பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடன் தொடர்பு: விசாரணைக்கு ஒத்துழைக்க முன்வந்தார் பில் கிளிண்டன்

4


நியூயார்க்: பாலியல் குற்றவாளியுடன் தொடர்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி ஆகியோர், அரசு குழு முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.


அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன். இரண்டு முறை அதிபர் பதவி வகித்தவர். எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியில் இன்னும் பெரும் செல்வாக்குடன் இருக்கிறார். இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன். வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். இந்த தம்பதிக்கு, பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடன் தொடர்பு இருப்பது, விசாரணை ஆவணங்கள், படங்கள், வீடியோக்கள் மூலம் தெரியவந்தது.

இந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், கிளிண்டன் மீது பார்லியை அவமதித்து விட்டதாக விவாதிக்கவும், ஓட்டெடுப்பு நடத்தவும் ஆளும் கட்சி தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே, தங்கள் முன்னிலையில் கிளிண்டன் தம்பதி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று, அமெரிக்க அரசின் கண்காணிப்புக்குழுவும் (ஓவர்சைட் கமிட்டி) தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.



இந்த குழுவின் அதிகாரிகள், கிளிண்டன் தம்பதியின் வக்கீல்களுடன் பேச்சு நடத்தினர். இதில், நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க கிளிண்டன் தம்பதி ஒப்புக்கொண்டனர்.பார்லியில் அசிங்கப்படுவதை தவிர்க்கவே, இவ்வாறு வாக்குமூலம் அளிப்பதற்கு கிளிண்டன் தம்பதி முன்வந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement