுத்து வந்த முஸ்லீம் மன்னர்கள் - முதலில் கோரி பின் அடிமை வம்சம் பின் கில்ஜிகள் பிறகு துக்ளக் அதற்கு பிறகு மிக சிறு காலம் சைய்யதுகள் மற்றும் லோடி வம்சத்தினர். இவர்களுக்கு பின் வந்த முகலாயர்கள் என முந்நூறு ஆண்டுகள் ஆட்சி செய்தனர் .அவர்கள் ஆட்சியில் ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டன .வாள் முனையில் மதம் மாற்றப்பட்டனர் .மதம் மாற மறுத்தவர்கள்
கொல்லப்பட்டனர் .ஆனால் இந்த முஸ்லீம் மன்னர்களின் செயலை அவர்கள் சார்ந்த மதத்துடன் சம்பந்தப்படுத்துவது இல்லை .அந்த மதத்தை குறைகூறுவது இல்லை . அது போல கிருஸ்துவ ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது மதமாற்றம் நடந்தது - ஜாலியன் வாலாபாக் படுகொலை -தேச பக்தர்கள் சிறை -செயற்கை பஞ்சம் என சொல்லொண்ணா துயர்களை மக்கள் அனுபவித்தனர் - உப்பு வேலி என ஒரு உயிர் வேலி -2300 மைல்கள் அமைத்து மக்களை வறுமையில் வாட்டினர் - ஒரு கோடி தலித் மக்கள் இறந்தனர் என்பது வரலாற்று தரவு .ஆனால் ஆங்கிலேயர் செய்த கொடுமைகளை அவர்கள் சார்ந்த கிருஸ்துவ மதத்துடன் சம்பந்தப்படுத்துவது இல்லை .அப்படி கூறினால் அது தவறு தவறு தவறு .ஆனால் ராஜராஜ சோழன் சோழ வம்ச ஆட்சியில் ஹிந்து சைவ மதத்தை சார்ந்து பலப்பல கோவில்கள் கட்டப்பட்டன - நீர்நிலைகள் உருவாக்கப்பட்டன - இந்தியாவில் ஹிந்து மன்னர்களை கடவுளின் பிரதிநிதியாக மக்கள் பார்த்தனர். ஹிந்து அரசர்களின் ஆட்சியில் பஞ்சம் என்ற ஒரு வார்த்தை கேள்வி பட்டது இல்லை. அப்படியிருந்தும் மதமாற்ற கும்பல்களின் தூண்டுதலால் ராஜராஜ சோழன் இந்த 21ம் நூற்றாண்டிலும்
சிறுமை படுத்தப்படுகிறார் .இதை ஹிந்துக்கள் தட்டி கேட்டால் மதவாதி ஆகிவிடுகிறார்கள் .இது தான் நிதர்சனம் .இங்கு திருமா சொல்லுக்கு எதிர்வாதம் செய்தாலே அவன் கெட்டவனாகி விடுகிறான். தமிழகத்தின் சாபக்கேடு இது
தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் ......தமிழ் அரசர்களான மூவேந்தர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
சோழர்களை குறை கூறுபவர் ஏன் கரிகாலன் பெயரான திருமாவளவனை வைத்துக்கொள்ள வேண்டும்? எந்த பிரிவுக்கு சாதகமாக பேசுறாரோ அவர்கள் சம்பந்தப்பட்ட பெயரை வைத்துக்கொள்ள வேண்டியதுதானே?
அவர் அப்படிதான் பேசுவான் அவர் அப்படி பேசவில்லை என்றல் அவர் பிறப்பதே வேஸ்ட் இவர்கள் தாய் மதத்திற்கும் தாய் நாட்டிற்கும் என்ன தீமை வேண்டுமானாலும் செய்வார்கள் . திருடுவதற்கும் துரோக செயலுக்கும் அவமானத்திற்கும் அஞ்சதவர்கள்
செய்தி எதுவும் கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கிறது மலையறிக்கை.
மலை.... நாட்டை நேசிக்கும் ஆள்... உங்களை போல் நாட்டை காட்டிக் கெடுக்கும் ஆள் இல்லை.
ஓர் காட்டுக் கூட்டத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் இவர்களிடம் நல்ல அரசியலை எதிர்பார்ப்பது உங்களது குற்றம் திரு அண்ணாமலை அவர்களே
அறிக்கைக்கு கொஞ்சம் ஓய்வு வேண்டாமா?
திருமாவளவன் அறிவாளி.... படிப்பாளி...சொல்லப்படுகிற கருத்திற்கு மறு கருத்து கூறலாம். அதை விட்டுவிட்டு கருணாநிதி குடும்பத்தை இங்கு இழுப்பது தேவையற்றது.
ஒரு கருத்தை சொல்லும் போது ஆராய்ந்து சொல்ல வேண்டும், இல்லை என்றால் அவரை சுற்றியுள்ளவர்கள் அனைவரையும் விமர்சிக்க வேண்டிவரும், இந்து மதத்தை பற்றி மட்டும் குழைக்கும்போது திருமாவுக்கும் உனது அறிஉரைகளை சொல்லு.
அயோக்கியர்கள் தான் மூவேந்தர்கள் இகழ்வாக பேசுவார்கள்...உன்மையான தமிழன் எவனும் பேசமாட்டான் இகழ்வதை பொருத்துக்கொள்ளவும் மாட்டான்...மேலும்
-
தலித் அதிகாரி பணியாற்றியதால் ஆத்திரம்: மாட்டுச் சாணத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்த திமுக தொழிற்சங்க நிர்வாகி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க
-
தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை
-
செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை
-
வெயிலில் அதிகம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு: உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 7,200 பேர் காத்திருப்பு