பாலிடெக்னிக் கல்லுாரியில் லேப்டாப் வழங்கல்
பெருந்துறை: பெருந்துறை சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லுாரியில், மாணவ, மாணவியருக்கு, லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. கல்லுாரி தாளாளர் முத்துசாமி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார்.
முன்னாள் வருவாய் துறை அமைச்சரும், பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தோப்பு வெங்கடாசலம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார். இன்றைய மாறி வரும் தொழிற்சாலை தேவைகளுக்கு ஏற்பவும், உலக அளவில் போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் திறன் மேம்பாட்டுக்கு தமிழக அரசின் 'நான் முதல்வன்', 'இல்லம் தேடி கல்வி', 'தமிழ் புதல்வன்', 'புதுமைப்பெண்' திட்டங்களின், அளப்பரிய பங்கு குறித்து பேசினார்.
நிகழ்வில் பீனிக்ஸ் பயிற்சி நிறுவன நிறுவனர் சண்முகசுந்தரம், கல்லுாரி கல்வி இயக்குனர் அர்ஜுனன், அறக்கட்டளை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
போரக்ஸ்: ரூபாய்க்கு ஆதரவான அலை இல்லை
-
எல்.ஐ.சி., பங்குகளை விற்க மீண்டும் தயாராகும் அரசு
-
எஸ்.டி.டி., உயர்வால் அரசுக்கு ரூ.73,700 கோடி வருவாய்
-
என்.எப்.ஓ., : பஜாஜ் லைப் இன்சூரன்ஸ் புதிய 'இண்டெக்ஸ் பண்டு'
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு
-
தொழில் வளர்ச்சிக்கு அமோகமான வாய்ப்பு; அமெரிக்க வரி குறைப்பால் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்