ஜம்மு காஷ்மீரில் ராணுவ உடையுடன் சந்தேக நபர்கள் நடமாட்டம்; தேடுதல் வேட்டை தீவிரம்
சம்பா: ஜம்மு காஷ்மீரில், ராணுவ உடையுடன் இருவர் சுற்றித்திரிந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
சம்பா மாவட்டத்தில் பரி பிரமனா என்ற பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் ராணுவ உடை அணிந்த இருவர் நடமாடி உள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளால் சந்தேகம் கொண்ட உள்ளூர் மக்கள், இது குறித்து ராணுவத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த குறிப்பிட்ட பகுதியை ராணுவத்தினர் சுற்றி வைத்தனர். மேலும் உள்ளூர் மக்கள் கூறிய அந்த கட்டடத்தை தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தனர். பின்னர், அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதுகுறித்து ராணுவத்தினர் கூறி உள்ளதாவது;
உள்ளூர் மக்கள் 2 நபர்களின் நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரும் ராணுவ உடையில் இருந்திருக்கின்றனர். அவர்களை தேடும் பணி நீடிக்கிறது.
இவ்வாறு ராணுவத்தினர் தெரிவித்தனர்.
மேலும்
-
சட்டசபை தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
அமெரிக்கவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதிரொலி: பங்குச்சந்தைகளில் கிடுகிடு உயர்வு
-
25,200-ஐ தாண்டினால் 25,500 வரை செல்லும் வாய்ப்பு உள்ளது
-
கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளி மூன்று நாட்களில் 44% விலை வீழ்ச்சி
-
மூலதன ஆதாய வரி விலக்கு ரத்தால் தங்க பத்திரங்களின் விலை 10% சரிவு
-
போரக்ஸ்: ரூபாய்க்கு ஆதரவான அலை இல்லை