மணிப்பூர் முதல்வராகிறார் யம்நம் கெம்சந்த் சிங்
இம்பால்: மணிப்பூர் மாநில பாஜ எம்எல்ஏக்கள் குழு தலைவராக யம்நம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக மெய்டி - கூகி பிரிவினர் இடையே கடந்த2023 மே மாதம் முதல் மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களுக்கு புலம்பெயர்ந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜவை சேர்ந்த முதல்வர் பைரேன் சிங் பதவியில் இருந்து விலகினார். அங்கு தற்போது ஜனாதிபதி ஆட்சி அமலில்உள்ளது.
மணிப்பூரில் பதற்றம் தணிந்து மெல்ல அமைதி திரும்பி கொண்டு உள்ளது.
இந்நிலையில் பாஜ எம்எல்ஏக்கள் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் யம்நம் கெம்சந்த் சிங் எம்எல்ஏக்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து விரைவில் மணிப்பூர் மாநில முதல்வராக பதவியேற்க உள்ளார்.
கோர்ட் தீர்ப்பின் விளைவாகவே வன்முறை போராட்டம் துவங்கியது. இப்படிப்பட்ட தீர்ப்பு வெளிவரும் என முன்பே தெரிந்திருந்தால் அரசால் தடுத்திருக்க முடியும். பிரேன் சிங் பலிகடா ஆக்கப்பட்டார். இனிமேலாவது பின்விளைவுகளை கணித்து தீர்ப்புக்கள் அளிக்கப்பட வேண்டும்.மேலும்
-
மும்பை விமான நிலையத்தில் உரசிய விமானங்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு
-
கால்பந்து: இந்தியா வெற்றி
-
தீர்ப்பு வழங்குவதை இழுத்தடிக்க கூடாது: உயர் நீதிமன்றங்களுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
-
டெண்டர் முறைகேடில் யாரையும் பாதுகாக்கவில்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
-
மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம்; முதல்வர் ஸ்டாலின்
-
மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கோல்கட்டாவிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி