கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும் சட்டவிரோத குவாரிகள்; தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: தமிழகம் முழுவதும் சட்டவிரோத குவாரிகள் செய்யும் ஆக்கிரமிப்புக்கு திமுக துணை போவதாக முன்னாள் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை; நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ராணுவ வீரர்கள், தங்கள் சொந்தக் கிராமங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து காப்பாற்றுவதற்காக விடுப்பு எடுத்து வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது, ஊழல் மலிந்த திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு ஒரு உதாரணமாகும்.
மதுரை மாவட்டம் கல்லிப்பட்டி தாலுகாவுக்குட்பட்ட, கல்லணை மற்றும் புதூர் கிராமங்களில் உள்ள அய்யனார் மற்றும் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை, கல் குவாரித் தொழிலுக்காக திட்டமிட்டு அபகரிக்கப்படுவதாக ராணுவ வீரர்கள் தெரிவிக்கும் புகார்கள் இன்னும் அதிர்ச்சியளிக்கின்றன.
மாநிலம் முழுவதும் நடைபெறும் இதுபோன்ற ஆக்கிரமிப்புக்கு திமுக துணை போவது தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் கொள்ளை அதிகளவில் நடப்பதாக அமலாக்கத்துறை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது. நாங்களும் சட்டவிரோத குவாரி செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இதற்கு பிறகும், திமுக அரசு வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, அதற்கு துணை போவது அம்பலப்படுவதோடு, சட்டம், நீதி மற்றும் சாமானிய மக்களின் உரிமைகள் மீது இருக்கும் அலட்சியத்தையும் காட்டுகிறது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (5)
thuppuravu - chennai,இந்தியா
02 பிப்,2026 - 17:12 Report Abuse
.சொல்வதை சட்டமூலமாக தீர்வுகாண வழக்கறிஞ்சர் குழுவை ஏற்படுத்துங்கள் .தேவையான பண உதவியை ஆரவாளர்கள் அளிப்பார்கள் .ஒவ்வொன்றும் நீதிமன்றம் செல்லவேண்டும் .அப்போதுதான் நீங்கள் உண்மையாக மக்களுக்காக ஊழைகிண்றீர்கள் என்று அர்த்தமே . 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
02 பிப்,2026 - 17:08 Report Abuse
மூலபத்திரம் தராத அந்த பத்திரிக ஆபீசுக்கு பஞ்சமி நிலம்தான் 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
02 பிப்,2026 - 16:38 Report Abuse
மிஷ்மனஜேமென்டூ என்ற பெயரில் உள்ளே வந்த அறமில்லா துறை,,, அதே காரணத்தால் வெளியேற்ற சட்ட முகாந்திரம் உள்ளது. யாரும் செய்ய முன் வர வில்லை என்றால் கோவில்கள் ............அவர்களின்.. கூடமாக
மாறிவிடும் 0
0
Reply
குமரி குருவி - ,
02 பிப்,2026 - 15:47 Report Abuse
தேர்தல் நெருங்குகிறது
தி.மு.க.வின் நிம்மதியை
கெடுக்க பா.ஜ.க.படை
களமிறங்குகிறது.. 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
02 பிப்,2026 - 15:37 Report Abuse
திருமா மூச்சே விடவில்லையே 0
0
Reply
மேலும்
-
பெண்ணையாறு பிரச்னை: ஒரு மாதத்துக்குள் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு
-
சென்னை மெட்ரோ ரயில்களில் 93 லட்சம் பேர்; ஜனவரியில் பயணித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு
-
யுஜிசி பரிந்துரைத்த நபர் இல்லாமல் தேடுதல் குழு: தமிழக அரசுக்கு கவர்னர் எதிர்ப்பு
-
விஜய்க்கு டான்ஸ் ஆடத் தெரியும், தலைவராக ஒன்றுமே தெரியாது; நயினார் நாகேந்திரன்
-
தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு காரணம் இதுதான்; விளக்கிய நிதியமைச்சர் நிர்மலா
Advertisement
Advertisement