ஈரானுடன் ஒப்பந்தம்; டிரம்ப் நம்பிக்கை
வாஷிங்டன்: ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார பிரச்னைகள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த டிசம்பர் முதல் அங்கு போராட்டம் நடந்து வருகிறது. பொதுமக்கள் மீதான இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், போர்க்கப்பல்களை ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் உச்ச தலைவர் கமேனி, '' அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால், ஈரான் அமைதியாக இருக்காது. இந்த முறை மிகப் பெரிய அளவிலான போராக மாறிவிடும். சண்டையை துவக்கினால், இந்த முறை பிராந்திய அளவில் மிகப் பெரிய அளவுக்கு போர் வெடிக்கும் என அமெரிக்கர்களுக்கு நன்கு தெரியும்'' என எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் கூறி இருப்பதாவது: உலகின் மிகப்பெரிய, மிகவும் அதிநவீன கப்பல்கள் எங்களிடம் உள்ளன. இன்னும் சில நாட்களில் ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ளவில்லை என்றால், ஈரானின் கமேனி எச்சரிக்கை விடுத்து இருப்பது சரியானதா என்பது தெளிவாகிவிடும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
பொழுது விடிந்தால் ஒன்று வரி, இல்லையேல் ஒப்பந்தம் அப்படியும் இல்லையென்றால் அமெரிக்கா எடுத்துக் கொள்ளும், இணைத்துக் கொள்ளும்.
படத்தில் கூட கே.எஸ். வீராப்பாவோ, எம்.என் .நம்பியாரோ இப்படி மிரட்டல் விடுத்து அராஜகம் செய்ததாக பார்த்ததில்லை. பண திமிரு .
ஈரானின் கொடுங்கோல் ஆட்சியாளர்களை அடக்க டிரம்ப் மாதிரி ஆள் தேவைதான்
அது கொடுங்கோலா இல்லையா என்பதை அந்த நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள். அதை சொல்ல வெளிஆட்களுக்கு என்ன வேலை.மேலும்
-
தமிழக உலகளாவிய சுற்றுலா மாநாடு; முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து
-
அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்; கொத்து கொத்தாக செத்துப்போன காகங்கள்; பீஹார் மக்கள் பீதி
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7600 குறைவு
-
அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம்: விஜய்
-
பார்லிமென்டில் இன்று ஜனாதிபதி உரை மீதான விவாதம்; பிப்ரவரி 4ல் பிரதமர் மோடி உரை
-
வங்கதேசத்தில் 12ம் தேதி பொதுத்தேர்தல்; இந்தியாவுக்கு அழைப்பு