மடப்புரம் கோவில் காவலாளி மரண வழக்கு; சிபிஐ குற்றப்பத்திரிகையில் திடுக்
மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா கொடுத்த நகை திருட்டுப் புகார் உண்மையில்லை என்று நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு பேராசிரியை நிகிதா காரில் வந்தார். அவரது காரில் இருந்த நகை திருடு போனது. இது தொடர்பான போலீஸ் விசாரணையில் கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமார் இறந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கிறது.
இவ்வழக்கில் கைதான போலீஸ்காரர்கள் ஆனந்த் உள்பட நான்கு பேர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஸ்ரீமதி விசாரித்தார். இந்த வழக்கில் இன்று சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
அதில் கூறி இருப்பதாவது: நகை திருட்டு குறித்து நிகிதா அளித்த புகார் விசாரிக்கப்பட்டது. நகை திருட்டு எதுவும் நடக்கவில்லை என அது தொடர்பான வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இறந்த அஜித் குமாருக்கும் போலீஸ்காரர்களுக்கும் முன்விரோதம் எதுவும் இல்லை. போலீசார் வரம்பு மீறி உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி கூறியதாவது:
நிகிதா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, எதனால் நகை திருட்டு தொடர்பான புகார் முடித்து வைக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.
அஜித்குமார் மரண வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். அப்பாவியை இப்படி தாக்கியுள்ளனர் எனக் கூறி விசாரணையை பிப்ரவரி 16ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
நிகிதாவை காப்பாற்றுகிறோம் என்று ஜனநாயகத்தை கூட கொலை செய்துவிட்டனர் , ஊடக நண்பர்கள் புலனாய்வு செய்து , கவனிக்க காவல்துறையை நம்பவில்லை உண்மையை வெளியிட வேண்டும்
There should a strong punishment for this fake lady and police who
Made murder capital punishment to be given ideally
நிகிதா எங்கே...அம்மணிக்கு பெரிய அரசியல் பின்புலம் இருக்கும் போல தெரிகிறது.. எந்த சார் மாட்டுவார் தெரியவில்லை..மேலும்
-
மேற்கு வங்கத்தில் தனித்து களம் காண்கிறது காங்கிரஸ்
-
கிறிஸ்துவர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலத்தை பாதுகாக்க உத்தரவு
-
அமைச்சர் தியாகராஜன் பெயரை கூறி பல கோடி ரூபாய் மோசடி : முன்னாள் உதவியாளர் மனைவியுடன் கைது
-
ரஷ்யாவுடனான போரில் 55,000 வீரர்களை இழந்தோம்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல்
-
மத்திய அரசு எங்களை பேச அனுமதிக்கவில்லை: கார்கே
-
விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை : அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திட்டவட்டம்