மும்பை விமான நிலையத்தில் உரசிய விமானங்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு

4

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களின் இறக்கை உரசிக் கொண்டது. இதில் கோவை கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை சேதம் அடைந்தது.


மும்பையில் இருந்து கோவைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயார் நிலையில், ஓடுதளத்தில் இருந்தது.அதேநேரத்தில் ஐதராபாத்தில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானம் ஓடுபாதையில் தரையிறங்கியது.


அப்போது அங்கு ஏற்கனவே கோவைக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தின் வலது பக்க இறக்கை மீது இண்டிகோ விமானத்தின் வலது பக்க இறக்கை உரசியது. இதில் கோவை செல்ல இருந்த விமானத்தின் இறக்கை லேசாக சேதம் அடைந்தது.


இதனையடுத்து பாதுகாப்பு கருதி இரண்டு விமானங்களும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தகவல் அறிந்த மும்பை டிஜிசிஏ அதிகாரிகள் விரைந்துள்ளனர்.


பாதுகாப்பு மற்றும் உரிய விசாரணைக்கு பிறகு விமானம் கிளம்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement