மல்யுத்தம்: ஹரியானா 'சாம்பியன்'
நொய்டா: புரோ மல்யுத்த தொடரில் ஹரியானா அணி சாம்பியன் ஆனது.
இந்தியாவில் புரோ மல்யுத்த லீக் 5வது சீசன் நடந்தது. 6 அணிகள் பங்கேற்றன. பைனலில் ஹரியானா தண்டர்ஸ், டில்லி டங்கல் அணிகள் மோதின.
முதல் 7 போட்டி முடிவில் 4ல் வென்ற டில்லி அணி, ஹரியானாவை (3) முந்தியது. 8வது போட்டியில் ஹரியானா வெற்றி பெற, ஸ்கோர் 4-4 என ஆனது.
9வது, கடைசி போட்டியில் (62 கிலோ) ஹரியானாவின் இரினா கோலியாடென்கோ, டில்லியின் அஞ்லியை சந்தித்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற வீராங்கனை இரினா, 16-0 என வெற்றி பெற்றார்.
முடிவில் ஹரியானா 5-4 என 'திரில்' வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. ரூ. 1.5 கோடி பரிசு பெற்றது. டில்லி அணி ரூ. 75 லட்சம் கிடைத்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement