குறைதீர் நாள் கூட்டம் 1,255 மனுக்கள் குவிந்தன
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 1,255 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம், டி.ஆர்.ஓ., அரிதாஸ் தலைமையில் நடந்தது. முக்கிய அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றனர். மனுதாரர்கள் முன்னிலையில் விசாரித்து, அந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
இக்குறைதீர் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைபட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 1,255 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில், சப் கலெக்டர் முகுந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம்; முதல்வர் ஸ்டாலின்
-
வெளிநாடுகளுக்கு சென்று பரிசோதனை செய்து கருவின் பாலினத்தை வெளியிட்டால் நடவடிக்கை!
-
தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.7,611 கோடி ஒதுக்கீடு; பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி
-
துருக்கியில் அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை: பதற்றத்தைத் தணிக்க ஏற்பாடு
-
பிரதமர் மோடியின் தாய் பெயரில் தொடங்கப்பட்ட திட்டம்; இஸ்ரேலில் நடப்பட்ட 300 மரக்கன்றுகள்
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் : அடுத்த வாரம் வெளியாகிறது கூட்டறிக்கை!
Advertisement
Advertisement