மஹாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்றார் சுனேத்ரா பவார்
மும்பை: மறைந்த அஜித்பவார் மனைவியும், ராஜ்யசபா உறுப்பினரான சுனேத்ரா பவார், மஹாராஷ்டிரா துணை முதல்வராக இன்று ஜன.,31ல் பதவியேற்றார்.


இதன்படி தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக சுனேத்ரா பவார் தேர்வு செய்யப்பட்டார். மும்பை விதான் பவனில் நடந்த கட்சி கூட்டத்தில், மூத்த தலைவர் திலீப் வால்சே பாட்டீல் இவரது பெயரை முன்மொழிய, சகன் புஜ்பால் அதனை வழிமொழிந்தார். இந்த முடிவுக்கு பாஜ., மற்றும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) உள்ளிட்ட மஹாயுதி கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இதையடுத்து சுனேத்ரா பவார் மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று (ஜனவரி 31) மாலை 5 மணிக்கு பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சுனேத்ரா பவார், அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். துணை முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமெனில், அடுத்த 6 மாதங்களுக்குள் மஹாராஷ்டிர மாநில சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ அல்லது எம்எல்சி) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி வாழ்த்து
மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள சுனேத்ரா பவாருக்கு வாழ்த்துகள். மறைந்த அஜித் பவாரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றவும், மாநில மக்களின் நலனுக்காகவும் அவர், அயராது உழைப்பார் என்று நான் நம்புகிறேன் என்று பிரதமர் மோடி தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (1)
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
31 ஜன,2026 - 18:23 Report Abuse
லாலு சட்டத்தின் பிடியில் தாற்காலிகமாக சிக்கியபோது லாலுவின் மனைவி முதல்வரானார் .... 0
0
Reply
மேலும்
-
பிரதமர் மோடியுடன் அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் குழு சந்திப்பு
-
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; முதல்முறையாக மகுடம் சூடினார் ரைபகினா
-
இஸ்ரேல் ஊதும் மகுடிக்கு ஆடும் பாம்பு டிரம்ப்; எப்ஸ்டீன் அறிக்கையில் புதுகுண்டு
-
தலைகுனிந்து நிற்கும் தமிழகம்.. வாய் சவடால் பேசும் ஸ்டாலினுக்கு கண்டனம்;இபிஎஸ்
-
வரும் சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் அரசு அழிந்து போவது உறுதி; அமித்ஷா
-
மாலையில் மளமளவென சரிந்தது வெள்ளி; ஒரே நாளில் ரூ.85 ஆயிரம் சரிவு
Advertisement
Advertisement