உக்ரைனில் பஸ் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; 15 பேர் பலி
கீவ்: உக்ரைனில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் சுரங்கத் தொழிலாளர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளை எட்டிவிட்டது. இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில், இந்தப் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், ரஷ்யா தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த நிலையில், ரஷ்யா, உக்ரைன் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனிடையே, பிப்ரவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைனில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். டினிப்ரோ பகுதியில் சுரங்கத் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற பஸ் மீது ரஷ்யா டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், பஸ்ஸில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு 15 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்
-
அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம்: விஜய்
-
பார்லிமென்டில் இன்று ஜனாதிபதி உரை மீதான விவாதம்; பிப்ரவரி 4ல் பிரதமர் மோடி உரை
-
வங்கதேசத்தில் 12ம் தேதி பொதுத்தேர்தல்; இந்தியாவுக்கு அழைப்பு
-
மாரத்தானில் சாதிக்கும் அரண்மனை நகரத்து பெண்
-
நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது; பாதுகாப்பு துறைக்கு முன்னுரிமை குறித்து நிர்மலா சீதாராமன்
-
ஈரானுடன் ஒப்பந்தம்; டிரம்ப் நம்பிக்கை