கடத்தப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை திருப்பி தர அமெரிக்கா சம்மதம்
சென்னை: தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட, சோமாஸ்கந்தர் வெண்கல சிலை உட்பட மூன்று சிலைகளை ஒப்படைக்க, அமெரிக்கா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் ஆலத்துாரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில், சிவன், பார்வதி ஆகியோருடன், முருகன் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தர் சிலையை, மர்ம நபர்கள் சில ஆண்டுகளுக்கு முன் திருடிச் சென்றனர். இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ஆனால், துப்பு துலக்க முடியவில்லை.
கடந்த 2022ல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி.,யாக இருந்த ஜெயந்த் முரளி தலைமையில், தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், முருகன் சிலை அகற்றப்பட்ட நிலையில், சிவன், பார்வதி தேவி வெண்கல சிலை இருப்பது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, அந்த சிலை தொடர்பான ஆவணங்களை, அமெரிக்க அரசிடம் ஒப்படைத்து, அவை தமிழகத்தின் கோவிலில் இருந்து திருடிச் செல்லப்பட்டதை, தமிழக போலீசார் நிருபித்தனர்.
அதைத்தொடர்ந்து, சிலை மட்டுமின்றி சோமாஸ்கந்தர், சுந்தர மூர்த்தி நாயனார், பரவை நாச்சியார் மற்றும் சிவ நடராஜர் சிலைகளை ஒப்படக்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அரை நூற்றாண்டாக திராவிடப்பதர்கள் ஆளும் மாநிலத்தில் சிலைகள் கோவில்கள் மாயமாவது வாடிக்கை. இந்துக்களுக்கு பக்தி வேண்டும்.மேலும்
-
தலித் அதிகாரி பணியாற்றியதால் ஆத்திரம்: மாட்டுச் சாணத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்த திமுக தொழிற்சங்க நிர்வாகி
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்தது; 2 நாட்களில் ரூ.15,200 சரிவு
-
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேசும் தி.மு.க
-
தமிழக அரசின் பிடிவாதத்தால் அந்தரத்தில் நிற்கும் சித்தா பல்கலை
-
செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள் விலை இருந்தும் லாபம் இல்லையென விவசாயிகள் வேதனை
-
வெயிலில் அதிகம் பணி செய்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு: உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 7,200 பேர் காத்திருப்பு