திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு: வருத்தம் தெரிவித்த கலெக்டர், போலீஸ் கமிஷனர்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் , கோவில் கமிஷனர் ஆகியோர் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும் அமல்படுத்தாமல் தி.மு.க., அரசு பிடிவாதம் காட்டியது. இதனால், ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இது ஐகோர் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மதுரை கலெக்டர் பிரவின் குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.
அப்போது, 'சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை . நிபந்தனையற்ற வகையில் வருத்தம் தெரிவிக்கப்படுகிறது என கலெக்டர் ,போலீஸ் கமிஷனர் ,கோயில் செயல் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. 1500 பேர் மலையேற முயன்றனர் கட்டுப்படுத்தும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. நீதிபதி கோரும் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவும் தயார். 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் மோசமான விளைவுகள் ஏற்பட்டு இருக்கும். பொது மக்கள், பக்தர்களை பாதுகாக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதிகாரிகள் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என்றார்.
நீதிபதி கூறுகையில், மலையேற அனுமதிக்க முடியாது. வரும் பிரச்னையை எதிர்கொள்ள தயார் என போலீஸ் கமிஷனர் கூறினாரா? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக அதிகாரிகள் புன்னகையுடன் வந்துள்ளனர் என்றார்.
நீதிபதி, போலீஸ் கமிஷனர் ,போலீஸ் துணை கமிஷனர், கோயில் செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கலெக்டர் மட்டும் மார்ச் 2 ல் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மன்னிப்பு கேட்பதை விட பதவியை ராஜினாமா செய்து விட்டு போகலாம். இது அரசு அதிகாரிகள் திமுக ஆட்சிதான் ஆயுள் காலம் முழுவதும் இருப்பது போல் நடந்து கொண்டு வருகிறார்கள்.
அடுத்த அதிமுக ஆட்சி வந்தவுடன் உங்களை டிஸ்மிஸ் செய்ய வாய்ப்பு உள்ளது
ஆர் கே சொல்வது அப்படியே உண்மை. எப்புடி பசியையும் தாகத்தையும் ஊனக்கண்களால் பார்க்க முடியாதோ அது மாதிரியே ஆண்டவன் தண்டனையையும் பார்க்க முடியாது. 1970 களில் இருந்து மூட நம்பிக்கையை ஒழிக்கிறேன்னு கிளம்பியவன்கள் எல்லாரும் நாட்டை கொள்ளையடிக்க இதை ஆயுதமாக பயன்படுத்தி இன்று வரை நாட்டை சுரண்டல் களமாக மாற்றி விட்டான்கள். இன்னமும் இதை பத்தி பேசுறவன்களை எதைக் கொண்டு அடிப்பது என்று தெரியவில்லை. ஆனா அப்புடியே தினமலர் தளத்தில் வந்து பொங்கிடுவானுங்க.
சாமானியர்கள் இவ்வாறு வருத்தம் தெரிவித்தால் ஏற்றுக்கொவீர்களா
வருத்தம் எல்லாம் போறது . நீதி மந்திரத்தை அவமதிப்புக்காக டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும்
Is it the way to deal with defaulting bureaucrats? How will they afraid of committing such contempts, in future?
யாருவேனாலும் அயோக்கியத்தனம் செய்துவிட்டு கடைசியில் மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடும் போல் இருக்கிறது ... இது தான் ட்ராவிடின் மாடலா ?
இதே அணுகுமுறையை இனி அனைத்து குற்றங்களுக்கும் பின்பற்ற வேண்டிய நிலை வரும்.
ஆட்சியர் என்ன சொல்லுவார்.. கோவிலின் அருகே கலவரமாக இருக்கிறது..கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கிறது என்று கமிஷனர் தெரிவித்ததால் அதன் அடிப்படையில் 144 தடை உத்தரவு பிறப்பித்தேன் என்று கூறுவார்... அப்புறம் அவருக்கும் விலக்கு கிடைக்கும்..என்னங்கடா பித்தலாட்டம் இது..
இவங்களை கடுமையாக தண்டிக்காமல் விட்டது தவறுசெய்துவிட்டு எத்தனை முறையும் இப்படியே வருத்தம் தெரிவிப்பான்கள் வருத்தம் தெரிவிப்பது மன்னிப்பாகுமா ஏமாற்று வேலை
தை பூசம் ஊர்வலம் நடந்தது எத்தனை பேர் அதில் பங்கு கொண்டு கழகம் செய்தார்கள். வருத்தம் தெரிவித்தார்களாம் நீதிபதி மன்னித்துவிட்டாராம். பிரிவினைக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட குழுவினர் தங்கி முதல் தர குடிமகனாகவே வாழ்ந்து வருகின்றனர், ஆனால் பெரும்பான்மையான இந்துக்கள் 10 ஆம் தர குடிமக்களாகவே வாழ்கிறோம் , சில சமயங்களில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தோன்றுகிறது. நீதி மன்ற அவமதிப்பு என்கிற ஒரு ட்ராமா அரங்கேறியதுமேலும்
-
பெண்ணையாறு பிரச்னை: ஒரு மாதத்துக்குள் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு
-
சென்னை மெட்ரோ ரயில்களில் 93 லட்சம் பேர்; ஜனவரியில் பயணித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு
-
யுஜிசி பரிந்துரைத்த நபர் இல்லாமல் தேடுதல் குழு: தமிழக அரசுக்கு கவர்னர் எதிர்ப்பு
-
விஜய்க்கு டான்ஸ் ஆடத் தெரியும், தலைவராக ஒன்றுமே தெரியாது; நயினார் நாகேந்திரன்
-
தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு காரணம் இதுதான்; விளக்கிய நிதியமைச்சர் நிர்மலா