லோக் சபாவில் ராகுல் சர்ச்சை பேச்சின் மையமான நரவானே யார்; ஒரு ப்ளாஷ்பேக் அலசல்
புதுடில்லி: முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தை ராகுல் மேற்கோள் காட்டி பேசியதை தொடர்ந்து, யார் இந்த நரவானே என்ற விவாதம் வலுத்துள்ளது.
அவரை பற்றிய ஒரு சிறு ப்ளாஷ்பேக்:
1960ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் பிறந்தவர் எம்.எம்.நரவானே. முழு பெயர் மனோஜ் முகுந்த் நரவானே. இவரின் தந்தை இந்திய விமானப்படையில் பணியாற்றியவர். தாயார் அகில இந்திய வானொலி நிலையத்தில் பணிபுரிந்தவர். புனேவில் தம் பள்ளி படிப்பை முடித்த நரவானே, முதுகலை படிப்பை சென்னை பல்கலை.யில் முடித்தவர்.
அதன் பிறகு குன்னூர் வெலிங்டனில் இருக்கும் ராணுவ பயிற்சி கல்லூரியில் சேர்ந்து படித்தார். பாதுகாப்பு துறையில் முனைவர் பட்டம் முடித்தார். இந்திய ராணுவத்தில் இவர் சேர்ந்தது 1980ம் ஆண்டு ஆகும். முதலில் சீக்கிய காலாட் படையில் பணியாற்றினார். ராணுவத்தில் இவரின் சேவை கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகும்.
வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் சிறப்பாக பணியாற்றியவர். இந்தியா-சீனா எல்லையிலும் பணியாற்றிய பெருமை பெற்றவர். ராஷ்டிரிய ரைபிள்ஸ் பட்டாலியனை வழிநடத்தி, அசாம் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் சேவையாற்றியவர். இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதி காக்கும் படையிலும் இவர் இடம்பெற்றவர்.
2019ம் ஆண்டு நாட்டின் ராணுவ தளபதியாக பதவியேற்றார். பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளுடன் பல்வேறு பேச்சு நடத்தியவர் நரவானே. இந்திய ராணுவத்தை மேம்படுத்தி. அதை நவீனப்படுத்தியதில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. பதவிக்காலம் 2022ம் ஆண்டு முடிய, நரவானே ஓய்வு பெற்றார்.
நரவானே புத்தகத்தில் உள்ளது என்ன?
இவர் எழுதியதாக கூறப்படும் புத்தகத்தின்(சுயசரிதை) பெயர் போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி(Four stars of Destiny-தமிழில் விதியின் 4 நட்சத்திரங்கள் என்று பொருள்). இந்த புத்தகம் இன்னமும் வெளியிடப்படவில்லை. இந்த புத்தகத்தின் ஒரு சில பகுதிகள் 2023ம் ஆண்டு ஒரு செய்தி நிறுவனம் மற்றும் பல ஊடகங்களால் வெளியிடப்பட்டன.
புத்தகத்தில் 2020ம் ஆண்டு மே 5ம் தேதி பாங்காங் ஏரி பகுதியில் இந்திய மற்றும் சீன வீரர்கள் இடையே நிகழ்ந்த வன்முறை மோதல் ஆகிய சம்பவங்களை தொடர்ந்து கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் வெடித்தது. இந்த மோதல் குறித்து தான் நரவானே அந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த புத்தகம் பற்றிய ஒரு கட்டுரை தான் பிரபல பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. அந்த பத்திரிகையின் அச்சுப் பிரதியை மையமாக கொண்டே ராகுல், லோக்சபாவில் பேச முயன்றார்.
அவரின் இந்த செய்கையை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடுமையான வாத பிரதிவாதங்களை முன்வைத்தனர்.
இந்தியா தனது நிலப்பகுதியை இழந்ததாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஜெனரல் நரவனே மிகவும் தெளிவாகக் கூறுகிறார் ஒரு அங்குல நிலப்பகுதியை கூட நாம் இழக்கவில்லை என்பதுதான் உண்மை. வழக்கம் போல நம்மை அச்சுறுத்தும்
சீனாவுக்கு எதிராக நாம் உறுதியாக நிற்க முடியும் என்பதையும், பல தசாப்தங்களாக சீனா மேற்கொண்டு வந்த படிப்படியான ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதையும் இந்தியா உலகுக்குக் காட்டிய தருணம் என்று அவர் அறிவித்தார்.
இது புதிய இந்தியாவுக்கு. உலகளாவிய மரியாதையை ஈட்டித் தந்த ஒரு துணிச்சலான முன்மாதிரியாகும் என்று குறிப்பிடுகிறார். எனவே அங்கீகரிக்கப்படாத ஒரு சுயசரிதையிலிருந்து கசிந்த, சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்டுரையை நாம் ஏன் நம்ப வேண்டும்? இன்று மக்களவையில் (பிப்ரவரி 2, 2026) சபாநாயகர் கேரவன் புத்தகத்தில் உள்ளவைகள் ஏற்கத்தக்கவை அல்ல என்று சரியாகவே தீர்ப்பளித்தார். நம் நாட்டின் இராணுவ விதி 21 ஐ மீறியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், அந்தப் புத்தகம் தற்போது பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆய்வில் உள்ளது. இது நமது முப் படைகளின் மன உறுதியைக் குலைக்கவும் நம் தேசத்தைப் பிளவுபடுத்தவும் செய்யப்படும் ஒரு பிரச்சார உத்தியாகும். நான் நேற்றுதான் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பற்றி மலரில் போட்ட கருத்தில் இவரைப் போன்ற துரோகிகள் நிறைய பேர் நம் சோற்றை உண்டு, நம் காற்றை சுவாசித்து, இங்கு சொகுசாக வாழ்ந்து கொண்டு இந்தியாவின் முதுகில் குத்துவதற்கு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள் என்று பதிவிட்டு இருந்தேன். இதோ அவர்களுக்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது எத்தனை துரோகிகள் இந்த புண்ணிய பூமியை அழிக்க வந்தாலும் கடைசியில் அவர்கள்தான் அழிந்து போனார்கள் என்பதுதான் நம் பாரதம் அவர்களுக்கு உணர்த்தும் பாடம்! கடைசியாக நமது பாரதம் என்றென்றும் ஒன்றுபட்டு வலிமையாக நிற்கும் என்பது உறுதி.
சண்டையினால் ஏற்பட்ட இழப்புகளை மறைக்க சீன அரசாங்கம் தன் நாட்டுக்கு நெருக்கடியைத் திரித்துக் கூறியது. இந்தியா சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கு ஒரு மாபெரும் அதிர்ச்சியை அளித்தது 1979 க்குப் பிறகு இந்த சண்டையில் சீனா சந்தித்த முதல் உயிரிழப்புடன் கூடிய போராகும் இது நாங்கள் ஈடுக்கு ஈடு (Quid Pro Quo) நடவடிக்கைகளுடன் தாக்குதலைத் தொடங்கினோம், கைலாஷ் மலைத்தொடரில் உள்ள முக்கிய உயரமான பகுதிகளை ரேசாங் லா மற்றும் ரெச்சின் லா போன்ற இடங்களை கைப்பற்றினோம். அங்கிருந்து, நாங்கள் அவர்களின் தளங்களைக் கண்காணித்து, நிபந்தனைகளை விதித்தோம். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு சீன எல்லை மோதல் குறித்த தி கேரவன் இதழின் சமீபத்திய வெளியீடு என்பது, ஒரு தேசியப் பாதுகாப்பு வெற்றியை அரசியல் பழிவாங்கும் செயலாகத் திரித்துக் காட்டுவதற்கான மற்றொரு அவநம்பிக்கையான முயற்சியாகும். அவர்கள் பிரதமர் மோடியின் எதைச் சரி என்று நினைக்கிறீர்களோ, அதைச் செய்யுங்கள் என்ற வார்த்தைகளை ஒரு பலவீனமாகச் சித்தரிக்கிறார்கள். யதார்த்தம் என்னவென்றால் ஜெனரல் நரவனே தனது சுயசரிதையில் இதை ஒரு முழுமையான சுதந்திரம் என்று குறிப்பிட்டுள்ளார். இரவு 10:30 மணிக்கு, சீன ராணுவத்தின் டாங்கிகள் வெறும் 500 மீட்டர் தொலைவில் இருந்தபோது, இந்த வார்த்தைகள் நமது இராணுவத்திற்கு முழுமையான உத்வேகத்தையும் சுதந்திரத்தை அளித்தன டெல்லியின் எந்தவிதமான அதிகாரத்துவத் தடைகளும் எங்களுக்கு இல்லை. அச்சுறுத்தலை விரைவாக முறியடிப்பதில் நமது வீரர்களின் மீது வைக்கப்பட்ட முழுமையான நம்பிக்கையாகும் என்று குறிப்பிடுகிறார்.
எதிர் கட்சி தலைவர் பதவியை
பறித்து எம் சி பதவியில் இருந்து
நீக்க வேண்டும்.
பாஜக ஏன் இன்னும் ராகுலுடைய பேச்சுக்களுக்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டுள்ளது?. ராகுல் பேசும் சம்பந்தமற்ற அபத்த குற்றச்சாட்டுகளை ,பின் பற்றி அதன்பிறகு சொந்த மூளையற்ற அகிலேஷ், திமுக காரர்கள் போன்றவர்கள் கூவிக்கொண்டிருப்பார்கள்.
இதனை நிறுத்த ராகுலின் மன்மோகன்சிங் காலத்து ஆட்டங்கள், அவரது குடியுரிமை பிரச்னை, பாக்கிஸ்தான், சீனா தொடர்பு
போன்றவற்றின் ஆதாரங்கள் ஆகியவற்றை தடாலடியாக வெளியிட்டு தர்ம சங்கடப்படுத்துங்கள். அவரது மறைமுக டீலிங் களை ஆதாரத்துடன் வெளியிடுங்கள். தயவு, கருணை, காட்ட வேண்டாம். இந்திய உளவுத்துறையை பயன்படுத்ததினாலும் தப்பில்லை. ராகுல் அரசியலில் இருந்து விலகும் வரை விடாதீர்கள். இவர்தான் விஜய் கூறும் தீய சக்தி
ராகுலின் செயல் சிறுபிள்ளைத்தனம் என்பதைத்தவிர வேறென்ன ? இங்கே திமுக நாடகக்குழு நடத்தும் கூத்துகள் போலமேலும்
-
பெண்ணையாறு பிரச்னை: ஒரு மாதத்துக்குள் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு
-
சென்னை மெட்ரோ ரயில்களில் 93 லட்சம் பேர்; ஜனவரியில் பயணித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு
-
யுஜிசி பரிந்துரைத்த நபர் இல்லாமல் தேடுதல் குழு: தமிழக அரசுக்கு கவர்னர் எதிர்ப்பு
-
விஜய்க்கு டான்ஸ் ஆடத் தெரியும், தலைவராக ஒன்றுமே தெரியாது; நயினார் நாகேந்திரன்
-
தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு காரணம் இதுதான்; விளக்கிய நிதியமைச்சர் நிர்மலா